உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசு அனுமதியில் தாமதம்; தமிழகத்தில் அகழாய்வு பணி பாதிப்பு

மத்திய அரசு அனுமதியில் தாமதம்; தமிழகத்தில் அகழாய்வு பணி பாதிப்பு

சென்னை: மத்திய தொல்லியல் துறையின் ஆலோசனை வாரியமான, 'கபா' ஆலோசனைக் கூட்டம் தாமதம் ஆவதால், தமிழக அகழாய்வுக்கான அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்திய பல்கலைகள், கல்வி நிறு வனங்கள், மாநில அரசுகள் ஆகியவற்றை இணைத்து, 'கபா' எனும் தொல்லியல் ஆய்வு வாரியத்தை, மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய தொல்லியல் துறையின் கீழ் செயல்படும் இந்த வாரியம், நாட்டில் அகழாய்வுகள் உள்ளிட்ட தொல்லியல் ஆய்வுகள் செய்வதையும், கண்காணிப்பதையும் இலக்காகக் கொண்டுள்ளது. அந்த வகையில், இதன் 38வது ஆலோசனைக் கூட்டம், கடந்த ஏப்ரலில், டில்லியில் மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தலைமையில் நடந்தது. அதில், மாநிலங்களில் நடக்க உள்ள அகழாய்வுகள் குறித்து, அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில், சிவகங்கை மாவட்டம் கீழடி, துாத்துக்குடி மாவட்டம் பட்டணமருதுார், தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லுார், நாகப்பட்டினத்தில் உள்ள புத்தவிகாரம், கடலுார் மாவட்டம் மணிக்கொல்லை, கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆதிச்சனுார், கோவை மாவட்டம் வெள்ளளூர், சேலம் மாவட்டம் தெலுங்கனுார் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்ய, தொல்லியல் துறை ஏற்கனவே அனுமதி கோரி உள்ளது. அதற்கான அனுமதி கிடைத்தால், வரும் ஜனவரியில் அகழாய்வுகள் துவங்கும். அதன்பின், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அதற்கான நிதி பெறுவதில் சிக்கல் ஏற்படும். அதனால், 'கபா'வின் கூட்டம், கடந்த மாதத்தின் இறுதியிலோ, இந்த மாதத்தின் துவக்கத்திலோ நடக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது; இதுவரை நடக்கவில்லை. அதனால், ஜனவரியில் அகழாய்வை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தொல்லியல் துறையினர் கூறுகையில், 'தமிழக அரசு, அடுத்தாண்டு எட்டு இடங்களில் அகழாய்வு செய்ய அனுமதி அளித்து, நிதியையும் ஒதுக்க தயாராக உள்ளது. மத்திய அரசு, அடுத்த மாதம் முதல் வாரத்துக்குள் அனுமதி அளித்தால், மழைக்காலம் முடிந்ததும் அகழாய்வை துவக்க வசதியாக இருக்கும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Murugan
நவ 11, 2025 10:44

கீழடி பள்ளி சந்தை சமணர் வாழ்ந்த இடமாக இருக்கலாம்


SUBBU,MADURAI
நவ 11, 2025 08:53

இந்த திமுக திராவிடமாடல் அரசு கீழடிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போல் ஆதிச்சநல்லூர் போன்ற மற்ற இடங்களுக்கு கொடுப்பதில்லை ஏன்? அதற்கான காரணம் என்ன? விளக்கம் இதோ: பெருங்கற்காலம் என்றழைக்கப்படும் கி.மு 1000 வது ஆண்டுகளிலிலும் அதற்கு பின்பும் ஆதிச்சநல்லூர் வரலாறு நமக்கு கிடைக்கிறது. ஆதிச்சநல்லூரில் கிடைத்த பல விஷயங்கள் இந்துமத கடவுள்களை சார்ந்ததாக இருக்கிறது. அங்கு இறந்தவர்களை (முதுமக்கள் தாழி) பெரிய மண்பாணையில் வைத்து புதைப்பார்கள் அப்படி புதைக்கும் தருவாயில் உயிருடன் இருந்தபோது அவர்கள் பயன்படுத்திய பொருட்களான அணிகலன்கள், ஈட்டி, போன்றவைகளையும் அவர்களுடன் சேர்த்து அந்த மண் பானையில் வைத்து புதைத்து விடுவார்கள். அப்படி புதைத்தவைகளில் இருந்துதான் பல வடிவங்களில் ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன. அவ்வாறு கிடைத்ததில் மிக முக்கியமானது ஒரு பெண் வடிவிலான சின்ன சிலையாகும்.அது அவர்கள் வழிபட்ட பெண் தெய்வத்தின் சிலையாகும்.அப்படியென்றால் அந்தக் காலத்திலேயே நம்முடைய முன்னோர்களுக்கு பெண் தெய்வ வழிபாடு இருந்திருக்கிறது. மேலும் அங்கிருந்த பானை ஓடுகளில் நெல் மணிகள், முதலை, யானை, மாடு போன்ற சித்திரங்கள் வரையப் பட்டிருந்தது. இதனால் அவர்கள் அப்போதே விவசாயம் செய்து வாழ்ந்தனர் என்பது உறுதியாகிறது. அப்படி வாழ்ந்த சமூகத்தினரிடம் கடவுள் வழிபாடு இருந்துள்ளது என கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இப்போது நாம் கீழடிக்கு வருவோம் கீழடியின் வரலாறு கிமு 200 ஆண்டுகள் என்று ASI (Archaeological Survey of India) கொடுத்த தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இங்குள்ள திராவிட கும்பல்கள் அது கிமு 800 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கூறுகிறார்கள். இதிலிருந்து இந்த கார்டுவெல் திராவிட கும்பல்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் கீழடியில் கடவுள் சார்ந்த பொருட்கள் எதுவும் இல்லை என்று அது உண்மைதான் ஆனால் இந்த திராவிட கட்சிகள் பரந்து விரிந்த தமிழகத்தில் உள்ள நிலப்பரப்பில் கீழடி என்ற மிகச் சிறிய பகுதியில் கிடைத்த அடையாள சின்னத்தை காட்டி அதையே சாக்காக வைத்து தமிழர்கள் கலாச்சாரத்தில் கடவுள் என்கிற விஷயமே கிடையாது என்று கூறி அதை பல வழிகளில் பரப்புரை செய்கிறார்கள். ஆனால் நம் சங்ககால இலக்கித்தில் (கிமு 300 முதல் கிபி 300 வரை) முன்னோர் வழிபாடு மற்றும் கடவுள்களை வழிபடுவற்கன்கென்றே தனி பாடல்கள் உள்ளன அதை அந்த மக்கள் பாடிய பின்பே தங்கள் அன்றாட வேலைகளை தொடங்குவார்கள். அதற்கடுத்து (கிபி 300 முதல் கிபி 900 வரை)தமிழகத்தில் பல்லவர்களின் ஆட்சி பல்லவர்களும் இந்து கடவுள்களை வழிபட்டதற்கான மிகப்பெரிய சரித்திர சான்றுகள் மாமல்லபுரத்தில் கற் சிலைகளின் வடிவில் கொட்டிக் கிடக்கின்றன. அவர்களுக்கு பின் சோழர்களின் காலம் (கி.பி 900 முதல் கி.பி 1300 வரை) அவர்களின் ஆட்சிதான் தமிழர்களின் பொற்கால ஆட்சியாகும். சோழர்கள்தான் இந்து மதங்களான சைவம், வைணவம் என இரண்டையும் உலகம் முழுவதும் பரப்பினார்கள். மேலும் அவர்கள்தான் தங்களின் இந்துமதக் கடவுள்களை பல கோவில்கள் கட்டியும், கல்வெட்டுகள், மற்றும் ஓலைச்சுவடிகள் மூலம் ஆவணங்களாக பதிவுசெய்து விட்டு சென்றுள்ளனர். சோழர்களைப் போன்றே கோவில்களை கட்டி கடவுளை வழிபடுவதில் சற்றும் சளைக்காதவர்கள் எங்கள் ஊர் பாண்டிய மன்னர்கள்... இதுபோல மேலும் நம் தமிழக இந்து மன்னர்கள் கடவுள்களுக்கு ஆற்றிய தொண்டுகளை சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் நம் தினமலரில் இடம்தான் பத்தாது! இதுதான் தமிழர்களின் உண்மையான வரலாறு மேலும் கீழடிக்கும் ஆதிச்சநல்லூரிலுக்கும் இடையேயான தூரம் வெறும் 180 KM கள்தான். ஆனால் இவர்கள் ஆதிச்சநல்லூரை மறைத்து வலுக்கட்டாயமாக கீழடியை மட்டும் நம்மிடம் திணிக்கிறார்கள். அதை உறுதிப்படுத்துவதற்காக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் போன்ற ஊர்களில் நடக்கும் புத்தக கண்காட்சிகளில் கீழடியில் கிடைத்த பானை ஓடுகள், சங்கு, சிப்பி போன்றவைகளை மட்டும் காட்டி விட்டு ஆதிச்சநல்லூரில் கிடைத்த கடவுள் உருவ சிலை மற்றும் இறைவழிபாட்டு பொருட்களை காட்டாமல் இருட்டடிப்பு செய்து விடுகிறார்கள். கீழடிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆதிச்சநல்லூருக்கு கொடுப்பதில்லை. இத்தனைக்கும் 100 ஏக்கருக்கு மேல் உள்ள நிலப்பரப்பு கொண்டது ஆதிச்சநல்லூர் ஆனால் அங்கு காவலுக்கு இருப்பது ஒரே ஒரு காவலாளிதான். கடைசியாக இதிலிருந்து தெரிவது என்னவென்றால் கீழடியில் கடவுள் சார்ந்து எதுவும் இல்லை ஆகவே தமிழர்களுக்கு கடவுள் வழிபாடு கிடையாது தமிழர்கள் இந்துக்கள் அல்ல எனவே இதுதான் தமிழர்களின் அடையாளம் என்று தமிழக மக்களை நம்ப வைக்க இங்குள்ள கார்டுவெல் திராவிட கும்பல்கள் படாதபாடு பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதை தமிழக மக்களும் நம்பிக் கொண்டு இருப்பதுதான் வேதனையளிக்கும் விஷயம்.


Sridhar
நவ 11, 2025 13:42

கீழடி நாகரீகம் கிமு 800 என்று வைத்துக்கொண்டாலும்கூட, தமிழின் வரலாறு மற்றும் சங்க இலக்கியங்கள் எல்லாம் அவ்வளவு பழமையானதுதானா? அப்போ கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கும் முன்பானது தமிழ்குடினு சொல்றதெல்லாம் பொய்யா கோபால்? திருட்டு கும்பல் தமிழையும் தமிழர்கள் புராதனத்தையும் இதற்க்கு மேலும் இழிவுபடுத்தமுடியுமா? சரி ஆதிச்சநல்லூர் மற்றும் இதர இடங்களை பற்றிய தகவல்கள் திருட்டு கும்பலும் அதன் அரசாங்கமும் விளம்பரப்படுத்தாவிட்டாலென்ன? நல்ல எண்ணம் கொண்ட தமிழ் நாகரிக ஆர்வலர்கள் அதை எடுத்து செய்யலாமே? தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்டுபிடிப்புகள் ஆவணப்படுத்தப்பட்டு வலயத்தளங்களில் இருக்கவேண்டுமே? இல்லாவிட்டாலும் கேட்டு வாங்கி அதை பிரபலப்படுத்தலாமே? ஏன் திருட்டு கும்பல் உழட்டும் கீழடி புராணத்தை கேட்டுகொண்டுருக்கவேண்டும்?


Svs Yaadum oore
நவ 11, 2025 06:32

விடியல் மதம் மாற்றும் கும்பல் அவனுங்க விருப்பத்திற்கு தமிழன் வரலாற்றை மாற்றி எழுத ஏன் அனுமதிக்கனும் ??....கீழடி தாய் மடி என்று இந்த மதம் மாற்றும் கும்பல்தான் தமிழை வளர்த்த மாதிரி கூவுவானுங்க .....கீழடியில் மத அடையாளங்கள் இல்லை ...தமிழனுக்கு மதம் கிடையாது ...தமிழன் ஹிந்து கிடையாது என்று இந்த மதம் மாற்றும் கும்பல் வரலாறு எழுதும் ....இதுக்கு அனுமதி வேண்டுமாம் ..


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 11, 2025 06:16

தமிழன் ஆதிகாலம் தொட்டே பகுத்தறிவுவாதியாக இருந்தான் .... ஹிந்து பழக்க வழக்கங்கள், வழிபாடுகள் அவனிடம் அப்போது இல்லை ...... ஆரியர்கள்தான் தமிழன் மீது ஹிந்து மதத்தைத் திணித்தனர் ...... இப்படியெல்லாம் புருடா விட இந்த ஆய்வு கண்டிப்பா தேவை ...... அதுக்கு எங்களுக்கு ஒன்றியம் உதவி செஞ்சே ஆகணும் ......


SUBBU,MADURAI
நவ 11, 2025 08:56

தர்மராஜ் அவர்களின் கருத்து நிதர்சனம். அருமை!


Raa
நவ 11, 2025 15:42

இங்க வாங்கப்பா எல்லாரும். ஒருவர் டைம் மெஷின்ல பயணித்து வந்துள்ளார்.. வந்து கதை கேட்டுகோங்க... தமிழன் ஹிந்து பழக்க வழக்கங்கள் உடன் வாழதான் என்றுதான் நான் பயணித்த டைம் மெஷின் சொல்லியது. பூமிக்கு கீழ நோண்டிதான் நம் பண்டைய நாகரீகம் நிரூபிக்கணும்னு இல்ல பூமிக்கு மேலே உள்ள கோயில்களை ஒழுங்கா வைத்தாலே நிரூபித்து விடலாமே.. எதனை கோயில்களை இடிபாட்டுக்கு உள்ளாக்கி அரசியல் நடக்கிறது. மட மக்களே முழித்துக்கொள்ளுங்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 11, 2025 06:14

எங்க ஆட்சியில மக்களுக்கு ஒரு குறையும் இல்ல .... பாலாறும் தேனாறும் ஓடி மக்கள் சுபீட்சமா இருக்காங்க ..... அதனாலதான் இப்படி ஜாலியா தோண்டுறோம் .....


ஆரூர் ரங்
நவ 11, 2025 06:12

மழைக் காலங்களில் அகழாய்வு? ஒண்ணும் தேறாது.


Nathansamwi
நவ 11, 2025 05:17

இதுக்கெல்லாம் ஜி வாய திறக்க மாட்டார் ...தமிழ்நாடு வந்தா மட்டும் திருக்குறள் சொல்லி எஸ்கேப் ஆகிடுவார் ....


தமிழ் மைந்தன்
நவ 11, 2025 07:23

பதில் சொன்னாளும் உங்க ஆளுக்கு புரியவா போகிறது அப்படியே புரிந்தாலும் பதில் எழுதிகொடுக்கும் ஆள் இன்றைக்கு லீவு இப்ப நான் சொல்வது இதுவே திராவிட மாடல் ஆட்சி


Raa
நவ 11, 2025 15:45

அவருக்கு தெரிந்திருக்கும் கொடுக்கிற காசில் நடக்கும் ஊழல்கள்... வரிப்பணத்தை எதுக்கு வீணடிக்கணும் என்று இருந்திருப்பார்


naranam
நவ 11, 2025 04:41

இது இப்போ ரொம்ப முக்கியம்!


renga rajan
நவ 11, 2025 04:32

இது தேவை இல்லை அகழ் ஆய்வு பண்ணி என்ன பண்ண போறாங்க எல்லாம் வேஸ்ட்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை