உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவகாரத்தை மடை மாற்றிய தி.மு.க.,வினர்..: அந்துமணி பதில்கள்

விவகாரத்தை மடை மாற்றிய தி.மு.க.,வினர்..: அந்துமணி பதில்கள்

அப்துல், திருச்சி:

'பத்திரிகை பணி என்பது, தொழில் அல்ல; அது உண்மையை பாதுகாக்கப் போராடும் தர்ம யுத்தம்' என, துணை ஜனாதிபதி, சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாரே?துணை ஜனாதிபதி சி..பி.ராதாகிருஷ்ணன், 'தினமலர்' நாளிதழின் நீண்ட கால வாசகர் மற்றும் நலன் விரும்பி. தினமலர் கோட்பாடு குறித்து நன்கு அறிந்தவர். 'உண்மையை பாதுகாக்கப் போராடும் தர்ம யுத்தம்' என்பதை கண்முன்னே இருந்து பார்த்து, அனுபவித்து சொல்லி இருக்கிறார். அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்!

அ.அப்ரா கதீஜா, பெரியபட்டணம்:

தினமும், 'தினமலர்' நாளிதழில் கேள்வி - பதில் வருவதால், தாங்களும் முதல்வர் விஜய் போல், காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை பணி செய்கிறீர்களா? 'வாரமலர்' பொறுப்பாசிரியர் கொடுக்கும் உத்தரவுகளோடு சேர்த்து இப்போது, 'தினமலர்' ஆசிரியரும் உத்தரவு போட்டு, தினமும் கேள்வி - பதில் எழுதித் தரச் சொல்வதால், காலை, 5:00 மணி முதல், 'இ - மெயில்' வாயிலாக குவியும் கடிதங்களையும் படித்து, போஸ்ட் கார்டுகள், இன்லாண்டு கடிதங்கள் என அனைத்தையும் படிக்க வேண்டும்; இரவு, 10:00 மணிக்கும், 'அப்டேட்' செய்ய வேண்டி இருக்கும். வேலை செய்வது தான் நமக்கு மிகவும் பிடித்த விஷயமாயிற்றே!

ம.ரங்கராஜன், மதுரை:

தன் மகள் படிப்புச் செலவுக்காக, வெறுங்காலுடன் புடவை அணிந்து, மாரத்தான் போட்டியில் வென்று, 3,000 ரூபாய் பரிசு பெற்ற, மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ரமாபாய் குறித்து...'அது தான் தாயுள்ளம்' என, உலகம் முழுதும், ரமாபாயின், 'வீடியோ'வைப் பார்த்தவர்கள் கொண்டாடுகின்றனர். தன்னலம் கருதாமல், தங்களின் குழந்தைகளைப் பற்றிய சிந்தனையிலேயே, பிள்ளைகளைப் பெற்றவர்கள் இருப்பர். ரமாபாயும் அத்தகைய தாய்!

ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி:

புவி வெப்பமயமாதல் தடுப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி, திருநெல்வேலியில், களிமண் விதை விநாயகர் சிலைகள் விற்கப்படுகின்றன. இதுபோல் மற்ற மாவட்டத்தினரும் களிமண் விநாயகர் சிலைகளை வாங்கி பூஜை செய்யலாமே?களிமண்ணால் ஆன விதை பிள்ளையார், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகம் எங்கும் கிடைக்கிறது, ஜெயலெட்சுமி. செயற்கை சாயம் பூசாத, விதை பிள்ளையார்களை பொதுமக்கள் தேர்வு செய்து வாங்க வேண்டும்.

பா.பிரகாஷ், தேனி:

பிரிட்டிஷ்காரர்கள் நம் நாட்டில் வியாபாரம் செய்ய மீண்டும் அழைப்பது சரியா சார்?முன்பு, வெகுளித்தனமாக இருந்த இந்தியர்களை அடிமைப்படுத்த, பிரிட்டிஷாருக்கு வசதியாக இருந்தது. அந்தக் காலம் மலையேறி விட்டது. இப்போதெல்லாம் நாம், ஒவ்வொரு நாட்டின் நடவடிக்கைகளையும் தான் உன்னிப்பாக கவனித்து வருகிறோமே! மத்திய, மாநில அரசுகள், பிரிட்டன் மட்டுமல்ல, பல நாடுகளிலிருந்தும் முதலீடுகளை ஈர்த்து, பாதுகாப்பான வளர்ச்சியை நோக்கி செல்வதால், பயப்பட வேண்டாம்; விரைவில் வல்லரசாகி விடுவோம் பாருங்கள்!

