உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 24 மணி நேரத்தில் வலுவடையும் தாழ்வு; டிச.,10 முதல் கனமழைக்கு வாய்ப்பு!

24 மணி நேரத்தில் வலுவடையும் தாழ்வு; டிச.,10 முதல் கனமழைக்கு வாய்ப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும். தமிழகத்தில் டிச.,10ம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும். மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடையும். டிச.,11ம் தேதி தமிழகம்- இலங்கை கடற்பகுதிகளை நோக்கி நகரும். தமிழகத்தில் டிச.,10ம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று (டிச.,08) முதல் டிச.,9ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக் கூடும்.மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் டிசம்பர் 10ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 11ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 3 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் 12ம் தேதி!

டிசம்பர் 12ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தமிழன்
டிச 08, 2024 20:22

வெல்கம் புயலே... இப்போ வரும் இந்த புயல், தமிழகத்தின் திமுக ஆட்சியை கலைத்து விட்டு போகும் படி பலமாக வரட்டும். இந்திய அரசியல் வரலாற்றில் இருந்து திமுக ஒழிய என்றால் இன்னொரு புயல் கூட வரட்டும் என மக்கள் தயாராக இருக்கிறார்கள். புயலை விட கொடுமையானது திமுக ஆட்சி என மக்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.


MARI KUMAR
டிச 08, 2024 15:59

இப்ப தான் ஒரு புயல் வந்துட்டு போயிருக்கு.. அடுத்து ஒரு புயலா


சமீபத்திய செய்தி