உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., அரசின் அலட்சியத்தால் 100 நாள் வேலையில் குளறுபடி

தி.மு.க., அரசின் அலட்சியத்தால் 100 நாள் வேலையில் குளறுபடி

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்ற, தமிழகத்தில், 85 லட்சத்து, 70,000 குடும்பங்கள் பதிவு செய்துள்ளன. இவர்களுக்கு, அதிகபட்சமாக ஆண்டுக்கு, 100 நாட்கள் வரை வேலை வழங்க முடியும். ஆனால், நடப்பு நிதியாண்டில் இதுவரை ஒரு குடும்பத்துக்கு, சராசரியாக, ஒன்பது நாள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், சராசரியாக 20 நாள் மட்டுமே வேலை வழங்க முடியும். நுாறு நாள் வேலை திட்டத்தை, 150 நாட்களாக அதிகரிப்போம் எனக்கூறி, ஆட்சிக்கு வந்த தி.மு.க., 20 நாட்கள் மட்டுமே வேலை வழங்குகிறது. இதற்கு, தி.மு.க., அரசின் அலட்சியமும், துரோகமும்தான் காரணம். இந்த திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 12 கோடி மனித வேலை நாட்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடும்பத்திற்கும், 50 நாட்கள் வேலை வழங்க வேண்டுமானால், 43 கோடி மனித வேலை நாட்கள் வேண்டும். இதற்கு தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் தாமதிக்காமல், அதிக வேலை நாட்களை வழங்கவும், அதற்கு தேவையான நிதியை பெறவும் தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தமிழ் நாட்டு அறிவாளி
செப் 13, 2025 15:17

ஆமாம் நீங்கள் எந்த கட்சி ?


அப்பாவி
செப் 13, 2025 09:35

திட்டமே டுபாக்கூர் திட்டம்


Indian
செப் 13, 2025 09:19

நீங்க மொதல்ல எந்த கட்சியில இருக்கிறீர்கள்


pakalavan
செப் 13, 2025 09:07

100 நாள் வேலை வந்தபிறகு விவசாயம் எல்லாம் பாதிக்கப்பட்டது உன்மை, ,


selva
செப் 13, 2025 08:28

மக்களின் நலனை பற்றி சிந்திபதால் தான் அவர் தலைவராக உள்ளார்


Raja k
செப் 13, 2025 08:18

கருத்து சொல்லுர நீங்க யாரு? எந்த கட்சிகாரர் நீங்கள்,எல்லாம் நாட்டாமைதனம் பன்னுகிறார்கள், அமித்சாவின் அடிமையாகி போனவர், அங்கே அடிமை வேலை பார்த்துதானே ஆகவேண்டும், இல்லையென்றால் இவர்மேல் உள்ள வழக்கில் இருந்து எப்படி விடுபடுவது


பாலாஜி
செப் 13, 2025 08:15

மருத்துவ தொழிலை உருப்படியாக செய்யவில்லையே


Manaimaran
செப் 13, 2025 07:58

முற்றிலும் ஒழிக்க பட வேண்டிய திட்டம்


தியாகு
செப் 13, 2025 07:02

தி.மு.க., அரசின் அலட்சியத்தால் 100 நாள் வேலையில் குளறுபடி....ஹி...ஹி...ஹி... அண்ணே உங்க கட்சியோட குளறுபடி....ஹி...ஹி...ஹி...


Artist
செப் 13, 2025 06:43

இவர் கட்சியை ஒழுங்குபடுத்திவதில் கவனம் செலுத்தவேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை