உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது: அண்ணாமலை கேள்வி

திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது: அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 4 சவரன் திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கேள்வி எழுப்பி உள்ளார்.சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த வரலட்சுமி என்பவர் பஸ்சில் பயணம் செய்த போது 4 சவரன் நகை திருட்டுபோனது. இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.இது தொடர்பாக, திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு திமுக ஊராட்சி மன்ற தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நீங்கள் திமுகவில் உறுப்பினராகும்போது, ​​கொள்ளையடிப்பதற்கான உரிமம் உங்களுக்கு வெகுமதியாக வழங்கப்படுகிறது.கீழே உள்ள படத்தில் வட்டமிடப்பட்ட நபர் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு திமுக பஞ்சாயத்துத் தலைவர் ஆவார், அவர் ஒரு பஸ்சில் பயணித்த ஒருவரிடமிருந்து 4 சவரன் தங்கத்தை திருடியபோது பிடிபட்டார்.பஸ்களில் பிக்பாக்கெட் திருடுவது முதல் அரசு கஜானாவில் பணத்தை சூறையாடுவது வரை, திமுக அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொள்ளையடிக்க சம வாய்ப்புகளை வழங்குகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

திகழ்ஓவியன்
செப் 06, 2025 13:38

இதுநாள் வரை நீர் மணல் கொள்ளை பற்றி எல்லாம் விரிவா பேசினீர் இப்ப அதை பற்றி பேச்சே காணோம் அனால் மணல் கொள்ளை நடந்து கொண்டு தான் இருக்கு அதாவது உமக்கு மாமூல் கொடுத்து சரி செய்து விட்டார்கள் என்று கூட தான் வருது , இதற்கு உன் மீது ஏன் நடவடிக்கை இல்லை.


திகழ்ஓவியன்
செப் 06, 2025 13:36

அவர் குற்றம் சாட்டப்பட்டவர் ஜெயா , பங்காரு லக்ஸ்ம்னன் , TT க்ரிஷ்ணமாச்சாரி போல குற்றம் நிரூபிக்க படவில்லை , இது எல்லாம் ஒரு மேட்டர் என்று , அஜித் பாவா ர் 60000 கோடி றானே 30000 கோடி ஹேமந்த் பிஸ்வாஸ் சர்மா 20000 கோடி சாராத சீட் பிளந்து சுவேந்தன் அதிகாரி 1000 கோடி இவர்கள் எல்லாம் இப்ப பிஜேபி யில் ஊழல் திருட்டு பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு .


தியாகு
செப் 06, 2025 13:34

அண்ணாமலையின் செய்திகளுக்கு மட்டும் பெயரில்லாமல் திரியும் மூர்க்க கும்பல்களின் கதறல் அதிகமா இருக்கே, அது ஏன்?


தியாகு
செப் 06, 2025 13:30

தனிப்பட்ட திறமை என்பது வேறு மக்கள் செல்வாக்கு என்பது வேறு. அரசியலில் தனிப்பட்ட திறமை ஒரு போதும் கை கொடுக்காது, ஓட்டுக்களாகவும் மாறாது. ஆடிட்டர் குருமூர்த்தி, நிம்மி மேடம், எஸ் வி சேகர், காயத்ரி ரகுராம், மாரிதாஸ், கோலாகல ஸ்ரீனிவாஸ், ரங்கராஜ் பாண்டே போன்றவர்களுக்கு இருப்பது தனிப்பட்ட திறமை. அவர்களின் தனிப்பட்ட திறமை அவர்கள் சார்ந்த தொழிலில் சம்பாதிக்க வேண்டுமானால் உதவும். அரசியலுக்கு உதவாது. அண்ணாமலை போன்றவர்களுக்கு இருப்பது மக்கள் செல்வாக்கு. அதுதான் அரசியலுக்கு தேவை. ஆனால் கெடுவாய்ப்பாக தனிப்பட்ட திறமை கொண்டவர்கள் தங்களை தாங்களே சூப்பர் ஸ்டாராக பாவித்து கொண்டு மக்கள் செல்வாக்கு இருப்பவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும், தாங்கள் சொல்வதைத்தான் மக்கள் செல்வாக்கு உள்ள நபர்கள் கேட்கவேண்டும் என்று பத்தாம் பசலித்தனமாக செயல்பட்டதின் விளைவுதான் தமிழக பாஜக கொஞ்சமும் தேறாமல் உள்ளது. இந்த அடிப்படை கூட தெரியாமல் பாஜக மேலிடமும் தனிப்பட்ட செல்வாக்கு நபர்களின் பேச்சை கேட்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. இதெல்லாம் போதாதென்று சமூகத்தில் மேல் நிலையில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் தமிழக பாஜகவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பதும் கேவலமாக இருக்கிறது. தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற ஜாதி உள் அரசியை பார்க்கமுடியாது. விளங்கிடும் தமிழக பாஜகவின் எதிர்காலம். புரிந்தவன் புத்திசாலி. ஹி...ஹி...ஹி... புரியாதவன் தனிப்பட்ட திறமை கொண்டுள்ளோரை மட்டும் போற்றும் அறிவிலி. ஹி...ஹி...ஹி...


தியாகு
செப் 06, 2025 13:30

அண்ணாமலையை திட்டமிட்டு ஓரம் கட்ட வேண்டியது, ஆனால் புதிய தலைவர் எதிர்பார்த்த அளவிற்கு செயலில் எடுபடாமல் போனதும் மீண்டும் அண்ணாமலையை மையப்படுத்தி செய்திகள் வெளியிட வேண்டியது. அண்ணாமலையை ஊறுகாய் போல மட்டும் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் ஓரம் கட்டிய கும்பல் தமிழக பாஜகவில் இருக்கும் வரையில் தமிழக பாஜக ஒரு சீட்டு கூட தேறாது. விளங்கிடும் தமிழக பாஜகவின் எதிர்காலம்.


Venkatesh Sagadevan
செப் 06, 2025 13:27

உடம்புல ஓடுறது தி மு க ரத்தம்... அது அப்படித்தான் இருக்கும்...


Palanisamy Sekar
செப் 06, 2025 13:25

சொல்லமுடியாது.. விரைவில் இவருக்குண்டான பதவியாக சட்டம் நீதித்துறை அமைச்சர் பொறுப்பு கூட வழங்கப்படும். அப்போது இருக்கு இந்த போலீஸ் விசாரணை அதிகாரிக்கான தண்டனை. இது கட்சியில் பெரிய பதவியில் வருவதற்கான ஒத்திகை. எவ்வளவு அமைச்சர்கள் ஊழலில் தண்டனையும் விசாரணையும் எதிர்கொள்கின்றார்கள். அவர்கள் பணத்தில் புரள்கின்றார்கள். இவர் பாவம் அந்த தங்க செயின் மாடல் பிடித்திருந்ததால் எடுத்துக்கொண்டார். இதில் என்ன குற்றம் கண்டீர்கள் போலீஸே . திமுக உறுப்பினர் என்று தெரிந்தும் கூட கைது செய்யும் தில் எப்படி வந்தது? யார் கொடுத்தார்கள் என்று அறிக்கை இன்றிரவுக்குள் வந்துவிடும். இல்லை என்றால் ஆள் மாறாட்டம் என்று சொல்லி பிரச்சினையை முடித்துவிடுவார்கள் .


sultan
செப் 06, 2025 13:17

ஆடு கரடி விடுகிறது.. கேட்கத்தான் ஆளில்லை.


Shekar
செப் 06, 2025 13:13

விரைவில் அமைச்சர் பதவி உண்டு


Shankar
செப் 06, 2025 13:13

அண்ணாமலை அவர்கள் சரியாகத்தான் சொல்லி இருக்காரு. கட்சியின் பெயரே திருடர்கள் முன்னேற்ற கழகம் என்று மாற்றி வைத்துக்கொள்ளலாம்.


சமீபத்திய செய்தி