உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிக தொகுதி வேண்டும்; ஆட்சியில் பங்கும் தரணும்; தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் நெருக்கடி

அதிக தொகுதி வேண்டும்; ஆட்சியில் பங்கும் தரணும்; தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் நெருக்கடி

'அடுத்த ஜென்மத்திலும் தி.மு.க., கூட்டணியில் ஓட்டை விழாது' என, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறினாலும், அவரது கட்சியின் மற்ற நிர்வாகிகள், கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி போன்ற விஷயங்களை பேசி, தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், 25 தொகுதி களில் காங்., போட்டியிட்டு, 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வரும் 2026 தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் 45 தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் கேட்க வேண்டும் என, கட்சியின் டில்லி மேலிடத்தில், தமிழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2s65hjdj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

விஜய் கட்சி

கடந்த மாதம், தமிழக காங்., தலைமை அலுவலகமான, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த கூட்டத்தில், கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம், 'தொகுதிகளை தி.மு.க., குறைத்து கொடுத்தால், விஜய் கட்சியுடன் கூட்டணி பேச வேண்டும்' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் வெளிப்படையாகவே தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து, அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி போன்ற விஷயங்களை மையமாக வைத்து, தமிழக காங்கிரசார் பேசி வருகின்றனர். இது தி.மு.க.,வுக்கும் கூட்டணிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால் உஷாரான செல்வப்பெருந்தகை, 'இந்த ஜென்மம் மட்டுமல்ல; அடுத்த ஜென்மத்திலும் தி.மு.க., கூட்டணியில் ஓட்டை விழாது' எனக்கூறி, சமாளித்து வருகிறார்.அவர் தி.மு.க.,வுக்கு ஆதரவான திசையில் சென்றாலும், மற்ற நிர்வாகிகள் அதற்கு மாறான பாதையில் செல்கின்றனர். சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் கூறுகையில், 'தமிழகத்தில், கடந்த தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்டோம். இந்த முறை நிச்சயமாக அதிக தொகுதிகளை கேட்போம். சட்டசபை தேர்தலுக்கு தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சு நடத்தும்போது அமைச்சரவையில் பங்கு குறித்தும் பேசுவோம்' என்றார்.

அதிகாரப்பகிர்வு

தமிழக காங்., துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: 'தமிழகத்தில், கூட்டணி ஆட்சி அமைப்போம்' என, அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிஉள்ளார். 'எங்கள் கட்சியுடன் கூட்டணி சேருபவர்களுக்கு ஆட்சியில் அதிகாரப்பகிர்வு அளிக்கப்படும்' என, த.வெ.க., தலைவர் விஜய் கூறியிருக்கிறார்.இந்நிலையில், தி.மு.க., கூட்டணியில், அதிக தொகுதிகளை, மா. கம்யூ., - வி.சி., - ம.தி.மு.க., போன்ற கட்சிகள் கேட்கும்போது, தேசிய கட்சியான காங்கிரசும் அதிக தொகுதிகளை எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றத்தான் கட்சி நடத்துகிறோம்.ஆட்சியில் பங்கு மட்டும் போதாது; துணை முதல்வர் பதவியும் சேர்த்து தந்தால் மட்டுமே, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக தேர்தல் பணிகளில் ஈடுபடுவர். அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி குறித்து, டில்லி மேலிடத்தில் நாங்கள் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.நமது நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Dharma
ஜூன் 22, 2025 07:01

போன தடவையை விட குறைத்துதான் கிடைக்கும்.


Thomas
ஜூன் 21, 2025 16:59

உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா ங்குற நிலை காங்கிரஸ் க்கும், மதிமுக வுக்கும் வருவது உறுதி.


Thamaraiselvan Sk
ஜூன் 21, 2025 17:16

தி முகவிற்கும் தலைவலிதான்


Bhaskaran
ஜூன் 21, 2025 14:15

காங்கிரஸ் தமிழ்நாட்டில் இல்லை திமுகவின் கதர் சட்டை அணியும் காவி கூட்டணியில் பண்ணையார் கட்சியும்தான் இருக்கு


Karthik Madeshwaran
ஜூன் 21, 2025 12:48

காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறதா என்று தெரியவில்லை... அதுக்குள்ள அலப்பறை வேற. இன்னும் என்ன என்ன பாக்கணுமோ.. கால கொடுமை


Ramesh Sargam
ஜூன் 21, 2025 12:16

அதான் இந்த ஜென்மத்திலேயே ஓட்டை விழுந்துவிட்டதே.


Ramona
ஜூன் 21, 2025 10:16

அந்த யாருமே கண்டுக்க மாட்டங்க , ஆனா அந்த கட்சி காரர்கள் இப்படி அடிக்கடி ஜோக்க அடிப்பாங்க


Pandianpillai Pandi
ஜூன் 21, 2025 10:09

எப்படியாவது தி மு க கூட்டணியை கலைக்க வேண்டும் என்பதில் முனைப்பை காட்டுபவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். வெற்றிக்கனி கையில் இருக்கும்போது எட்டிக்காய்க்கு ஆசைப்படுவார்களா ? 10வருடங்களில் அதிமுக தமிழ்நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுசென்றதை சரிசெய்யும் விதமாக தி மு க கூட்டணி பேராதரவை தந்திருக்கிறார்கள் . இந்த கூட்டணியும் வெற்றிப்பாதையில் மக்களை வழிநடத்திச்செல்கிறது. சுதந்திரமாக செயல்படுகிறது மக்கள் பிரச்சனைகளை பேசுகிறது அதிருப்தி தெரிவித்தும் அதனை சரிசெய்துக்கொள்கிறது . எந்த கோட்பாடுகளும் இல்லாத தங்களின் சர்க்கஸ் வித்தைகளை கொண்டு மக்களை ஏமாற்றி வரும் கூட்டத்தை மக்கள் அடையாளம் கண்டுகொண்டனர். அவர்களுக்கு இந்த தேர்தல் செம்மட்ட்டி அடியாக இருக்கும். அணைத்து தொகுதிகளிலும் தி மு க கூட்டணி வெற்றி பெரும் . வரும் தேர்தல் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்.


