உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கஷ்டத்தில் தி.மு.க., அரசு; அமைச்சர் நேரு வருத்தம்

கஷ்டத்தில் தி.மு.க., அரசு; அமைச்சர் நேரு வருத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: “தி.மு.க., அரசுக்கு, இப்போது உள்ள கஷ்டம் போல், எந்த காலத்திலும் கஷ்டம் வந்ததில்லை,” என்று அமைச்சர் நேரு பேசினார்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள் விழா மற்றும் தமிழக அரசின் நான்கு ஆண்டு கால சாதனை விளக்கக் கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க., முதன்மைச் செயலரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான நேரு பேசியதாவது:இனிமேல் பா.ஜ.,வுடன் சேரவே மாட்டோம் என்ற அ.தி.மு.க.,வினர், மீண்டும் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளனர். அவர்கள் மீதான வழக்குகளை முடித்துக் கொள்வதற்காக, கட்சியை அடகு வைத்துள்ளனர். தமிழகத்தில் புதிதாக ஒருவர் வந்துள்ளார். அவர் வரும் போதே, தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்கின்றனர்.இப்போது உள்ள கஷ்டம் போல் எந்த காலத்திலும் தி.மு.க., அரசுக்கு கஷ்டம் வந்ததில்லை. ஒருபுறம், கடந்தகால அ.தி.மு.க.,வின் நிர்வாகம் சரி இல்லாததால், நிதிநிலை மிகவும் மோசமாக உள்ளது. மற்றொரு புறம் கொரோனா பாதிப்பை தடுக்க, இரண்டு ஆண்டுகள் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.மத்திய அரசும், தமிழகத்துக்கு தர வேண்டிய எந்த நிதியையும் வழங்காமல் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. 100 நாள் வேலைக்கும், புதிய பள்ளிகள் கட்டுவதற்கும், ஜல் ஜீவன் திட்டத்திற்கும் தர வேண்டிய, 3,500 கோடி ரூபாயை தராமல் நிறுத்தி விட்டனர். இந்த ஆண்டுக்கான 4,000 கோடி ரூபாயையும் தரவில்லை. மத்திய அரசிடம் இருந்து, ஒவ்வொரு முறையும் போராடி போராடித்தான் நிதியைப் பெற வேண்டிய நிலை இருக்கிறது.கடுமையான நிதி நெருக்கடியிலும், மற்ற மாநிலங்களை விட மிகச் சிறப்பாக, தமிழக முதல்வர் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி காட்டி உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

Jack
ஜூலை 17, 2025 11:17

முப்பது வருடத்திற்கு முன் தில்லை நகரில் வாடகை வீட்டுக்கு வந்ததிலிருந்து இன்றைய தேதிக்கு இவர் குடும்பம் செய்யும் தொழில்கள் சொத்துக்களை பற்றி பேச வேண்டும்


panneer selvam
ஜூலை 15, 2025 16:35

Nehru ji , your statement is totally contradictory to Stalin ji claim that Tamilnadu is the first in everything , even world is envying on Dravidian Model ruling . So do not worry and stay calm with the money amazed during last four years .


panneer selvam
ஜூலை 15, 2025 16:33

If Centre finance commission not central government denies financial obligation to states , Tamilnadu government has the right to file a case in Supreme Court . So far no case has been filed against finance commission . New Education policy insists for education in mother tongue where in Tamilnadu , more people are studying in CBSE syllabus in English medium with Hindi as second language and French as third language . Whose mistake , Shall we punish people for it . Central government did not ask Tamils like you to join CBSE course . Do not blindly hate Modi ji concealing your failure


Venkat.M
ஜூலை 15, 2025 15:33

கடந்த 4 ஆண்டுகளில் என்ன திட்டம் நிறைவேற்றப்பட்டது.மகளிர் உரிமை தொகையும் விடியல் பயணமும் தவிர வேறு ஏதும் இல்லை.பலமுறை மின்கட்டணம் வீட்டு வரி மற்றும் பல உயர்த்தப்பட்டன. அனைத்து துறைகளிலும் இருந்த மானிய திட்டங்கள் முழுமையாக நிறுத்தப்பட்டது.


Arachi
ஜூலை 14, 2025 20:09

நிதி தராத . மொழி வெறி பிடித்து அலையும் .... தாய்மொழியை அழிக்க நினைக்கும் தற்குறிகள்.


Arachi
ஜூலை 14, 2025 19:37

அவர் குறிப்பிட்ட கஷ்டம் திமுகவினால் அல்ல. மத்திய அரசு தமிழகத்து தரவேண்டிய நிதியை தர மறுப்பதால் தான். புதிய கல்விக்கொள்கை ஒரு விளங்காத கொள்கை. நீட் தேர்வில் எத்தனை தவறுகள் நடக்கின்றன வட மனித்தவரால் நாட்டை ஒரு வழி பண்ணிட்டானுக. என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று பாட வேண்டியதுதான் பாக்கி.


அப்பாவி
ஜூலை 14, 2025 18:27

திருச்சியில் இவரும் பொய்யாமொழியும் போஸ்டர் ஒட்டி ஆடும் ஆட்டம் சகிக்க முடியலை. மக்களுக்கு ரெண்டு பேராலும் பைசா பிரயோஜனமில்ல. கஷ்டம் வரும். வரணும்.


Edwin Jebaraj T, Tenkasi
ஜூலை 14, 2025 18:24

வினை விதைத்தவன் வினை அறுப்பான் நீங்கள் எதிர்கட்சியாக இருந்த போது அப்போது ஆண்டவர்களை ஒரு நாளாவது நிம்மதியாக இருக்க விட்டீர்களா. அதைத் தான் தற்போது எதிர்கட்சியாக இருப்பவர்கள் செய்கிறார்கள் எல்லாம் நீங்கள் சொல்லிக் கொடுத்தது தானே. இப்போது ஏன் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உங்கள் ஆட்சியின் நாட்கள் எண்ணப் படுகிறது என்பது உலகறிந்த விஷயம் அமைச்சரே.


ராமகிருஷ்ணன்
ஜூலை 14, 2025 17:48

மத்தியில் கூட்டுகளவாணி காங்கிரஸ் ஆட்சியில் இல்லாததால் 5 லட்சம் கோடிகளை கடன் வாங்கி சுருட்டி முழுங்கி ஏப்பம் விட்டாச்சு. இன்னும் என்ன பஞ்சபாட்டு நேரு. திருச்சியில் நீங்கள் வாங்காத சொத்துக்கள் இருக்கா என்ன.


panneer selvam
ஜூலை 16, 2025 16:44

Sorry still Trichy Rock fort could not bought by Nehru family due to adamancy of central government in the name of archeology


R S BALAJI
ஜூலை 14, 2025 16:59

முதல்ல சின்னவர கட்சியில் இருந்து தூக்குங்க எல்லா கஷ்டம் நீங்கி விடும். தருடுறகாரன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை