உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலை 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

காலை 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், இன்று(அக்.,16) காலை 7 மணி வரை, சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில், மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியில், இன்று காலை 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ., வேகத்தில் நகர்கிறது

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 6 மணி நேரத்தில், மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்துள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னையில் இருந்து 440 கி.மீ., புதுச்சேரியில் இருந்து 460 கி.மீ., கிழக்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி