உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சியில் ரூ.290 கோடியில் நுாலகம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

திருச்சியில் ரூ.290 கோடியில் நுாலகம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை ; திருச்சியில், 290 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள, கருணாநிதி நுாலகம் மற்றும் அறிவுசார் மையத்துக்கு, தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே நேற்று அடிக்கல் நாட்டினார்.இந்த நுாலகம், 1.97 லட்சம் சதுர அடி பரப்பளவில், ஏழு தளங்களுடன், 235 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது.புத்தகங்கள் மற்றும் இ - புத்தகங்கள், 50 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட உள்ளன. அதற்கான தொழில்நுட்ப சாதனங்கள், 5 கோடி ரூபாயில் வாங்கப்பட உள்ளன.கட்டடத்தின் தரைதளத்தில், கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான படிப்பறைகள், காத்திருப்போர் அறை, வி.ஐ.பி., அறைகள் மற்றும் தகவல் அளிக்கும் வசதிகள் இருக்கும். அடுத்தடுத்த தளங்களில், நிகழ்ச்சி நடத்தும் அறை, 'வீடியோ கான்பரன்ஸ் அறை' போட்டித் தேர்வுகளுக்கான படிப்பறை, பாட வாரியான புத்தகங்கள், குழந்தைகளுக்கான திரையரங்கம், ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கூடங்கள் போன்ற வசதிகள் இடம்பெற உள்ளன.அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, வேலு, மகேஷ், தலைமை செயலர் முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்திரமோகன், தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Bhaskaran
மார் 22, 2025 17:37

சென்னை கிளை நூலகங்களில் புதிய நூல்கள் வாங்கி பல ஆண்டுகளாக ஆகிப்போச்சு நாங்க வீட்டுவரியில் நூலகவரியும் சேர்த்துக் காட்டுகிறோம் அந்த பணம் எவன் ஆட்டையை போடறானோ அவன் தன சொந்தங்களுடன் மீளா எரிநரகம் கண்டிப்பாக போவான்


வாய்மையே வெல்லும்
மார் 22, 2025 13:38

கருணாநிதியை தவிர தமிழ்நாட்டில் படித்தவர்களே இல்லையா


N Srinivasan
மார் 22, 2025 13:02

என்ன ஒரு சமத்துவம் என்ன ஒரு சமூக நீதி?


karupanasamy
மார் 22, 2025 07:25

நூலகத்தில் கண்டிப்பா எல்லா புத்தகமும் இருக்கவேண்டும்.


முக்கிய வீடியோ