உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய தி.மு.க., நகராட்சி தலைவி வீடு இடிப்பு

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய தி.மு.க., நகராட்சி தலைவி வீடு இடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராணிப்பேட்டை: சோளிங்கர் நகராட்சி தலைவி, தக்கான் தீர்த்த குளம் அருகே ஆக்கிரமித்து கட்டிய கட்டடத்தை, வருவாய் துறையினர் இடித்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவர், தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, சோளிங்கர் நகராட்சி தலைவராக உள்ளார். இவரது கணவர் அசோகன், தி.மு.க.,வில் செயற்குழு உறுப்பினராக பதவி வகிக்கிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hljtrmwd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சோளிங்கரில் உள்ள தக்கான் குளக்கரை அருகே, அரசுக்கு சொந்தமான சாலை புறம்போக்கு புலம் எண்: 645/ 2ஏ என்ற இடத்தில், 3,135 சதுரஅடி பரப்பளவை ஆக்கிரமித்து, நகராட்சி தலைவி தமிழ்ச்செல்வி, இரண்டு அடுக்கு கட்டடத்தை கட்டி வருகிறார்.இது தொடர்பாக, சமூக ஆர்வலர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில், ஆக்கிரமிப்பு செய்துள்ள கட்டடத்தை இடித்து அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சோளிங்கர் வட்டாட்சியர் செல்வி, நகராட்சி கமிஷனர் நந்தினி தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடித்து அகற்றும் பணியில், நேற்று ஈடுபட்டனர்.இந்த இடத்தின் மதிப்பு 1 கோடி ரூபாய். சம்பவ இடத்தில், சோளிங்கர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

Ravi Kumar
ஜூலை 11, 2025 09:59

வீடு மாதிரி தெரியலை, வணிகவளாகம் ......


Madhusudhanan K
ஜூலை 10, 2025 18:54

மண்ணாசை பிடித்த திராவிட மாடல்


Ganesh
ஜூலை 15, 2025 18:08

இதே பீஹாரா இருந்தா complient குடுத்தவன் வீடு இடிஞ்சிருக்கும்


Madhusudhanan K
ஜூலை 10, 2025 18:12

பெருமாளே அரசியல்வாதிகளை எல்லாம் எப்போ சம்காரம் பண்ண போற . உன்னோட கடைசி அவதாரத்தை அடுத்த எலெக்சனுக்குள்ளே எடுத்து எங்களை எல்லாம் காப்பாத்திடு.


Nachiar
ஜூலை 10, 2025 18:05

படத்துடன் செய்தியை போட்ட மலருக்கு சபாஷ் .சேவை தொடரவும் .மற்றோர் உங்களை முன்மாதிரியாக கொள்ளவும் வேண்டுகிறேன். ஜெய் பாரத்.


Nachiar
ஜூலை 10, 2025 18:04

அந்த சமூக ஆர்வலருக்கு வணக்கங்கள் மனமார்ந்த நன்றிகள். சபாஷ் சேவை தொடரவும். மற்றோர் உங்களை முன்மாதிரியாக கொள்ளவும் வேண்டுகிறேன். ஜெய் பாரத்.


Abushalibu
ஜூலை 09, 2025 18:48

Revenue Department is not working They know this is Government land Then how they have allowed


Abushalibu
ஜூலை 09, 2025 18:44

What this Thasildar, Revenue Inspector, VAO are doing at the time of construction Even VAO is not visiting site and report to higher authorities The lowest grade in Revenue Department is VAO He is not working


sivakumar Thappali Krishnamoorthy
ஜூலை 09, 2025 13:53

கட்டுன கட்டிடத்திக்கான கூலி நஷ்டமாகிபோச்சேய்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 09, 2025 15:36

ஒரு நஷ்டமும் இல்லீங்கோ .கட்டற கூலி எல்லாம் யானைக்கு அல்வா வாங்குனது, புலிக்கு புல்லு வாங்குனது மீட்டிங்குல டீ குடிச்சதுன்னு நகராட்சி செலவுல கணக்கு எழுதி இருப்பாங்க


sasidharan
ஜூலை 09, 2025 12:36

ஆச்சரியமாக உள்ளது , ஆளுங் கட்சியில் இருந்தும்


panneer selvam
ஜூலை 09, 2025 16:48

It is because of Court Order .


Muralidharan S
ஜூலை 09, 2025 12:09

சேர்ந்தே இருப்பது என்னவோ - திமுகவும் நில அபகரிப்பும்.. பிரிக்க முடியாதது என்னவோ - திராவிஷமும், அராஜகமும். சேராது இருப்பது என்னவோ - திராவிஷமும் , நியாயமும் தர்மமும்.


சமீபத்திய செய்தி