உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மே 3ல் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசனை

மே 3ல் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசனை

சென்னை: தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மே 3ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் தலைமையில் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் மே 3ம் தேதி காலை 10.30 மணிக்கு கூட்டம் நடக்கும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. தமிழக அமைச்சரவை மாற்றப்பட்ட நிலையில், இந்த கூட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஏப் 28, 2025 20:34

கட்சியில் ஆக்கப்பணிகள் கூட இருக்கிறதா? மக்களை, தமிழகத்தை அழிக்கும் பணிகள்தான் திமுக ஆட்சியில் பார்க்கிறோம். ஆக்கப்பணியாம், ஆக்கப்பணி...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை