வாசகர்கள் கருத்துகள் ( 64 )
குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு பாதிக்கப்படும் நிலையில் நீதிமன்றம் தாமாக முன்வந்து தலையிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது மக்கள் ஜனநாயக நன்மைக்கே
நீதிபதிகள் தங்களை மனிதர்களாக நினைத்து கொள்வதில்லை என்பதையும் ஒரு சாதாரண சட்டம் ஒழுங்குக்கு கட்டப்படும் ஒழுக்கமுள்ள ஏழை குடிமக்கள் எவரும் நீதிபதிபாலன அமைப்பின் மூலம் மட்டுமே தங்களுடைய வழக்குகளை பிணக்குகளை தீர்த்துக் கொள்ள பெரும்பாலும் விரும்புவதில்லை என்பதை நீதிபதிகள் உணர்வதே இல்லை. அதனால் தான் அவர்கள் ஓய்வு பெற்ற பின்பும் அந்த நீதியரசர் என்கிற பட்டத்தை விரும்புகிறார்கள்.
சாதியை ஒழிக்க துடிக்கும் நீதி அரசர்களும் அரசியல் வாதிகளும் மக்களின் பொருளாதார ஏற்ற தாழ்வை ஒழிக்க முன் வராததுக்கு ஏன்?? அடுத்த வேளை உணவுக்கு உழைப்பவனிடம் இருந்து வியாபாரம், முதலீடு, என்று பல காரணங்கள் கூறி 10, 100 ஆம் தலைமுறைக்கு சொத்து சேர்க்க அனுமதிப்பது ஏன்?? கடின, உயிரை பணயம் வைக்கும் 80 வயதினர் உழைப்புக்கு குறைந்த கூலி படிப்பு வேலை, முதலீடு குறைந்த உழைப்பு குறைந்த வயது அதிக கூலி??? இதுதான் நீதி சாதியை ஒழித்து மாறி மாறி திருமணம் செய்தால் பசி ஒழியுமா? வறுமை ஒழியுமா
கல்வி நிறுவனங்களின் பெயரில் இருக்கும் ஜாதியின் பெயரை நீக்க உத்திரவிடும் நீதிமன்ற நீதியரசர்களை ஒரு சாராசரி இந்திய குடிமகனின் கேள்வி? கல்வி, வேலை மற்றும் பிற சலுகைகள் ஜாதிப் பெயரில் வழங்கப்படுவதை விட தகுதிகள் அடிப்படையில் வழங்க உத்திரவிட்டால் அனைத்து மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்குமே ஐயா.
கல்வி நிருவணங்களின் பெயரில் உள்ள சாதியின் பெயரை நீக்கச் சொல்லும் நீதியரசர்களை தலை வணங்குகிறேன். அதே போல் கல்வி , வேலைவாய்ப்பு, மற்றும் பிற சலுகைகள் ஜாதிப் பெயரில் வழங்கப்டுவதையும் நீக்கினால் நல்லா இருக்கும்னு நினைக்கிறோம்..
வர வர நீதி மன்றங்களின் செயல்பாடுகள் சர்வாதிகார தனமா இருக்கு. போற போக்கை பார்த்தால், மத்திய அரசு, மாநில அரசுகளை கலைத்துவிட்டு ஆட்சியை இவர்கள் கையில் எடுத்துக்கொண்டு விடுவார்கள் போலிருக்கு.
அந்த கொடி கம்பங்கள் நீக்கம் மீதான உத்தரவு ஞாபகம் வந்தது
சாதி நலனுக்காக உருவாக்கப்படும் சங்கங்களை வேறு என்ன பெயரில் பதிவு செய்ய முடியும்? மேலும் இதேபோல, இஸ்லாமிய, கிறிஸ்தவ கல்வி நிறுவன பெயர்களை மாற்ற உத்தரவு போடுவார்களா?
Nothing will happen.
இனி இந்தியர் அனைவரும் ஒரே சாதியாய் வாழ முடிவெடுப்போம். ஆ. ராஜாவும் , ஹ. ராஜாவும் , துப்புரவு பணி செய்பவரும், சாமி சிலைகளை தொட்டு பூஜை செய்பவரும் ஒரே சாதி என்றும் எந்த ஆணும் எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் உறுதி ஏற்போர் ஆம் என்க.