வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எட்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை தி நகர் உஸ்மான் சாலை, ரெங்கநாதன் தெரு பகுதியில் சுமார் 100 விதிமீறல் கட்டிடங்களை இடித்துத் தள்ள கோர்ட் உத்தரவு .பிறகு தீபாவளி வரை தள்ளிவைப்பு. இப்போ 7 தீபாவளிகள் கடந்துவிட்டன. 2 விபத்துகள் நடந்துவிட்டன. ஒரு கட்டிடம் கூட அகற்றப்படவில்லை. அசம்பாவிதம் ஏற்பட்டால் அப்பகுதிக்குள் ஆம்புலன்ஸ் தீயணைப்பு வண்டிகள் கூட செல்ல முடியாது. உறக்கம் தெளியட்டும்.
காலத்திற்கு ஒவ்வாத விதிமுறைகள். அதனை செயல் படுத்துவதில் முறையாக பணி செய்வது இல்லை. போதாக்குறைக்கு நிலத்தின் விலை ராக்கெட் வேகத்தில் ஏற்றம். இதுக்கு ஒரே தீர்வு சென்னை தலைநகராக இருக்க கூடாது. அப்படியே இருக்க வேண்டும்.என்றால் மகாபலிபுரம், திருபெரும்புதுர் சைடில் மாற்றினால் மட்டுமே ஓரளவு விடிவு. இல்லை என்றால் பெருகி வரும் கட்டுக்கடங்காத மக்கள் தொகை, எல்லோரும் சென்னைக்கு படை எடுப்பு போன்றவை சேர்ந்து மும்பை மாதிரி ஆகிவிடும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை. மும்பையிலிருந்து பெங்களூருக்கு வந்து அதுவும் இப்போது பெங்களூறும் டோடல் கான்கிரீட் காடு ஆக மாறி விட்டது.
சென்னையின் பழைய மேப் என்ன சொல்கிறது என்று பார்த்தால் நூற்றுக்கணக்கில் ஏரிகளை ஆக்கிரமித்து இருப்பது தெரியும்.
விதிகளுடன் கட்டுனா நீதிபதிகளுக்கே இடமிருக்காது.
சென்னை மட்டுமல்ல... புதுச்சேரியும் பின்பற்றுவதில்லை. மழை காலத்தில் புதுச்சேரியும் மிதக்கிறது.
அப்போ நீங்க ஒரு பொது நல வழக்கு போட்டு பாருங்கள்.