உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐகோர்ட் கண்டனம், திருமாவளவன் அழுத்தம் விஜய் மீது வழக்கு போட தயாராகிறது தி.மு.க.,

ஐகோர்ட் கண்டனம், திருமாவளவன் அழுத்தம் விஜய் மீது வழக்கு போட தயாராகிறது தி.மு.க.,

சென்னை: த.வெ.க., தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய, தி.மு.க., அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் 27ம் தேதி, கரூரில் விஜய் பங்கேற்ற பிரசாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது தமிழகத்தையும் தாண்டி, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அமைக்கப்பட்ட எட்டு எம்.பி.,க்கள் குழு, கரூர் வந்து விசாரித்து திரும்பியுள்ளது. காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் தேசிய பொதுச்செயலர் வேணுகோபால் கரூர் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோர், விஜயிடம் தொலைபேசியில் பேசி ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர்.

தீவிர முயற்சி

இதனால், வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி கணக்குகள் மாறக்கூடும் என பேச்சு எழுந்துள்ளது. 'தி.மு.க., -- த.வெ.க., இடையேதான் போட்டி' என, இதுவரை விஜய் பிரசாரம் செய்து வந்தார். ஆனால், கரூர் துயரச் சம்பவத்தால் ஏற்பட்ட நெருக்கடியால், அவர் கூட்டணி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அவரை அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணிக்குள் கொண்டு வர, அமித் ஷா தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்துவது போல, ராமநாதபுரத்தில் நேற்று நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'தமிழகத்தில் இயற்கை பேரிடர் ஏற்பட்ட போதெல்லாம் உடனே வராத; நிதியை முறையாக தமிழகத்துக்கு தராத மத்திய நிதியமைச்சர், கரூருக்கு மட்டும் உடனே வருகிறார். மணிப்பூர் கலவரம், குஜராத் பால விபத்து, கும்பமேளா நெரிசல் உயிரிழப்பின் போது விசாரணைக்குழு அனுப்பாத பா.ஜ., கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறது. கரூர் துயரச் சம்பவத்தில் ஏதேனும் அரசியல் ஆதாயம் கிடைக்குமா, இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா, உருட்டலாமா என பா.ஜ., பார்க்கிறது' என, கடுமையாக விமர்சித்துள்ளார். அ.தி.மு.க., - பா.ஜ., அணியில் விஜய் சேர்ந்தால், தங்கள் கூட்டணிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என, தி.மு.க., நினைக்கிறது.

நெருக்கடி

அதனால், கரூர் துயரச் சம்பவத்தை பயன்படுத்தி, த.வெ.க.,வுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கவும், விஜய் பிரசாரம் செய்ய முடியாத நிலையை உருவாக்கவும், தி.மு.க., திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. கரூர் சம்பவத்தில், த.வெ.க.,வின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ஐ.ஜி., அஸ்ரா கர்க் தலைமையில் விசாரணை குழுவையும் அமைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, 41 பேர் உயிரிழந்த வழக்கில் விஜய் பெயரை சேர்க்க, தி.மு.க., அரசு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதற்காகவே, வி.சி., தலைவர் திருமாவளவன், 'விஜய் மீது நடவடிக்கை எடுக்க, தி.மு.க., அரசுக்கு என்ன தயக்கம்' என, கேள்வி எழுப்பியுள்ளார். எழுத்தாளர்கள், முன்னாள் அரசு உயர் அதிகாரிகள், சினிமா துறையினர் என பல பிரபலங்கள், 'விஜய் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு தயங்கக்கூடாது' என, கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். எனவே, விஜய் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்ய இருப்பதாகவும், அதன் வாயிலாக, அ.தி.மு.க., - - பா.ஜ., கூட்டணியில் அவர் இணைவதை தடுக்க, தி.மு.க., காய்களை நகர்த்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விஜய் எந்த நேரமும் கைதாகலாம் என போலீஸ் வட்டாரங்களில் பரபரப்பாக பேசுகின்றனர். சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்! 'த.வெ.க., தலைவர் விஜயை சட்டத்தின் முன் நிறுத்த, தமிழக அரசு தயங்கக் கூடாது' என கோரிக்கை விடுத்து, முன்னாள் நீதிபதி சந்துரு, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பாலகிருஷ்ணன், தேவசகாயம், எம்.பி.,க்கள் ரவிக்குமார், சல்மா, எழுத்தாளர்கள் வண்ணதாசன், பொன்னீலன், பெருமாள் முருகன் உள்ளிட்டோர் வெளியிட்ட கூட்டறிக்கை: கரூர் பிரசார கூட்டத்துக்கு தாமதமாக வந்த விஜய், கூட்டத்திற்குள் வந்த பின்னும் முகம் காட்டாமல், மக்களை தன் வண்டிக்குப் பின்னேயே அலையவிட்டதும் தான், 41 பேர் உயிரிழப்புக்குக் காரணம் என்பதை வீடியோ சான்றுகள் காட்டுகின்றன. மரண சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பின், வீடியோ வெளியிட்ட விஜய், எவ்வித குற்ற உணர்ச்சியோ, வருத்தமோ, தார்மீகப் பொறுப்பேற்போ இல்லாமல் பேசியுள்ளார். அரசின் மீது பழிசுமத்தி தப்பித்து விடும் உள்நோக்கம் தெரிகிறது. சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய, கரூர் உயிரிழப்புகளுக்கு காரணமான விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த, தமிழக அரசு தயங்கக் கூடாது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