Kjp
ஜூன் 21, 2025 10:20

பாவம் ரொம்ப போலந்து போய் எழுதி இருக்கிறார்.கள நிலவரம் குறித்து இவருக்கு ஒன்றும் தெரிய வில்லை.உங்கள் எண்ணம் போல் நடக்க வாய்ப்பு இல்லை நண்பரே.


ஆரூர் ரங்
ஜூன் 21, 2025 10:28

1980 தேர்தல் போலவே இப்போது திமுக காங்கிரசுக்கு பாதி சீட் களைத் தந்து காமராஜர் ஆட்சியை அமைக்க உதவலாமே.


ராதாகிருஷ்ணன்,எட்டிவயல்
ஜூன் 21, 2025 10:30

ஊருக்கு ஒரு மகன் இருந்தா போதும் அந்த ஊர் உருப்படாது என்பதற்கு உன் கருத்தே சாட்சி...


Mettai* Tamil
ஜூன் 21, 2025 11:10

உங்க டயலாக் நல்லாத்தான் இருக்கு .ஆனா 60 வருசமா ஒரு தேசிய கட்சி ஊழலுக்கு அடிமையாகவே இருக்கணும் என்ற உங்க பேராசை நிறைவேறாது ..காமராஜர் ஆன்மா ஊழல் கட்சியான உங்களை என்றுமே மன்னிக்காது ...


Kumar Kumzi
ஜூன் 21, 2025 11:53

அடேங்கப்பா ஓசிகோட்டருக்கே இப்பிடி கூவுறானே கொத்தடிமை ஹாஹாஹா...


N Sasikumar Yadhav
ஜூன் 21, 2025 12:59

ஆஇஅதிமுக விட்டு சென்ற ஐந்து லட்ச கோடி கடனை நான்கு ஆண்டுகளில் ஏறக்குறைய 10 லட்ச கோடி கடனாக மாற்றி விஞ்ஞானரீதியாக ஆட்டய போட்டிருக்கிறது திராவிட மாடல்


rama adhavan
ஜூன் 21, 2025 16:17

ஆமாம், வெற்றிக் கூட்டணி 2011, 2016 தேர்தல்களில் கருணாநிதி இருந்தும் ஏன் தோற்றது? ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை ஜம்பம் சாயவில்லையே? எடப்பாடி சரியில்லை. பணத்தையும் வாரி இறைத்தீர்கள். அதனால் ஜெயித்தீர்கள்.


Chandru
ஜூன் 21, 2025 10:05

Paavam CM Stalin


SIVA
ஜூன் 21, 2025 10:02

கோபம் வர்ற காமெடி பண்ணாதீங்க


Oviya Vijay
ஜூன் 21, 2025 09:47

தமிழக மாநில காங்கிரஸ் கட்சியினர் நெருக்கடி கொடுப்பதாக கூறுவதெல்லாம் திமுகவுக்கு ஒரு பொருட்டே கிடையாது... ஏனெனில் அது ஒரு தேசியக் கட்சி... தலைமை என்ன கூறுகிறதோ அதை அப்படியே செவிமடுக்க வேண்டுமேயன்றி அதற்கு வேறு ஒரு அதிகாரமும் கிடையாது... தலைமையில் தான் ராகுல் பாய் இருக்கிறாரே... அவர் ஸ்டாலினை நண்பர் என்று தானே அழைக்கின்றார்... இது போதாதென்று சென்டர் மீடியன் தாண்டிச் சென்று ஸ்வீட் பாக்ஸ் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து வேறு நட்பை வளர்கிறார்... நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி 40க்கு 40 அள்ளியதை மேலிடம் மறக்குமா என்ன... இன்றைக்கு இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் மத்தியில் ஆட்சியமைக்க திமுகவின் தயவு தேவை என்பதை நன்கு உணர்ந்தவர்... ஆகையால் தேர்தல் சமயத்தில் திமுகவுடன் சுமூக உறவை பேணுவார்களேயன்றி அவர்களுக்குள் சச்சரவு வர வாய்ப்பேயில்லை... 1996ல் தேசியத் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படாமல் வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்து ஜெயித்துக் காட்டிய மூப்பனார் போல் திறன் மிக்க தலைவர்கள் யாரும் தற்போது தமிழக காங்கிரஸில் இல்லை... தற்போதைய மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையே தான் ஒழிய அவர் ஒன்றும் செல்வாக்கு பெருந்தகை அல்ல...


ஜெயக்குமார்,கப்பலூர் மதுரை மாவட்டம்
ஜூன் 21, 2025 10:36

அப்பத்துக்கு மதம் மாறிய ஓவிய கோஷ்டிகளுக்கு இப்பவே தங்கள் ரொட்டி எஜமானரான திமுக தோல்வியடைந்து விடும் என்கிற செய்தி சொல்லொன்னா துயரத்தை ஏற்படுத்துகிறது என்ன செய்ய விதியை யாரால் வெல்ல முடியும்


முக்கிய வீடியோ