உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., எதிர்கட்சியாக இருக்கும் போது அப்படி., ஆளும் கட்சியாக இருக்கும் போது இப்படியா?

தி.மு.க., எதிர்கட்சியாக இருக்கும் போது அப்படி., ஆளும் கட்சியாக இருக்கும் போது இப்படியா?

சென்னை: நீண்ட காலமாக தங்களின் கோரிக்கைக்காக போராடி வரும் அரசு ஊழியர்கள் அரசு மருத்துவர்களின் கோரிக்கைக்காக செவி சாய்க்காமல் முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவது ஏன் ? திமுக எதிர்கட்சியாக இருக்கும் போது போராட்டம் நடத்தி மருத்துவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் இப்போது மவுனம் காப்பது ஏன் என்றும் மருத்துவர்கள் சங்கத்தினர் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளனர். இது தொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை கூறியிருப்பதாவது : தமிழக முதல்வர் ஸ்டாலின் மார்ச் 1 ம் தேதி தன் பிறந்த நாள் கொண்டாடுகிறார். மறைந்த தனது தந்தை கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் போது அவரது அரசாணையை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என அரசு மருத்துவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

முதல்வரின் பிறந்த நாள் பரிசு தருவாரா ?

பிறந்த நாள் பரிசாக, அரசாணை 354 ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட நாம் வேண்டுகிறோம். நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள தன் தந்தையின் ஆணைக்கு உயிர் கொடுக்கும் அறிவிப்பை தன் பிறந்த நாளன்று வெளியிடுவது, முதல்வருக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாக, பாக்கியமாக இருக்கும் என நம்புகிறோம். எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை தர வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்திய பிறகும், கோரிக்கையை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றமே அரசுக்கு உத்தரவிட்ட பிறகும், கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை. என்பது கவலை அளிக்கிறது. மேலும் கொரோனா பேரிடரில் மக்களை காப்பாற்ற போராடி மாண்ட அரசு மருத்துவர் விவேகானந்தனின் குடும்பம் கண்ணீர் சிந்துவது தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. திவ்யா விவேகானந்தனுக்கு அரசு வேலைக்கான ஆணையை முதல்வரின் கைகளால் வழங்கிட வேண்டுகிறோம்.

நிலையை மாற்றுவதா ?

ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த 2009 ல் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய போது எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் நேரில் வந்து கோரிக்கையை நிறைவேற்ற ஆதரவு அளித்தார். ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என உறுதியளித்த தற்போதைய முதல்வர் ஆளும் கட்சியாக வந்த போது எங்களை மறந்தது ஏன்?

பழைய ஓய்வூதியம்

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும் என, 2021 சட்டசபை தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடியவுள்ள நிலையில், வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை; பங்களிப்பு ஓய்வூதிய திட்டமே அமலில் உள்ளது.பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்தாமல், குழு அமைத்ததற்கு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அரசு ஊழியர்கள் கொதிப்பு

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, அரசு ஊழியர், ஆசிரியர் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனாலும் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. இதுபோல் அரசு போக்குவரத்துகழக ஊழியர்களுக்கு நீண்ட காலமாக ஓய்வூதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் , மருத்துவர்களுக்கு சலுகைகள் ஏராளம் கிடைக்கும் என்ற நல்ல எண்ணம் நிலவி வந்தது. ஆனால் தற்போதைய ஸ்டாலின் அரசு ஏன் அரசு ஊழியர்களை கண்டுக்காமல் உள்ளது என்ற அவப்பேச்சு துவங்கி விட்டது. ஆட்சியில் இருந்தால் ஒரு நிலையும், எதிர்கட்சியில் இருந்தால் ஒரு நிலையும் என இரட்டை வேடம் போடுவது நீண்ட காலம் நிலைக்காது என்கின்றனர் அரசு ஊழியர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

M Ramachandran
பிப் 18, 2025 20:31

வாய் எலும்பில்லா அங்கம். அது எப்படியும் பிரண்டு ஆட்டம் போடும். எதிர் காட்சியாக இருக்கும் போது சில்லறையாக இருக்கும் பதவிக்கு வந்ததும் சில்லரையை எண்ணுவதில் குறியாக இருக்கும்.


M Ramachandran
பிப் 18, 2025 18:31

ஏமாற்று, பொய் வாக்குறுதி கூறுதல் அடக்குமுறை காவல் துறையை ஏவுதல் மக்கள் பண கொள்ளை இது தான் தாரக மந்திரம். முடிந்தவரை சுருட்டு மாற்றான் தோட்டதின் மல்லிகை மணக்கும் என்று முன்னவர் கொரியா ஆகிய தேவ வாக்காக எடுத்து கொள்ளுதல் இது தான் கொள்கை. திருடு அடுத்தவன் மேல் பழி போடு.


என்றும் இந்தியன்
பிப் 18, 2025 17:01

இதைத்தான் திருட்டு திராவிட மாடல் சித்தாந்தம் என்பது


SIVA
பிப் 18, 2025 16:05

இங்க இருக்குறவங்களுக்கு சம்பளம் போடுவதே கஷ்டமா இருக்கு , இப்படியே போராடி கொண்டு இருங்கள் இன்னும் சில மாதங்களில் சம்பளம்போட வில்லை என்று அனைத்து ஊழியர்களும் உங்களுடன் துணைக்கு வந்து போராடுவார்கள் .....


Mohan
பிப் 18, 2025 15:39

தி மு க வை என்றைக்குமே எதிர்க்கட்சியாக வைத்தால் நாடும் நம் வீடும் பாதுகாப்ப்பா இருக்கும் ..இல்லாட்டி இப்பிடித்தான் நடக்கும் ...நல்ல அனுபவிங்க ...


Amar Akbar Antony
பிப் 18, 2025 14:36

கண்டிப்பாக வாரி வழங்குவர். ஏனெனில் அடுத்த வருடம் தேர்தல் களத்திலோ தளபதி விஜய் ஏற்கனவே சென்னையின் பாதி சட்டசபை உறுப்பினர்கள் த வெ காவிற்கு தான் என்று முடிவானதாக பட்சி சொல்லியாச்சு உங்கள் காட்டில் மழை வரும் ஆனால் பாருங்க இந்த ஓய்வூதியத்தை மட்டும் மறந்திருங்க அரசூழியர்களே அது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் சாபமாக மாறும்.


Mano Mano
பிப் 18, 2025 14:22

ஒரு நேரத்தில் அண்ணன் மீது பைத்தியமா இருந்தேன் அப்புறமா தான் தெரிந்தது அண்ணனே....


ராமகிருஷ்ணன்
பிப் 18, 2025 14:15

ஓடும் தண்ணீரில் எழுதப்பட்ட 550 டூபாகூர் வாக்குறுதிகளை நம்பி மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் இருப்பது ஏமாளி தனமானது. தேர்தல் நேரத்தில் மட்டும் இன்னும் 1000 வாக்குறுதிகளை கொடுப்பார்கள்.


SIVA
பிப் 18, 2025 14:01

ஆசை தோசை அப்பளம் வடை ....


Nagarajan D
பிப் 18, 2025 13:53

அரசியலிலே இதெல்லாம் சாதாரணமப்பா அதுவும் திராவிடத்தானுங்க ஆட்சியிலே கேட்கவே வேண்டாம்


புதிய வீடியோ