ஜெய்ஹிந்த்புரம்
அக் 06, 2025 08:00

கோர்ட்டு சொல்லி தமிழ்நாடு அரசு விஜய் கட்சி மீது நடவடிக்கை எடுக்கிறது என்று பதிவாகும். எந்தவொரு அரசியல் காரணமும் இல்லை. சரியான காய் நகர்த்தல். சிபிஐ, அமலாக்கத்துறைன்னு சும்மா ஏவி விட்டு மிரட்டி, கோர்ட்டில் குட்டு வாங்கும் பாஜக போல இல்லை.


R. SUKUMAR CHEZHIAN
அக் 05, 2025 18:14

41 உயிர்கள் பலியானது சாதாரண விஷயம் அல்ல, கட்டுபாடற்ற ரசிகர்கள் கூட்டத்தை தலைமை பண்பு இல்லாத ஒருவர் வழிநடத்துவது என்பது செம்மறி ஆட்டு மந்தைகளை எருமை மாடு வழிநடத்துவது போன்று உள்ளது.


V GOPALAN
அக் 05, 2025 17:01

திருமா மூலம் ஸ்டாலின் vilaidugugirar


Arachi
அக் 05, 2025 03:06

இவரது தாமத வருகையால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 இன்னுயிர்களை இழந்திருக்கிறோம்.இவர் கைது செய்யப்பட எல்லா தகுதியும் இருந்தும் அரசுக்கு என்ன தயக்கம்.


Suresh Velan
அக் 05, 2025 17:33

பேசாம அந்த விஜய் தவறை ஒத்து கொண்டு, volunteer ஆக , நான் மூன்று வருடம் ஜெயிலில் இருக்கிறேன் என்று சொல்லி ஜெயிலுக்கு போகலாம் , அது நல்லது


Arachi
அக் 05, 2025 02:42

சட்டத்திற்குமுன் அனைவரும் சமம் என்றால், 41 உயிர்கள் இன்னுயிர்கள் என்றால், கூட்டம் அதிகம் வரட்டும் என்பதற்காக காலம் தாழ்த்தி வந்த பொறுப்பற்ற தலைவா என்றால் இவர் கைது செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் சட்டம் எல்லோருக்கும் சமம் இல்லை எனக்கருதப்படும்.இவர் ஒரு தகுதியற்ற தலைவர். திரைப்பட வசனம் ஆட்சிக்கு பொருந்தாது.


Yasararafath
அக் 04, 2025 19:45

திமுக தயார் ஆகுமா?


Sam
அக் 04, 2025 19:27

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று நிலை நிறுத்த திமுக அரசு உடனடியாக விஜய் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும். அப்போதுதான் திமுக பேசும் சமூக நீதி நிலைபெறும்.


Suresh Sivakumar
அக் 04, 2025 19:10

Sad. But again the high court is mostly influenced by the state government. Judges appointed return favour


Mr Krish Tamilnadu
அக் 04, 2025 14:59

விஜய் அவர்கள் தானே விரும்பி சென்னை உயர் காவல்துறை அலுவலகத்தில் காவல்துறைக்காக அல்ல, நீதித்துறை சந்தேகங்களை போக்குவதற்காக தன்னை ஒப்படைப்பதாக கூறி தானே தன்னை ஒப்படைக்க வேண்டும். அதற்கு முன் பத்திரிகைகளையோ, மக்களையோ சந்தித்து நாங்கள் மனச்சாட்சி படி எந்த தவறும் செய்யவில்லை. சதியோ, விபத்தோ எதுவாக இருந்தாலும் சரி. அந்த நேரத்தில் த.வெ.க தொண்டர்கள் உதவியில் இருந்தார்கள். அவர்கள் காவல்துறையினால் கடைசியில் விரட்டப்பட்டனர். நாங்கள் ஓடி ஒளிய வில்லை. தாங்கள் பாதுகாப்பு, கட்சியின் நிலை அறிய, என்ன செய்ய வேண்டும் என தெரியாமல், நிர்வாகிகள் குழம்பி இருந்தனர் தவிர, நேர்மையானவர்கள் நாங்கள். மூன்று விதமான கூட்டங்களை சந்தித்தோம். தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள். அரசின் மெத்தனத்தையும் நீதித்துறை கருத்தில் கொள்ள வேண்டும். அனுபவ பட்டவர்களின் அணுகுமுறை தவறுகள் 1.ஒதுக்கப்பட்ட இடம், 2. எங்களின் 12 எச்சரிக்கை வேண்டுகோளையும் கூட்டம் மதிக்கவில்லை. 3. கூட்டத்தை கட்டுப்படுத்த, பாதுகாக்க ஒலிபெருக்கி மூலம், காவல்துறை ஒழுங்குப்படுத்தும் அறிவிப்புகளை செய்யவில்லை. 4. தலைவரான என்னிடம் இந்த கூட்ட சிக்கலை பற்றி காவல்துறை சார்பில் யாரும் நேரடியாக தொடர்பு கொண்டு கூறவில்லை. தொலைபேசி ஆதாரம் காட்டவும்?. என்னிடம் தெரிவிக்க அவசியமில்லை என்னும் போது, தவறுக்கு மட்டும் நான் எவ்வாறு பொறுப்பாக முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்காக எங்கள் மன நெருடலுக்காக மட்டுமே, த.வெ.க சார்பில் அவர்கள் குடும்பங்களின் வாழ்வாதார நிதி அளிக்க உறுதி அளித்துள்ளோம். இளைஞர் சக்திக்கு எதிராக பின்னப்படும் மிக பெரிய சதி வலை.‌தற்போதும் என்னை நேசிக்கும் அந்த மூன்று விதமான குழுக்கள் பேரலை, காட்டுத்தீ போன்றவர்கள். என் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளால், அவரின் சொந்த வாழ்க்கையை தொலைத்தும், எந்த காரணங்களுக்கவும் தமிழகம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தான் என் விருப்பப்படி இந்த நடவடிக்கை. என்னை பார்க்க வந்து, பாதிக்கப்பட்டவர்களுடன் அல்லது அவர்கள் குடும்பத்துடன் நான் சேர்ந்து புகைப்படம் எடுத்து பரிசளிக்க விரும்புகிறேன். அதற்கான ஏற்பாட்டை மட்டும் காவல்துறை செய்து தர வேண்டும். அவர்களை சந்திக்க இன்னமும் காலம் தாழ்ந்த விரும்பவில்லை. இப்படி ஒரு டூவிட் விஜய் தந்தால் எப்படி இருக்கும்?.


Muthukumaran
அக் 04, 2025 18:57

மேலும் சிக்கல் உருவாக வழி வகுக்கும்.அவர் கூட்டங்களூக்குத் தடை என்பது சரி. அவர் கைது பிரச்சனையை உண்டாக்கும். முதிர்ச்சியற்ற இளைஞர்களை உசுப்புதல் ஆபத்து. அதிகாரம் கையிலுள்ளவர்கள் இதை மென்மையாக கையாள்வதே சரி.


Kumararaja Theivasigamani
அக் 04, 2025 21:49

இன்னும் ஏராளமான தப்பிக்கும் வழிமுறைகளை யோசித்து யோசித்து இதை போல எழுதுங்கள். திரை துறையில் உள்ள கதாசிரியர்களை கோடிகள் கொடுத்து தப்பிக்க வழி காண ஸ்கிரிப்ட் எழுதி வாங்குங்கள். அப்படியே இறந்தவர்களின் உயிர்களை மீட்கும் வழி தெரிந்த சாமியார்கள் மந்திரவாதிகள் அனைவருக்கும் தங்க ஆபரணங்கள் தங்க சிம்மாசனம் தங்க தேர் தங்க பல்லக்கு என வாரி இறைத்து தயவு செய்து இறந்தவர்களை மீட்டுக் கொடுங்கள். இதற்கு விஜய்யின் 10000 கோடி பணம் போனாலும் பரவாயில்லை அவர் நடுத் தெருவில் நின்றாலும் பரவாயில்லை. உயிர்களை இழந்த மக்கள் குடும்பம் நடுத் தெருவில் நிற்காமல் செய்தால் போதும்


Mr Krish Tamilnadu
அக் 04, 2025 23:21

குமாரராஜா - இன்றைய அரசியல் அவர் அவர் நலன்களை கருத்தில் கொண்டு தான் இருக்கிறது. கட்சி வேறுபாடு அற்று, தமிழ் இளைஞர்கள் மற்றும் தமிழக சொத்துக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதுவே நோக்கம். விஜய் மேல் நடவடிக்கை என்றால், நிச்சயம் த.வெ.க தொண்டர்கள் மேல் முன்னெச்சரிக்கை என நடவடிக்கை எடுப்பார்கள். அவர்களின் வாழ்க்கை தொலைந்து விடும். அதேபோல் கோப தீ உருவானால், என்ன வேணாலும் நடக்கும். விஜய்யால் மட்டுமே கட்டுபடுத்த முடியும். அதேபோல் விஜய் இன்னும் சந்தர்ப்பவாத அரசியல்வாதியாக மாறவில்லை. மாறினால் லாப நட்ட கணக்கு போட்டு பயணிக்க ஆரம்பித்து விடுவார். வக்கீல்களை எடுத்து கொண்டால், இருபக்க நியாயங்களையும் சமமாக பார்ப்பார்கள். முடிந்த விசயங்களை விட நடக்கும் விசயங்கள் நல்லதாக நடக்க வேண்டும் என யோசிப்பார்கள்.


நிவேதா
அக் 04, 2025 12:39

இதுபோன்று தற்குறிகளை கூட்டணியில் சேர்த்தால், நாளைக்கு. எல்லோரும் சேர்த்து அணில் ஆட்டம் ஆட வேண்டிய நிலை வரும்


சமீபத்திய செய்தி