உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊழல் கோப்புகளை நிச்சயமாக முதல்வர் விஜய் வெளியிடுவார்; அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி

ஊழல் கோப்புகளை நிச்சயமாக முதல்வர் விஜய் வெளியிடுவார்; அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி

சென்னை: ஊழல் கோப்புகளை நிச்சயமாக முதல்வர் விஜய் வெளியிடுவார் என சட்டசபையில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்தார்.சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசியதாவது: ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் ஆதாரம் இல்லாமல் பல குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். வரலாற்றில் இல்லாத வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விட, ஆளும் கட்சி உறுப்பினர்கள், அமைச்சரின் பேச்சுக்களெல்லாம் அவைக்குறிப்பில் நீக்கப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9l5e77nk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எதிர்க்கட்சி ஒரு கேள்வி கேட்டால் அமைச்சர்கள் ஆச்சரியப்படும் வகையில் பதிலெல்லாம் கொடுக்கிறார்கள். இப்போது பாடலெல்லாம் பாடுகிறார்கள். இது சட்டசபையா? வேறு நிகழ்ச்சியா? என தெரியவில்லை. சில தினங்களுக்கு முன் அவையில் பேசிய முதல்வர், தனது டேபிளில் 3 கோப்புகள் இருப்பதாகவும், அதனை திறந்து பார்க்க வைத்துவிட வேண்டாம் என எதிர்க்கட்சிகளை நோக்கி குற்றம்சாட்டியுள்ளார். அந்த கோப்புகளை தயவு செய்து திறந்து பாருங்கள். அதன் மீது நடவடிக்கை எடுங்கள். எதற்காக பயப்படுகிறீர்கள். காலம் தாழ்த்துகிறீர்கள், இதையே 3 மாதமாக சொல்கிறீர்கள். ஜோசியக்காரர் சொன்னால்தான் அந்த கோப்புகளை திறப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? இவ்வாறு உதயநிதி பேசினார்.தொடர்ந்து பதிலளித்த நிர்மல்குமார், 'ஜோசியம் என்று பேசுகிறார்கள்; ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்ட கதையெல்லாம் எங்களுக்கும் தெரியும்; எப்போது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அப்போது சரியான நேரத்தில் எடுப்போம்' என்று காரசாரமாகத் தெரிவித்தார். அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது: தமிழக சட்டசபையில் நடப்பது எல்லாம் மக்களுக்கு தெரிய வேண்டும்; யார் எந்த தொகுதி சார்பாக கேட்கிறார்கள், அதற்கு பதில் சொல்வது தெரிய வேண்டும் என்பதற்காக தான் நேரலை தருகிறோம்.நேரலை என்பது வெறும் ஆளும்கட்சிக்கு சாதகமாக இல்லாமல், முழுமையான நேரலை என்பது தவெக ஆட்சியில் தான் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். கோப்புகளை திறப்பதில் முதல்வருக்கு தயக்கமில்லை. ஊழல் கோப்புகளை நிச்சயமாக முதல்வர் விஜய் வெளியிடுவார். எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றுவார். இவ்வாறு ராஜ்மோகன் கூறினார்.

நடவடிக்கை

சட்டசபையில் அவை குறிப்பிலிருந்து நீக்கியதை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்இன்றைய சட்டசபை கூட்டத்தொடர் நிகழ்வுகள்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலின் நேரலை ஒளிபரப்பு வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

கனோஜ் ஆங்ரே
ஆக 21, 2026 18:26

ராஜ்மோகன் சார்... வடிவேல் காமெடி வசனத்தில் சொல்லணும்னா “அடச் சீ... விழுந்தே விட்டானய்யா..?”...ங்ற மாதிரி... அமித்ஷாவை பார்த்த உடனே... லஞ்ச் பாக்ஸ் எடுத்துட்டு போய் தன் கையாலே கொடுக்குறதும், கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கப் போகிறேன்...னு டிராமா போட்டு.. அவரும் இப்போ வராதீங்க...ன்னு சொன்னார். நேற்றைய மாநாட்டில், பக்கத்திலேயே கர்நாடக முதலமைச்சர் அமைந்திருக்கும் நிலையிலேயே அவரிடம் “மேகதாது” அணை கட்டக் கூடாது..ன்னும் பேசலை... அட்லீஸ்ட், முதலமைச்சர் தனது உரையில், மத்திய உள்துறை அமைச்சர் முன்னிலையில், காவிரி நதிநீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும்னு பேசமட்டும் தெரியுது.. ஆனா... “மேகதாது” அணையை கட்டக் கூடாது...ன்னு பேசவே இல்லை... அவ்வளவு பயம்... அட்லீஸ்ட் “மேகதாது”...ங்ற பேரைக்கூட உச்சரிக்கலை...? அதுமட்டுமா தொகுதி மறுசீரமைப்பில் சட்டப்பேரவையில் இவர் கொண்டு வந்த தீர்மானம் வேறு... அமித்ஷா முன்னாடி பேசிய பேச்சு வேறு... இப்படி ஏறுக்குமாறாய் பேசுவதிலிருந்தே புரிகிறது... “அமித்ஷா...ன்னா பயம், பயம்...னா அது அமித்ஷா”...ங்றது. அந்த பயம் இருக்கட்டும்... அதனாலதான் சொன்னேன் “அடச் சீ... படுத்தே விட்டானய்யா”...


kannan
ஆக 21, 2026 17:05

CM must open the files and take appropriate action asap. Don't understand why it is getting delayed


shanmukchand
ஆக 21, 2026 13:27

waiting for highcommand permission.


Nesan
ஆக 21, 2026 12:52

அப்ப ஏன், ஓபன் பண்ண வைத்திராதிங்கனு கேக்கிறார்?. பயமா, பாசம்மா, நேசம்மா???. உள்குத்து வேலையா?


நீலமேகம், கோவை.
ஆக 21, 2026 12:10

வெளியிட ஏன் தயக்கம் என்பதுதான் கேள்வி.அதற்கு சரியான விளக்கம் இல்லை.


ديفيد رافائيل
ஆக 21, 2026 12:09

வலுவான ஆதாரத்தோட இருக்குறப்ப உடனே வெளியிட என்ன பிரச்சினை சொல்லுங்க


Govi
ஆக 21, 2026 12:02

மத்திய ஏஜென்சிய பாத்தாச்சு ஒன்னும் பண்ண முடில பைல்ஸ் ஒன்று இரண்டு வந்து முடியல. இதுல நீ வேற கிச்சு கிச்சு மூட்டர மாதிரி


Anand
ஆக 21, 2026 12:01

அட போங்கய்யா, எவ்வளவு நாளைக்கு தான் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுகிறேன் என ஆளாளுக்கு கைப்புள்ளே கணக்கா உருட்டுவீர்கள்.


s vinayak
ஆக 21, 2026 11:49

வெளியிட என்ன சினிமாவா? நடவடிக்கை எடுத்து நிரூபித்து தண்டனையும் பெற்றுத்தரணும்பா. அதுக்கு தானே வாக்களிச்சோம். சும்மா ரீல்விடக்கூடாது.


duruvasar
ஆக 21, 2026 11:35

ஜோசப் விஜய் பாம்பாட்டி வித்தை காட்டுவதை நிறுத்திவிட்டு பாம்பை வெளிய விடணும். இல்லையென்றால் கீறிய ஓட விட்டுடனும். . இப்படி சுத்தி இருக்றவங்கள வெச்சிக்கிட்டு கைதட்ட வைக்கக்கூடாது.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை