உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூகுள் மேப்பால் சேற்றில் சிக்கிய மாற்றுத்திறனாளி அய்யப்ப பக்தர்

கூகுள் மேப்பால் சேற்றில் சிக்கிய மாற்றுத்திறனாளி அய்யப்ப பக்தர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பட்டிவீரன்பட்டி : கர்நாடக மாநிலம், மங்களூருவைச் சேர்ந்தவர் பரசுராமர், 25. மாற்றுத்திறனாளியான இவர், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு, மூன்று சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கூகுள் மேப்பை பயன்படுத்தி வந்த பரசுராமர், தேசிய நெடுஞ்சாலையை தவறவிட்டு, எம்.வாடிபட்டி கோபாலசமுத்திரம் கண்மாய் செல்லும் ரோட்டில், நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு சென்றார். அங்கு பாதையில் இருந்த சேற்றில் சிக்கி வாகனத்தை மீட்க முடியாமல் போராடினார். பின், கர்நாடகா போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள், திண்டுக்கல் மாவட்ட கட்டுப்பாட்டு அறையை அணுகினர். தொடர்ந்து, வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் சிலை மணி, எஸ்.ஐ., ஷேக் அப்துல்லா ஆகியோர் அதிகாலை 2:00 மணிக்கு நேரில் சென்று, சேற்றில் சிக்கிய பரசுராமரை வாகனத்துடன் மீட்டு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வாய்மையே வெல்லும்
நவ 19, 2024 07:02

ஸ்வாமியே சரணம். என்னய்யனை கும்பிட்டு .. இந்த பதிவு ...சேற்றில் சிக்கிய மாற்று திறனாளியை காப்பாற்றிய நல்லுள்ளங்களுக்கு என்னுடைய சமூகம் தலைவணங்குகிறது. வாழ்க மனிதநேயம். வளர்ப்போம் தேசப்பற்றை யாராக இருந்தாலும் தேகத்தால் கஷ்டப்படுவோரை நம்மால் முடிந்த அளவுக்கு அவரை கைதூக்கிவிட்டு காப்போம். நாம் அப்படி செய்தால், நம்மோடய சந்ததிகள் நன்றாக இருப்பார்கள் .. வந்தே மாதரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை