உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தை டில்லியில் இருந்து ஆளும் நிலை வரக்கூடாது; முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தை டில்லியில் இருந்து ஆளும் நிலை வரக்கூடாது; முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கன்னியாகுமரி: 'தமிழகம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து ஆளப்படும். டில்லியில் இருந்து ஆளப்படும் நிலை வரக் கூடாது,' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கன்னியாகுமரியில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு அவர் பேசியதாவது; இந்திய துணைக்கண்டத்தின் துவக்கமான வள்ளுவர் முனை இருக்கும் குமரி மாவட்டத்திற்கு நான் வந்திருக்கிறேன். தனித்துவமான பண்பாடு, உணவு, இயற்கை அழகு நிறைந்திருக்கும் மாவட்டம். என்எஸ் கிருஷ்ணன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்ற தலைவர்களை தந்த மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். இஸ்ரோ அமைப்புக்கு எத்தனையோ தலைவர்களை தந்த மாவட்டம். 2004ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, வீடுகள் கட்டிக் கொடுத்தாலும், அரசு நிலம் என்று வகைப்படுத்தப்பட்டிருந்தது. சொந்த வீடுகளில் குடியிருக்கும் பயனாளிகளுக்கு வரன்முறைபடுத்தப்பட்ட பட்டா இன்று வழங்கப்படுகிறது. வானியக்குடியில் ரூ.180 கோடியில் புதிய துறைமுகம். ரூ.253 கோடி மதிப்பில் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது.

குமரிக்கு 6 புதிய அறிவிப்புகள்

கன்னியாகுமரி நகராட்சி குடிநீர் தேவையை நிறைவு செய்ய பழையாற்றில் இருந்து கூடுதல் நீர் வழங்க ரூ.28.25 கோடி மதிப்பில் புதிய திட்டம். முக்கடலும் சங்கமிக்கும் இந்தப் பகுதியில் ரூ.25 கோடி மதிப்பில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.ஏவிஎம் கால்வாய் ரூ.1.20 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்படும்களியக்காவிளை சாலையை மேம்படுத்த ரூ.9 கோடி ஒதுக்கீடு பழம்பெரும் தூய மரியன்னை பசிலிக்கா தேவாலயம் ரூ.2 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும் மீனவர் நலவாரியம் மூலம் மீனவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் கடலில் மாயமாகும் மீனவர்களின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் வரையில், மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

ஆளக்கூடாது

ஆட்சிப் பொறுப்பை என்னிடம் வழங்கிய மக்களுக்காக என் சக்தியை மீறி உழைத்துக் கொண்டிருக்கிறேன். தேர்தல் சமயத்தில் மட்டும் சிலர் உங்களை வட்டமடிப்பார்கள். பிரதமர் மோடி இன்னும் அடிக்கடி தமிழகம் வருவார். அவர் வருவதை நினைத்து கூட்டணி கட்சிகளே பயப்படுகிறார்கள். ஏனெனில் பிரதமர் எவ்வளவு முறை இங்கு வருகிறாரோ, அந்த அளவுக்கான வித்தியாசத்தில் என்டிஏ கூட்டணி தோல்வியை அடையும். தமிழகம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து ஆளப்படும். டில்லியில் இருந்து ஆளப்படும் நிலை வரக் கூடாது. இதைத் தீர்மானிக்கக் கூடிய தேர்தல் தான் வருகிறது.

பாஜவினருக்கு கேள்வி

பாஜவினரிடம் நேரடியாக கேட்கிறேன், எப்போது தான் வன்முறையை விட்டு விட்டு வளர்ச்சியைப் பற்றி பேசுவீங்க. பிரிவினைவாதத்தையும், வெறுப்பையும் விதைக்கும் முயற்சியை நிறுத்திவிட்டு, தமிழகத்திற்கு நல்ல விஷயம் பற்றி பேசப் போறீங்க. தமிழகத்தை தொடர்ந்து குறை சொல்லி பேசுகிறீர்கள். அதற்கு உங்களுக்கு தகுதி இருக்கா? தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி, நம்முடைய கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா?இவங்களுக்கு கிடைத்த சரியான ஆள் தான் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ். நாட்டு மக்களுக்கு ரூ.15 லட்சம் தருவோம் என்று வடை சுட்ட மாதிரி, இபிஎஸ் வாய்க்கு வந்த மாதிரி வடை சுட்டு வருகிறார். இதை மக்கள் நம்ப தயாராக இல்லை, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 84 )

sankaranarayanan
மார் 01, 2026 22:13

இவ்வளவு கெட்ட எண்ணம் ஒரு முதல்வருக்கு வேண்டவே வேண்டாம் தமிழகத்தை யாரும் கோபாலபுரத்திலிருந்தும் இனி ஆள முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு பேச வேண்டும் இந்த வீராப்பு வசனம் எல்லாம் சினிமாவிற்கே உகந்தது நடைமுறையில் தீங்குகள்தான் விளைவிக்கும்


Matt P
பிப் 27, 2026 04:28

கவிமணி தேசிக விநாயகன் பிள்ளையை தலைவர் என்கிறார் கவிமணி ஒரு தமிழ் புலவர் என்று இவருக்கு தெரியலை.


Matt P
பிப் 27, 2026 04:26

கவிமணி தேசிகம் விநாயகம் பிள்ளையை தலைவர் என்று சொல்லிவிட்டார். அவர் ஒரு தமிழ் புலவர் என்று இவருக்கு தெரியாதோ.


Matt P
பிப் 27, 2026 04:25

என் எஸ் கிருஷ்ணன் கவிமணி பேரை சொன்னவர் ஜீவா பேரை அமுக்கிட்டார்....ஜீவா நல்லகண்னு போன்ற நல்லவர்களுக்கும் நம்மக்கு என்ன தொடர்பு. நம்ம அப்பாவின் வழியே தனி வழி என்று இருக்கோ. குமரி மாவட்டத்தை காமராஜர் மாவட்டம் என்று கூட சொல்லலாம். விருதுநகர் அவர் வூர் என்றாலும். படுத்து கொண்டே ஜெயிப்பேன் என்றார் அந்த மாவட்டத்து மக்களிடம் வைத்த நம்பிக்கையில் ஜெயித்தும் காட்டினார்.


Matt P
பிப் 27, 2026 04:20

தமிழ்நாட்டில் ஆளுநர் இருக்க கூடாது. முடிஞ்ச அளவுக்கு எங்களை அமுக்க தடையாயிருக்கும் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு தேவையில்லை. அதுக்கு தான் மாநில சுயாட்சி தேவை தேவை என்று அடித்து சொல்கிறோம். ஆளுநர் தேவையில்லை மத்திய அரசு தேவையில்லை . இந்தியாவே தேவை இல்லை ...என்ன தான் தேவை ? . இன்னுமா இந்த ஆளை நம்புறீங்க. எப்படி தான் இப்படிப்பட்டவர்களை நம்புகிறார்களோ ...மக்கள். செந்திலுக்கு பதவி பொன் முடிக்கு பதவி. நேரு போய் திருப்பி வந்தாலும் பதவி.... மாநில சுயாட்சி கிடைச்சிட்டா யாரும் சிறைக்கு போகும் பிரச்னையும் இருக்காது. பங்களாதேஸ் பாகிஸ்தான் மக்களுக்கு குடியுரிமை கிடைத்தாலும் கிடைக்கும் இவங்க ஆட்சியில் டெல்லி மந்திரிசபையும் தான் எல்லா மாநிலத்தையும் ஆள்கிறது. எப்படிப்பா மாறன் ராசா எல்லோரும் டெல்லியில் மந்திரியா இருந்தாங்க. அவங்க மந்திரியா இருக்கும்போது மட்டும் இனித்ததா?


M Ramachandran
பிப் 26, 2026 20:08

அப்போ அரேபியர்கள் ஆளலாமா முதல்வரெ.


தத்வமசி
பிப் 25, 2026 22:07

நீங்க நன்றாக ஆண்டால் மக்கள் ஏன் மாற்றி சிந்திக்கப் போகிறார்கள் ? பிஜேபி வந்துவிடும் என்று கூறி கூறி விளம்பரம் செய்தாச்சு. பிஜேபி உள்ளே வந்தாச்சு. திராவிடங்கள் கிழித்த கிழிக்கு அவர்களும் தான் ஆளட்டுமே. என்னவாகி விடப் போகிறது. அதையும் தான் பார்த்து விடுவோமே. இந்த முறை அதிமுக-பிஜேபி தான். மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.


R.MURALIKRISHNAN
பிப் 25, 2026 21:28

கோவை மக்களை கேவலமாக பேசிய கொடுங்கோலன் ஆட்சி ஒழிய வேண்டும்.


சிவகுமார்
பிப் 25, 2026 21:21

நெல்லை எங்கள் எல்லை குமரி எமக்குத் தொல்லை - சொன்னவர் அப்பாவின் அப்பா! இஸ்ரோ விற்கு பல விஞ்ஞானிகளை தந்த மாவட்டம் என்பதால், இவர் என்ன சொல்ல வருகிறார்? மாணவ மாணவிகள் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதற்கு என்ன வழிவகைகள் செய்துள்ளார் என்பது அவருக்கே வெளிச்சம். ஆகக் கூடி, புலம்பல் கூடியிருப்பது தெளிவு!!


தமிழ்வேள்
பிப் 25, 2026 21:18

இது பச்சை பிரிவினை வாத பேச்சு.. அண்ணாதுரை கிளப்பி விட்ட திராவிட நாடு/ தனித் தமிழ்நாடு கோரிக்கையை இவர் வேறு வார்த்தைகளில் சுற்றி வளைத்து கூறுகிறார்.. இந்த பேச்சுக்காகவே இவரது கட்சியை தடைசெய்து ஆட்சியைக் கலைக்கலாம்.... எப்படியோ, இவரது பேச்சால் இங்கு தேர்தல் தள்ளி வைப்பு, ராஷ்டிரபதி ஆட்சி இரண்டும் வந்தால் மிகவும் நல்லதே....