உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சொத்து பிரச்னைகளுக்காக தி.மு.க.,வில் ஐக்கியம்

 சொத்து பிரச்னைகளுக்காக தி.மு.க.,வில் ஐக்கியம்

பா.ஜ.,வுடன் த.வெ.க., கூட்டணி பேச்சு மேற்கொள்கிறது என, பல யூகங்கள் கிளம்புகின்றன. அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. கரூர் சம்பவம் தொடர்பாக, மூன்றாவது முறையாக, வரும் 15ம் தேதி டில்லி சி.பி.ஐ., அலுவலகத்தில் விஜய் ஆஜராவார்.திருச்சியில் மாநாடு என்ற பெயரில், தி.மு.க., தன் பணத்திமிரை காட்டி உள்ளது. அமைச்சர் நேரு மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், திருச்சி மாநாட்டுக்கு, 250 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். இந்த பணம் எங்கிருந்து வந்தது? கருணாநிதி இருக்கும்போது, நேரு இதுபோல திருச்சியில் மாநாடு நடத்தினார். அப்போதே, 100 கோடி ரூபாய் செலவு செய்தனர். அதனால் ஏற்பட்ட அதிருப்தியால் தோல்வி அடைந்தனர். தற்போதும் திருச்சி மாநாடு தி.மு.க., தோல்விக்கு காரணமாகும். குடும்பம், சொத்து பிரச்னைகளுக்காக தி.மு.க., கூட்டணியில் சேருகின்றனர். - நிர்மல்குமார், இணை பொதுச்செயலர், த.வெ.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