உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழனிசாமி குடும்பத்தினரால் அ.தி.மு.க.,வில் இடையூறு

பழனிசாமி குடும்பத்தினரால் அ.தி.மு.க.,வில் இடையூறு

அ.தி.மு.க., தொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் 250 கடிதம் அளித்துள்ளேன். அனைத்தும் மிக முக்கியமானவை. தற்போது இருப்பது, உண்மையான அ.தி.மு.க., இல்லை என்பதை எல்லாரும் தெரிந்து கொள்வீர்கள். அ.தி.மு.க.,வில் பழனிசாமியின் மகன் கட்சி விஷயங்களில் தலையிடுகிறார்; மைத்துனர், 'டிவி'யில் வருகிறார்; மாவட்டத்திலும், தொகுதியிலும் தலையிடுகிறார். மருமகனும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். அவர்களின் செயல்பாடுகள், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறாக இருக்கின்றன. எங்கே இருந்து கொண்டு, யார் யாரெல்லாம் இயக்குகின்றனர் என்பது வெளிப்படையாக தெரிந்ததுதான். ஆனால், பழனிசாமிக்கு மட்டும் தெரியாதா? என்னை பா.ஜ.,வோ; வேறு எந்த இயக்கமோ இயக்க முடியாது. பழனிசாமியுடன் இருப்பவர்கள், என்னோடு பேசிக்கொண்டு உள்ளனர். யார் யார் என்பது அவர்களுக்கும், எனக்கும் மட்டும்தான் தெரியும். பொறுத்திருந்து பாருங்கள்; நல்லதே நடக்கும். அ.தி.மு.க., கரைந்து கொண்டு வருகிறது. - செங்கோட்டையன் முன்னாள் அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kumar
நவ 06, 2025 09:20

இவரை பொறுப்படுத்தவேண்டாம்


VENKATASUBRAMANIAN
நவ 06, 2025 08:18

பாவம் இவர் கைப்பாவையாக செயல்படுகிறார். திமுகவிற்கு சாதகமாக நடந்து கொள்கிறார்கள்.


முக்கிய வீடியோ