ப.த.தங்கவேலு, பண்ருட்டி:

சட்டசபையில் முதல்வர் விஜய் பேசும்போது செய்த உடல்மொழி செய்கை குறித்து?முதல்வர் விஜய், சட்டசபை மாண்பை மீறியதாக தெரியவில்லை. அவரின் அன்றைய தி.மு.க., மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலே சொல்ல முடியாமல், உடல் மொழிக்கு கண்டனம் தெரிவித்து, தி.மு.க.,வினர் விவகாரத்தை மடை மாற்றுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Raja
செப் 12, 2026 22:12

The answers are not unbiased.


kanna
செப் 12, 2026 20:08

அந்துமணியின் பதில்கள் தொடர்கின்றன


Shekar
செப் 12, 2026 18:01

திமுக நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக விஜய் செய்யும் தவறுகளை ஆதரிக்க கூடாது. கருணாநிதி காமராஜரை உருவ கேலி செய்ததற்கு இது சற்றும் குறைந்து அல்ல.


அம்பி ஐயர்
செப் 12, 2026 16:18

எனக்குத் தெரிஞ்சு சுமார் 40 வருஷமாக அந்துமணி பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்....


Venkateshwaraprabhu Venkateshwaraprabhu
செப் 12, 2026 13:21

One side Answer.Fraud And fack news . Dinamalarkku eppavum DMK va pidikkathu.Andumani pathilum same akathan erukkum. Kandippa ehu vasakar answer la varathu.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 12, 2026 11:07

தாடையில் டேமேஜ் ஏன் என்று அந்த ரகசியம் விஜய்க்கும் தெரிஞ்சு போச்சா >>


Ragupathy
செப் 12, 2026 10:20

திமுகவை விமர்சிப்பதை நிறுத்தி விட்டு, மக்கள் பிரச்னையைப் பார்ப்பதே அரசுக்கு நல்லபெயரைத் தரும்.


சந்திரசேகரன்
செப் 12, 2026 09:15

சட்டசபை மரபு, மாண்பு, பதவிக்கேற்ற பணிவு, பேச்சில் கனிவு, அழுத்தமான வாதங்களை அமைதியாக ஆணித்தரமாக,தலைவனுக்கு அறிவுரை கூறுங்கள்


Kchandra Sekaran
செப் 12, 2026 12:16

Kchandra Sekaranஇதற்கு திமுக எனும் முன்னேர் சென்ற வழியில் தவெக என்ற பின்னேர் செல்கிறது. ஸ்டாலினே சொல்வாரே ஒவ்வொறு திட்ட நடைமுறையும் போதும் நான் இருப்பேன் ( அப்பா எங்கே என தேடியபோது சொன்னது) தற்போதைய ஆட்சியின் பேச்சுக்களிலும் முந்தைய மரபு பின்பற்றப்படுகிறதோ என்னவோ!!


Balaji
செப் 12, 2026 09:06

முன்னால் முதல்வர் தாடை உடைக்கப பட்டதாக அவரே ஒரு பிரத்யேக சிறப்பு காணொலி வாயிலாக தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் தனது தாடையில் கை வைத்ததை, தனது தாடை உடைபட்டதை தான் சாடையாக சொல்வதாக கூறியுள்ளார். முதல்வரின் பதிலை பார்க்கும் போது, அவர் தாடை உடைந்த விவகாரத்தை பேச வேண்டுமென்றால் நேரடியாகவே பேசி இருப்பார் என்பது தெரிகிறது.


CM Prabhakaran
செப் 12, 2026 07:41

அந்துமணிக்கு தெரியவில்லை என்று ஒப்புக்கொண்டது பெருந்தன்மை.


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை