டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை உயிரிழப்பு?
சென்னை:சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்த, 3 வயது குழந்தை ஹாசினிக்கு, சில நாட்களுக்கு முன் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையின் நிலைமை மோசமாகவே, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று இறந்தது.குழந்தை டெங்கு காய்ச்சலால் இறந்ததாக கூறப்படுகிறது.