உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்னை கொலை செய்ய சதி!: பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி பகீர்

என்னை கொலை செய்ய சதி!: பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி பகீர்

சென்னை: போலீஸ் ஆட்சேர்ப்பில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததால், தன்னை கொல்ல சதி நடந்திருப்பதாக, தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி கல்பனா நாயக், குற்றம்சாட்டி உள்ளார்.இதுகுறித்து டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில், கல்பனா நாயக் கூறியுள்ளதாவது: ஜூலை 29, 2024 அன்று, சென்னையில் எனது அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும். சப்-இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆட்சேர்ப்பில் நடந்த முறைகேடுகளை, நான் வெளிக்கொண்டு வந்த சில நாட்களில், இந்த தீவிபத்து நடந்தது. சென்னை ஐகோர்ட் உத்தரவை மீறி நடந்த இந்த ஆட்சேர்ப்பை நான் தடுத்ததால், தமிழக அரசுக்கு ஏற்படவிருந்த அவமானம் தடுக்கப்பட்டது. ஆனால் அது, என் உயிருக்கு ஆபத்தையும், அரசு சொத்துக்களுக்கு சேதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 29 அன்று, சென்னையில் உள்ள எனது அறைக்கு சென்ற போது, அங்கு தீவிபத்து நடந்திருந்தது. எரிந்த என் நாற்காலியை கண்டபோது, அதிர்ச்சி அடைந்தேன். நான் சிறிது நேரத்திற்கு முன்பு அறைக்கு வந்திருந்தால், என் உயிரை இழந்திருப்பேன். ஏசி.,யில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக நடந்த இந்த தீவிபத்து, என் அலுவலகத்தை அழித்து விட்டது. விபத்து நடந்த ஒரு நாளிலேயே, போலீஸ் ஆட்சேர்ப்பு பட்டியல், எனது ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்டது. மூத்த அதிகாரியின் உயிருக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவினால், மற்ற போலீசாரின் நிலைமையை சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.சம்பவம் நடந்து 15 நாட்களுக்குப்பிறகு, அதாவது, ஆகஸ்ட் 15, 2024 அன்று, இப்புகாரை, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு, கல்பனா நாயக் அனுப்பி உள்ளார். புகார் குறித்து விரிவான விசாரணைக்கு, டி.ஜி.பி.,யும் உத்தரவிட்டார். ஆனால், 6 மாதங்களுக்கு பிறகும், விசாரணை முடிவுகள் வெளிவரவில்லை. இருப்பினும், தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புவதாக, கல்பனா நாயக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

SAMANIYAN
பிப் 03, 2025 14:51

வேணுன்னா வேற மாநிலத்துக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு ஓடிரு ..ஆட்சி மாறின அப்பறம் சொல்லி அனுப்புவோம் ..


subramanian
பிப் 03, 2025 12:37

திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. திமுக வை தடை செய்ய வேண்டும்.


SIVA
பிப் 03, 2025 11:57

நாங்க எல்லாம் அப்பவெய் அப்படி ......


எஸ் எஸ்
பிப் 03, 2025 11:45

ஈரோட்டில் திமுக வுக்கு விழும் ஓட்டுகளை காட்டிலும் நோட்டா வுக்கு விழும் ஓட்டுகள் அதிகம் விழுந்தால் இந்த ஆட்சிக்கு பயம் வரும்


ஆரூர் ரங்
பிப் 03, 2025 11:37

இடஒதுக்கீட்டை மீறி நியமனங்கள் செய்யப்பட்டதை அனுமதிக்க மறுத்திருக்கிறார் ADGP. அதற்காக அவரது அறைக்குத் தீவைத்து விட்டு மின் கசிவு என சமாளித்தனர். அதே நேரத்தில் இவர் அறியாமலேயே பணி நியமனங்களை அறிவித்துவிட்டனராம். அதாவது கப்பத்துக்கு ஏற்ற சமூக அநீதி நியமனம்? . இதுதான் திராவிஷ மாடல்.


Oru Indiyan
பிப் 03, 2025 11:36

இதற்கும் ஏதாவது முட்டு கொடுப்பாய்ங்க. உண்மையிலே மிக மிக கொடூரமான நிகழ்ச்சி. இதை மறைத்த சங்கர் ஜீவால் பதவியை விட்டு ஓட வேண்டும்.


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 03, 2025 11:35

ஆக மொத்தம், காவல் துறையில் கட்சிக்காரங்களை முறைகேடாக சேர்க்கறதுக்கு இந்த அம்மணி இடைஞ்சலா இருந்திருக்காங்கன்னு தெரியறது. இந்தம்மாவுக்கு கொலை மிரட்டல் விட்ட "யாரு அந்த சார்" என்பவரைப்பற்றி தோண்டி துருவி ஆராய ஆரம்பிச்சா அண்ணா பல்கலை யாரு அந்த சார் காணாம போயிடுவார். சமீப காலமா காவல் துறையில் "கடமை கண்ணியம் கட்டுப்பாடு" அபரிதமா வளர்ச்சி அடைந்திருப்பதைப்பற்றி தினமலர் பிரத்யேக செய்தியே வெளியிட்டது. எனக்கென்னவோ கடந்த நான்கு ஆண்டுகளில் நம்ம இரும்புக்கை மாயாவியின் கீழ் செயல்படும் காவல் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரையுமே பதவி நீக்கம் செய்யவேண்டி வந்தாலும் வரலாம்ன்னு தோணுது.


Rajarajan
பிப் 03, 2025 11:06

இவரது தந்தை தீர்க்கதரிசி. அன்றே திராவிட ஆட்சியை சரியாக கணித்தார். எப்படி? ஒய்யார கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருப்பது ஈறும் பேணுமாம்.


Anand
பிப் 03, 2025 10:56

திராவிட மாடல் இப்படித்தான் இருக்கும்...


நரேந்திர பாரதி
பிப் 03, 2025 10:25

இரும்புக்கை மாயாவி இன்னைக்கு என்ன செய்யப் போறாரோன்னு ஒரே பயமாயிருக்கு


N.Purushothaman
பிப் 03, 2025 11:40

சர்வாதிகாரியாக மாற நல்ல நாள் பாத்துக்கினு இருக்காரு ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை