உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மகன் மீது பலாத்கார பழி சுமத்தி மோசடி: பெற்றோரை குறிவைக்கும் சைபர் குற்றவாளிகள்

 மகன் மீது பலாத்கார பழி சுமத்தி மோசடி: பெற்றோரை குறிவைக்கும் சைபர் குற்றவாளிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சி.பி.ஐ., அதிகாரிகள் போல தொடர்பு கொள்ளும் சைபர் குற்றவாளிகள், அப்பாவி பெற்றோரை மிரட்டி பணம் பறிக்க புதிய முயற்சியில் ஈடுபடுவதாக, போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: 'ஆன்லைன்' வாயிலாக பணம் மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகள், சி.பி.ஐ., அதிகாரிகள் போல, 'நீங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பிய பார்சலில் போதை பொருள் உள்ளது. 'உங்களை, 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்துள்ளோம். சிறையில் அடைக்காமல் இருக்க, நாங்கள் தெரிவிக்கும் வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்ப வேண்டும்' என, மோசடி செய்து வருகின்றனர். இந்த யுக்தியை பயன்படுத்தி, நடப்பு ஆண்டில் தமிழக மக்களிடம் இருந்து, 1,100 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். இதற்கு, மக்களின் அறியாமை, பதற்றம், செய்யாத குற்றத்திற்கு சிறையில் அடைக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் போன்றவையே காரணம். தற்போது, பள்ளிகள், கல்லுாரிகளுக்கு சென்று இருக்கும் மகன்கள் வீடு திரும்புவதற்குள், அவர்களின் பெற்றோரை தொடர்பு கொள்கின்றனர். பதற்றத்தில் பேசும் அவர்களிடமே, மகன் களின் பெயரையும் தெரிந்து கொள்கின்றனர். 'உங்கள் மகன் தன்னுடன் படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டான். அவனை கைது செய்துள்ளோம்' என, மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பாவி பெற்றோரை குறி வைத்து, இத்தகைய மோசடி நடக்கிறது. இதுபோன்ற மிரட்டல்களுக்கு பயப்பட வேண்டாம். போலீஸ் உதவி எண் 100க்கும், சைபர் குற்றங்கள் தொடர்பாக, 1930 என்ற எண்ணுக்கும் புகார் அளிக்கலாம். www.cybercrime.gov.inஎன்ற இணையளத்திலும் புகார் பதிவு செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Padmasridharan
நவ 21, 2025 17:18

"இதற்கு, மக்களின் அறியாமை, பதற்றம், செய்யாத குற்றத்திற்கு சிறையில் அடைக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் போன்றவையே காரணம்" இதை வைத்துதானே பல காவலர்களும் மக்களை பொது இடங்களில் அதட்டி, மிரட்டியடித்து, மொபைலை பிடுங்கி பணத்தை அதிகார பிச்சை எடுக்கின்றனர். இவர்கள் வித்திட்டதுதான் இது போன்ற குற்றங்களுக்கும் காரணம் சாமி.


visu
நவ 13, 2025 09:50

இது போன்று ஒவ்வொன்றாக சொல்லி கொண்டிருக்க முடியாது இன்று மகன் மேல் புகார் நாளை கணவன் மேல் புகார் ஏன்று விளக்கவா முடியும் இது போன்ற அழைப்புகளை வந்தால் அவர்களை கடுமையான தண்டனை வழங்கலாம்


SUBBU,MADURAI
நவ 13, 2025 08:47

India is set to get its own official version of caller identification soon. TRAI has approved a proposal from the DoT to introduce a new system that displays the real name of the caller on the receivers mobile screen. This will help curb spam and fraud calls by scammers.


கணேஷ்
நவ 13, 2025 08:30

பயமே வாணாம். .


R Dhasarathan
நவ 13, 2025 07:49

நன்றி தினமலர் ஆசிரியருக்கு. இப்போது தான் 1090க்கு பேசினோம் எங்களின் மகளின் வெளிநாட்டு படிக்க என்று வந்த அழைப்பு பற்றி. அவர்கள் மிக தெளிவாக என்ன செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அரசாங்கத்திற்கும் நன்றிகள் பல.


சிட்டுக்குருவி
நவ 13, 2025 04:56

மக்களுக்கு ஒரு ஆலோசனை .உங்கள் போனில் உள்ள போன் புத்தகத்தில் Phone Book நீங்கள் யாருக்கெல்லாம் போன் செய்வீர்களோ அவர்களுடைய போன் நம்பர்களையும் யாரெல்ல்லாம் உங்களை கூப்பிடும் வாய்ப்பிருக்கின்றதோ அவர்கள் நம்பர்களையும் ,உற்றார் உறவினர் ,ஆம்புலன்ஸ் ,மருத்துவமனைகள் ,டாக்டர்கள் ,அவசர காவல்துறை உதவி எண்கள் போன்றவைகளை பதிவு செய்துகொள்ளுங்கள் .அங்கிருந்து வரும் போன்களுக்குமட்டும் கால் வரும்போது அவர்களுடைய பெயரும் வரும் ,அறிந்து பதிலளியுங்கள் .பெயருடன் வராத ,அல்லது தெரியாத பெயருடன்வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் .switch ஆப் செய்யுங்கள் .காவல்துறையோ ,அல்லது எந்தவித குற்றவியல் தடுப்பு துறையோ எப்போதும் போனில் உங்களை கூப்பிடமாட்டார்கள் ,அப்படி கூப்பிடுவதும் சட்டத்திற்கு புறம்பானது .சைபர் அர்ரெஸ்ட் /e அர்ரெஸ்ட் என்றெல்லாம் சட்டத்தில் கிடையாது .உங்களை கைதுசெய்யவேண்டுமென்றால் உங்களிடம் நேரில்வந்து எதற்காக உங்களை கைதுசெய்யவிரும்புகிறார்கள் என்று விளக்கத்தோடுதான் கைதுசெய்வார்கள் .பெரும்பாலும் கைதுக்குவரும்போது கோர்ட் வாரண்டும் கொண்டுவருவார்கள் .அப்படி சந்தேகமிருக்கும்நேரத்தில் உடனே நீங்கள் 100 என்ற காவல்துறைக்கட்டுப்பாட்டிற்கு போன் செய்தால் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள் .ஏமாறாதே ஏமாறாதே


புதிய வீடியோ