உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மூக்குத்தி கூட வாங்க முடியாது; கேள்வி எழுப்பிய மூதாட்டியை அச்சுறுத்திய தி.மு.க., பேச்சாளர்!

மூக்குத்தி கூட வாங்க முடியாது; கேள்வி எழுப்பிய மூதாட்டியை அச்சுறுத்திய தி.மு.க., பேச்சாளர்!

சென்னை: தமிழக அரசு வழங்கும் மாதம் ஆயிரம் ரூபாயில் மூக்குத்தி கூட வாங்க முடியவில்லை, என பொதுக்கூட்ட மேடையில் தி.மு.க., நிர்வாகியிடம் மூதாட்டி ஒருவர் கேள்வி எழுப்பினார். அவரை தி.மு.க., பேச்சாளர் அச்சுறுத்தும் வகையில் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.தமிழக அரசு, பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் மகளிருக்கு உதவியாக இருந்து வருகிறது என தமிழக அரசு, அமைச்சர்கள், தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=grh7fsq9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனிடையே, முதல்வர் ஸ்டாலினின் 72வது பிறந்த நாள் விழா திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நடந்தது. இந்த விழாவில் திமுக.,வை சேர்ந்த தமிழன் பிரசன்னா கலந்து கொண்டு பேசினார். ஆயிரம் ரூபாய் திட்டம் குறித்து அவர் பேச துவங்கிய போது, அங்கிருந்த மூதாட்டி ஒருவர் குறுக்கிட்டு, சார், ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சின்ன மூக்குத்தி கூட எடுத்துப் போட முடியாது. இன்னைக்கு விக்கிற விலை என்ன விற்கிறது. நகை விலை என்ன என கேட்டார். இதனைக் கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.அதற்கு தமிழன் பிரசன்னா, பத்து பவுன் நகையை ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்தால் தான் அந்த ரூபாயை மதிப்பேன் எனக்கூறியதுடன், அந்த பெண்ணின் பெயர், சம்பளம், வேலை உள்ளிட்ட விவரங்கள் குறித்து கேட்டார்.அதற்கு அந்த பெண், தனது பெயர் மாலதி, தினமும் ரூ.300 சம்பாதிக்கிறேன். கணவர் இல்லை. என்றார்.பிரசன்னா பேசும் போது, மாதம் 9 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறீர்கள் என நீங்கள் சொல்கிறீர்கள். ஆயிரம் ரூபாய் நிதித் திட்டத்திற்கு பல விதிகள் உள்ளது. நாளை இத்தொகை உங்களுக்கு நிறுத்தப்பட்டால், நான் பொறுப்பு கிடையாது, என்றார். அங்கிருந்தவர்களிடம் எத்தனை பேர் மாதம் ரூ.9 ஆயிரம் சம்பாதிக்கின்றீர்கள் என கேட்டார்.பிறகு இங்கு பலர் ரூ.9 ஆயிரம் சம்பாதிக்கவில்லை. ஆயிரம் ரூபாய் பிச்சை காசு என்கிறது பா.ஜ., இந்த பெண் ஆயிரம் ரூபாயை வைத்து என்ன செய்வது என்கிறார்.தொடர்ந்து அந்த மூதாட்டியிடம், 'ரேசன் கார்டு உள்ளதா' என தமிழன் பிரசன்னா கேட்டார். அதற்கு அந்த மூதாட்டி தன்னிடம் ரேசன் கார்டு உள்ளது என்றார்.தொடர்ந்து தமிழன் பிரசன்னா பேசும் போது, ரேசன் கார்டு உள்ளது. ஆயிரம் ரூபாய் காசு வருகிறது. அரிசிக்கு காசு இல்லை. எல்லாம் வீடு தேடி வருகிறது ஆனால், இவுங்க என்ன சொல்றாங்க. ஆயிரம் ரூபாய் பற்றவில்லை. இவ்வாறு அந்த வீடியோவில் உள்ளது.இதனை பார்த்த நெட்டிசன்கள், தி.மு.க.,வை விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

Dharmavaan
ஏப் 26, 2025 08:21

ரேஷன் மோடி கொடுக்கிறார் .திருட்டு த்ராவிடக்கூட்டம்


baala
ஏப் 21, 2025 10:26

அதற்காக மாதம் ஒரு லட்சம் தரமுடியுமா. அப்படி என்றால் ஓசியில் காலம் கடத்த எண்ணம்


reghupathy umashankar
ஏப் 20, 2025 11:35

Tamilan prasanna is known for his arrogance in the debates organized by T.V.Channel.When he is not any reply to points raised by the other spearks he would turn violent and would start shouting like a mad. If Prasannas mother tounge is Telugu, then why he is using the prefix Tamilan fradulently?


Dharmavaan
ஏப் 26, 2025 08:23

He is a rouge rowdy should not be allowed in tv debate


அப்பாவி
ஏப் 20, 2025 09:30

குடுத்த ஆயிர ரூவாயில் மூக்குத்தி அம்மன் படம் பாரு.


Arul. K
ஏப் 20, 2025 06:55

கேள்வி கேட்டது சரி. ஆனால் கேட்ட கேள்விதான் சரியில்லை


vinoth kumar
ஏப் 20, 2025 00:57

ரேஷன் அரிசியை மத்திய அரசு கொடுக்கிறது . இது இந்த தெலுங்கன் பிரசன்னாவுக்கு தெரியாது. இப்படித்தான் மத்திய அரசு வழங்கும் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டுறானுங்க. மாதம் 1000 கொடுத்துட்டு , வாழ்வாதாரத்தை 5000 வரை உயர்த்தியு ளளார்கள்.


Karthik
ஏப் 20, 2025 00:05

ஆம் சரியாகச் சொன்னீர்கள். இன்றைய நிலவரப்படி வெகுபேருக்கு தெரிவதில்லை நாம் வாங்கும் ரேஷன் பொருட்கள் மத்திய அரசு வழங்குவது என்று. இந்த டுபாக்கூர் மாடல் ஆட்சி மார்தட்டிக் கொள்கிறது ரேஷன் பொருட்கள் அனைத்தும் உருப்படாத மாடக ஆட்சி தான் கொடுக்கிறது என்று


மதிவதனன்
ஏப் 19, 2025 23:16

மோடி ஆட்சியில் 800000 வருமானம் , 2 ஏக்கர் வெச்சு இருப்பவர் ஏழை அதை போல மாதம் 26 300 7800 வருமானம் உள்ளவருக்கு ஏன் 1000 கொடுக்கணும் , சொல்லி கொடுத்து அனுப்பிய வர் சரியா சொல்லி கொடுக்க வில்லை , இதில் எங்கே DMK பேச்சாளர் மிரட்டல் என்று வேறு கதை கட்டி ,எப்படி எல்லாம் வோட்டு கு நாடகம்


arulmurugan
ஏப் 20, 2025 00:29

border arasiyal kaikuligalal arambikapattullathu


Dharmavaan
ஏப் 20, 2025 08:25

800000 எல்லாம் அவனவன் உழைப்பு ஓசி 1000 இல்லை அதில் கமிஷன் கரப்ஷன் கலெக்க்ஷன் இல்லை


baala
ஏப் 21, 2025 10:28

இரண்டு ஏக்கர் வைத்து விவசாயம் செய்தால் வருமானம் கொட்டி விடுமா.


Kumar Kumzi
ஏப் 19, 2025 23:08

ரவுடிகளின் கூடாரம் தானே திருட்டு திராவிஷ திமுக இதிலென்ன சந்தேகம்


Anantharaman Srinivasan
ஏப் 19, 2025 23:02

அரசு இனாமாக எவ்வளவு கொடுத்தாலும் மக்களுக்கு திருப்தி வராது. பசிக்கு சோறு போட்டால் அடுத்து படுக்க இடம் கேட்கும்.. படுக்க இடம் கொடுத்தால் அடுத்து விரிக்க பாய் கேட்கும். பாய் கொடுத்தால் அடுத்து தலையணை கேட்கும். தலையணை கொடுத்தால் போர்வை கேட்கும். போர்வை கிடைத்தால், பின் மின்விசிறி இருந்தால் தேவலை என தோன்றும். இதைத்தான் Human wants are unlimited என Economics ல் கூறுவர். பெண்களின் ஓட்டுக்காக மறைமுகமாக அரசு மாதம் 1000ரூ தருகிறதேயன்றி பெண்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அல்ல.


முக்கிய வீடியோ