உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக தொழில் வளர்ச்சிக்கு திட்டங்களை வாரி வழங்கும் மத்திய அரசு; கோட்டை விடும் பா.ஜ.,

தமிழக தொழில் வளர்ச்சிக்கு திட்டங்களை வாரி வழங்கும் மத்திய அரசு; கோட்டை விடும் பா.ஜ.,

சென்னை : 'தமிழக தொழில் வளர்ச்சிக்காக, தோல் அல்லாத காலணி துறை, ஜவுளித்துறை, கப்பல் கட்டும் தளங்கள்' என, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வழங்கினாலும், அவற்றை மக்களிடம் சேர்க்கும் பணியில், பா.ஜ., நிர்வாகிகள் கோட்டை விடுவது, அக்கட்சியினரிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பொருளாதாரத்தை, வரும் 2030க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அதாவது, 86 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, பொருளாதாரமாக மாற்ற, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, தொழில் முதலீடுகளை ஈர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக தொழில் துறையை மேம்படுத்த மாநில அரசு மட்டுமின்றி, மத்திய அரசும் பல்வேறு உதவிகளை வழங்குகிறது. ஜவுளித் துறையை மேம்படுத்த விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில், 'பி.எம்.மித்ரா' எனப்படும் பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்காவை, 1,894 கோடி ரூபாயில், 1,052 ஏக்கரில் அமைக்க, மத்திய ஜவுளி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு, 500 கோடி ரூபாய் மானியத்தை, ஜவுளி அமைச்சகம் வழங்க உள்ளது. தோல் அல்லாத காலணி துறையை சேர்ந்த பல நிறுவனங்கள், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், பல நுாறு கோடி ரூபாய் முதலீட்டில், ஆலைகளை அமைத்து வருகின்றன. இதற்கு தமிழக வழிகாட்டி நிறுவனம் மட்டுமின்றி, இந்திய தோல் பொருட்கள் கழகமும், வெளிநாட்டு நிறுவனங்களை சந்தித்து, முதலீட்டை ஈர்க்க பேச்சு நடத்துகிறது. மத்திய அரசின் கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம், 15,000 கோடி ரூபாய் முதலீட்டிலும், மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனம், 15,000 கோடி ரூபாய் முதலீட்டிலும் துாத்துக்குடியில் கப்பல் கட்டும் தளங்களை அமைக்க, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. ஆனால், மத்திய அரசு செய்யும் உதவிகள் எதையும், மக்களிடம் எடுத்து செல்ல பா.ஜ., தலைமை தவறுகிறது என்பது, அக்கட்சி தொண்டர்களின் ஆதங்கமாக உள்ளது.

இதுகுறித்து, பா.ஜ.,வினர் கூறியதாவது:

தமிழகத்திற்கு வரும் முதலீடுகளை குஜராத், உ.பி., என, பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு, மத்திய அரசு திசை திருப்புவதாக, தி.மு.க.,வினர் கூறுகின்றனர். இதில், ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை. தமிழக ஜவுளி, தோல் பொருட்கள், கப்பல், எலக்ட்ரானிக்ஸ் என, பல்வேறு தொழில் துறைகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவுகிறது. இதன் காரணமாகவே, பிரதமரின் ஜவுளி பூங்கா, கப்பல் கட்டும் தளங்கள் தமிழகத்திற்கு வந்துள்ளன. ஜவுளி பூங்காவில் மட்டும், ஒரு லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், 10,000 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன. இரு கப்பல் கட்டும் தளங்களால், 55,000 வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளன. இவை, தங்களின் முயற்சியால், தமிழகம் வந்துள்ளதாக, தி.மு.க.,வினர் கூறுகின்றனர். ஆனால், மத்திய அரசு வழங்கிய திட்டங்களை, தமிழக மக்களிடம் சேர்க்கும் பணியில், பா.ஜ.,வினர் கோட்டை விடுகின்றனர். சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஏழு மாதங்களே உள்ளன. எனவே, மத்திய அரசு வழங்கிய திட்டங்களின் விபரங்களை, பா.ஜ., நிர்வாகிகள் வீடுதோறும் சென்று, மக்களிடம் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Rajendra kumar
அக் 02, 2025 07:17

உண்மைதான். தொழில் வளர்ச்சி ஏற்படுவது நம் இந்திய அரசினால் தான். அதற்கு உதவுவது மட்டுமே மாநில அரசுகள். ஆனால் மாநில அரசுகள் தானே அனைத்தையும் செய்வது போல் நாடகமாடி, அறியாத பெருவாரி மக்களின் ஓட்டுகளை பெறுகின்றனர். இலவச அரிசி கொடுப்பது இந்திய அரசு என்பதே 90% மக்களுக்கு தெரியாது. அதிலும் திருடர்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில அரசு எல்லா பாஜக மத்திய அரசின் திட்டங்களுக்கும் வேறு பெயர் வைத்து தனதாக காட்டும் கீழ்த்தரமான ஆட்சி.


மோகனசுந்தரம்
அக் 01, 2025 13:01

அமைதியாக இருக்கிறார்கள்


Samuel
அக் 01, 2025 10:44

Perfect reply


MARUTHU PANDIAR
அக் 01, 2025 10:18

FOCUS... ...என்று ஒன்று சொல்வார்களே அது இங்கு பா.ஜ.வுக்கு இல்லவே இல்லை. அண்ணாமலையை பயன் படுத்திக்கொள்ள தவறி விட்டது பெரும் சோகம். இன்றைக்கு EPS தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று சொன்ன அண்ணாமலையை ஏன் அன்றே கன்வின்ஸ் செய்ய வில்லை? அவர் தானே நீங்கள் சொல்லும் இந்த டேட்டாக்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார்? அவரை தேர்தல் பரப்புரை செயலர் என்ற ஒரு பதவியை கொடுத்து, வேண்டிய உதவிகளை செய்து உடனே களத்தில் இறக்கினால் கொஞ்சம் தேறும். இதுவே தக்க தருணம். செய்வார்களா?


Indian
அக் 01, 2025 09:17

தமிழகத்தின் மீதும் , தமிழ் மக்களின் மீதும் மத்திய பா ஜா எப்போ ஓரவஞ்சனை நிறுத்துமோ அப்போ தான் அவங்களால தமிழகத்தில் கால் ஊன்ற முடியும் ...


Barakat Ali
அக் 01, 2025 09:45

முன்னேறிய மாநிலங்களுக்கு தனி கவனிப்பு தேவையில்லாதது .... .இடவொதுக்கீட்டின் நியாயம் இதற்கும் பொருந்தும் .....


MARUTHU PANDIAR
அக் 01, 2025 09:56

இவ்வளவு இதை ஒதுக்குவது ஓர வஞ்சனையா மிஸ்டர் 200?


Svs Yaadum oore
அக் 01, 2025 10:01

காவேரி தண்ணீர் விடாமல் மேக்தாது அணை கட்டியே தீருவோம் என்று ஒர வஞ்சனை செய்யும் காங்கிரஸ் இத்தாலி வடக்கனை சொல்றீங்களா ....


சாமானியன்
அக் 01, 2025 09:15

பாஜக அரசியல் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. தயவு செய்து வேற மாதிரி மோடிஜி சிந்தித்து தமிழக பாஜகவை காப்பாற்றவும். நயினார் ராஜினாமா செய்தால் நல்லது.


N Sasikumar Yadhav
அக் 01, 2025 09:08

தமிழக பாஜகவை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். விஞ்ஞானரீதியான ஊழல்வாத திராவிட கும்பலுங்களிடம் கள்ளத்தனமாக பழகி சுயலாபமடையும் களையெடுக்க வேண்டும். உயர்திரு ரங்கராஜ் பாண்டே அவர்களின் தகுதிக்கேற்ற பதவியை வழங்க வேண்டும் அண்ணாமலைக்கு துணையாக இருக்க வேண்டும் இருகுழல் துப்பாக்கி மாதிரி இருக்க வேண்டும்


மாபாதகன்
அக் 01, 2025 12:01

...பாஷையிலே சொல்லனும்னா ??


Rajah
அக் 01, 2025 08:43

அண்ணாமலை அவர்களின் தலைமையில் இதற்கான ஏற்பாடுகளைச் செய்தால் அவர் சிறப்பாகச் செயல்படுவார். மற்றவர்களை ஒன்றிப்பதை விட பாஜகவின் வளர்ச்சியில் அக்கறை கொள்வது அவசியம்.


VENKATASUBRAMANIAN
அக் 01, 2025 08:33

தமிழக பாஜகவினர் இன்னமும் திமுக விடம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் செய்ததை மக்களிடம் கொண்டு செல்ல தடுப்பதில்லை. ஆனால் திமுக ஸ்டிக்கர் ஒட்டி மக்களை கவர்கிறது. இன்னமும் பாஜக திருந்தவில்லை என்றால் அவ்வளவுதான். சும்மா மீடியா அரசியல் செய்வதில் எந்த உபயோகமும் இல்லை.


Svs Yaadum oore
அக் 01, 2025 07:52

திராவிடம் இங்கு வளர காரணம் கட்சி சாராத திராவிடர் கழகம் மற்றும் பல NGO என்ற பெயரில் செயல்படும் அந்நிய சக்திகள் ...திராவிடத்தின் அடித்தளம் அதுதான் ....முழு வேலையாக இதில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் ....நமது தமிழ் கலாச்சாரம் மதம் இனம் குலம் ஜாதி குல தெய்வம் மொழி குடும்பம் உறவுகள் என்று அனைத்தும் அழித்தது திராவிடம்.. இவை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்க கட்சி சாராத ஹிந்து மத இயக்கங்கள் ஹிந்து முன்னணி மற்ற இயக்கங்களுக்கு ஆதரவு தேவை ....இதை இங்குள்ள ப ஜா க போன்ற அரசியல் கட்சிகள் செய்ய முடியாது .....எட்டு கோடி மக்களில் நடிகனை பின் தொடர்வோர் ஒரு கோடி .....ஹிந்து இயக்கங்களை பின் தொடர்வோர் சொற்பமே ....அவர்களுக்கு ஆதரவு தாருங்கள் ...


Priyan Vadanad
அக் 01, 2025 08:13

சூது கவ்வும்.