உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாராயம் விற்ற பணத்தில் திமுக முப்பெரும் விழா: அண்ணாமலை குற்றச்சாட்டு

சாராயம் விற்ற பணத்தில் திமுக முப்பெரும் விழா: அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கரூரில் நடந்த முப்பெரும் திமுக அரசில் சாராயம் விற்ற பணத்தில் தான் நடத்தப்பட்டு உள்ளது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: 8 ஆண்டுகளுக்கு செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பியை திருடன் என விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் தற்போது பாராட்டுகிறார். உலக மகா உத்தமர் செந்தில் பாலாஜி என்று முதல்வர் சான்றிதழ் கொடுத்துள்ளார். பாஜ கட்சி தமிழக மக்கள் இதயத்தில் இடம் பெற்று கொண்டு இருக்கிறது. கரூரில் நடந்த முப்பெரும் திமுக அரசில் சாராயம் விற்ற பணத்தில் தான் நடத்தப்பட்டு உள்ளது.

ஊழல்வாதிகள்

சாராய அமைச்சராக 3 ஆண்டுகள் பணி செய்து, அவர் சம்பாதித்த பணத்தில் தான் இன்றைக்கு கரூரில் இத்தனை ஆண்டுகளாக இருக்க கூடிய திமுகவின் முப்பெரும் விழா நடக்கிறது. இதனை விட அய்யோ பாவம் என்று சொல்வதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?முதல்வர் ஸ்டாலின் கண்ணாடியில் பார்க்க வேண்டும். ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் வைத்து கொண்டு, அதில் சம்பாதித்த பணத்தில் நடத்திய விழா மேடையில் ஏதோ சாதனை செய்தது போல் எங்களுக்கு எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறுகிறார்.

கண்ணாடியை பாருங்க

முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள். கண்ணாடியை பாருங்கள். எப்படிபட்ட ஊழல்வாதிகளை கட்சியில் வைத்து இருக்கிறீர்கள் என்று பாருங்கள். அதன் பிறகு பாஜவுக்கு அறிவுரை கொடுங்கள். இன்றைக்கு திமுகவுக்கு எடுபிடியாக தமிழகத்தில் ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சி தான். அந்த காங்கிரஸ் கட்சியின் பெயரை தமிழக எடுபிடி கட்சி என்று மாற்றிவிடலாம். திமுகவுக்கு எடுபிடி வேலை செய்வதற்கு ஒரு கட்சி. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சந்திப்பது எல்லோருக்குமே தெரியும். இபிஎஸ் முகத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை. அவர் முகத்தை மறைத்ததாக நான் பார்க்கவில்லை. புட்டேஜில் அப்படி தெரிந்திருக்கிறது.ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக ஆட்சியை பாஜ காப்பாற்றியதாக இபிஎஸ் கூறியது சரித்தர உண்மை. அந்த கருத்தை வரவேற்கிறேன். 2016-17ல் பாஜ என்ன செய்தது என்பதை இபிஎஸ் மக்கள் மன்றத்தில் கூறியுள்ளார்.

இளிச்சவாயன்

சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை நிறைவேற்ற சாத்தியமில்லை என்று கூறி இருப்பதை முதல்வர் ஸ்டாலின் திரும்ப பெற வேண்டும். விஜயின் சுற்றுப் பயணத்திற்கு கூட்டம் கூடினால் சந்தோசம் தான். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தாமலும் விஜய் கூட்டம் நடத்த வேண்டும். தமிழகத்தில் நான் தான் இளிச்சவாயன். நான் எம்எல்ஏ கிடையாது. எம்பி கிடையாது. பஞ்சாயத்து தலைவர் கிடையாது.

நேர்மை

மக்களின் வரி பணத்தில் ஒரு ரூபாய் சம்பளம் கிடையாது. வருடம் வருடம் வங்கி கணக்கு விவரங்களை வெளியிடுவேன். என் சொந்த சம்பாத்தியத்துக்கும் நான் கணக்கு காட்ட வேண்டி உள்ளது. சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய விவசாய நிலத்திற்கு விளக்கம் கொடுக்க வேண்டி உள்ளது. நான் இன்றைக்கு ரூ.மூன்றரை கோடிக்கு கடனாளியாக இருக்கிறேன். அதனை யாரும் பேசவில்லை. வட்டியும் கட்டுகிறேன். நாங்கள் மட்டும் தான் எங்கள் நேர்மையை நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. காமராஜர் ஐயா நிரூபிக்க வேண்டும். அவரது கால் தூசிக்கு சமமான நானும் நிரூபிக்க வேண்டும். ஆனால் மற்றவர்கள் யாரும் நிரூபிக்க மாட்டார்கள். இது தான் தமிழக அரசியலின் துரதிர்ஷ்டம். நாங்கள் நேர்மையாக இருப்பதால் யாரும் சொல்வதற்கு முன்பே இதயத்தை திறந்து காட்டுகிறோம். தமிழகத்தில் ஒரு நாள் வரும். அப்போது யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் திறந்த கண்ணாடியாக இருக்க வேண்டியிருக்கும்.

நட்பு தொடரும்

எனக்கு டெங்கு காய்ச்சல் இருந்ததால் பாஜ தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் வீட்டுக்கு வந்து என்னை சந்தித்தார். கட்சியின் சில நிகழ்ச்சிகளுக்கு வரவில்லை என்றால் நான் அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர். பாஜவின் பெருமைமிகு தொண்டனாக நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். டிடிவி தினகரனை ஓரிரு நாட்களில் நட்பின் அடிப்படையில் சந்திக்க இருக்கிறேன். பாஜ கஷ்டத்தில் இருந்த போது டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆதரவாக இருந்தவர்கள். அவர்களோடு அரசியலை தாண்டி என் நட்பு தொடரும்.இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Ragukkumar T
செப் 20, 2025 12:45

நீங்க எந்த காசுல சொத்து வாங்குனீங்க,அத சொல்லுங்க


அப்பாவி
செப் 19, 2025 08:00

சாராய வியாபாரத்தால் தான் பலருக்கு சம்பளமே வழங்கப் படுகிறது. அண்ணாச்சிக்கு தெரியுமா?


ManiMurugan Murugan
செப் 19, 2025 00:36

ManiMurugan Murugan அரூமை அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி தி மு கா கூட்டணிக்கு அவர்களின் பி த் தலாட்டங்கள் 1- டான் தா க் ஊழல் 300 கோடி உல்லாச பங்களா 2- தங்கம்தென்னரசின் அதிகார ஆட்டம் திருப்புவனக் கொலை 3 ஜி எஸ் டி வருமாணமில்லை அனைத்தும் மத்தியரசு க்கு தான் என்ற வரிகள் 5000 கோடி இழப்பு ஜி எஸ்டி குறை ப் பால் என்றது 4 தன்மானத்தை கெடுப்பவர்களே அதாவது பீ டீ ம் தவெகா அரை வே க் காடு களை வைத்து அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி தி மு கா கூட்டணி போட்ட திட்டம் அம்பலமானது அதாவது திரை கதை வசனம் ஊழல் கட்சி நடித்ததாக நடத்தியவர்கள் தவெகா உடனே கார் கட்சி தலைவர் ஒப்பாரி அடுத்து அடக்குமுறை சஷ்டி கவசம் கேட் கதை தடுப்பது அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி தி மு கா கூட்டணி பன்னிக ஆனால் அடக்குமுறை யை எதிர்ப்புத்தாக ஒப்பாரி தவெகா பீ டீ ம் என்பதை மறைக்க எப்படி எல்லாம் திரை கதை வசனம் ்தில் விஜய் பாடுவதாக அடங்கும் என்று ப் பாட்டு வேற கேவலம்இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் சாமி பாட்டு கேட்க முடியவில்லை இதில் அடக்குமுறை தன் தானம் என்று ஒப்பாரி இன்னும் எவ்வளவு திரை கதை வசனம் வருகிறது என்று பட்டியல் இடலாம்


M Ramachandran
செப் 18, 2025 21:22

அண்ணாமலை ஐயா நீங்க பால் பண்னையயை துவங்கிக போவதாக சொன்னிங்களே. அது விசயம் என்னாச்சு?


மனிதன்
செப் 18, 2025 21:15

செலவுக்கே நண்பர்கள்தான் பணம் கொடுக்கிறார்கள் என்று உருட்டிய உங்களுக்கு எப்படி இவ்வளவு சொத்துக்கள் வாங்க முடிந்தது??? நண்பர்களின் நண்பர்கள் கொடுத்தார்களா??? உத்தமன் வந்துட்டான் சொம்பை தூக்கி உள்ளவை என்ற கதைதான் நினைவுக்கு வருகிறது...


என்னத்த சொல்ல
செப் 18, 2025 18:43

சொந்தமா வீடுகூட இல்ல. எத வெச்சு 3.5 கோடி கொடுத்தார்கள். சாதாரண பொதுமக்கள் இதேமாதிரி வாங்க முடியுமா. ஐடியா கொடுங்க அ.மலை ஜி.


K V Ramadoss
செப் 18, 2025 20:08

எத வெச்சு 3.5 கோடி கடன் கொடுத்தார்கள் என்று அந்த பாங்கை அல்லவா கேட்க்க வேண்டும் ?


திகழ்ஓவியன்
செப் 18, 2025 18:40

திராவிடம் என்றால் நேற்று குருமூர்த்தி சொன்னார், தமிழ்நாட்டை கலிபோர்னியா வுடன் தான் COMPARE செய்யணும் இந்தியாவில் எந்த மாநிலத்துடனும் இல்லை என்று அது தான் திராவிட மாடல் எல்லா மாநிலங்களும் 1947 இல் ஒன்றாக தான் சுதந்திரம் அனால் தமிழ்நாடு மட்டும் GDSP 11.7 இது தான் திராவிடம் , புரிஞ்சவன் பிஸ்தா புரியாதவன் ????


Palanisamy Sekar
செப் 18, 2025 18:22

இதுவரை இந்திய சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு ஊழல் அமைச்சரவையை இந்த திமுக அமைச்சரவையில் நாறுகின்றது. எவ்வளவு அமைச்சர்கள் மீது ஊழல் விசாரணை. அதில் எவ்வளவு அமைச்சர்கள் தண்டிக்கப்பட்டார்கள். சுப்ரீம் கோர்ட்டில் கூட நீதியை விலைக்கு வாங்கும் அளவுக்கு திமுக அமைச்சர்களிடம் பணம் அதீத அளவுக்கு உள்ளது. யோக்கிய சிகாமணிபோல மேடையில் பேசி விட்டு பாஜகவுக்கு இடமில்லையாம் தமிழ்நாட்டில் என்று திமிராக கூறியவர்கள் விசாரணைக்கு உட்படும்போது டெல்லி சென்று மண்டியிட்டே ஆகணும்.


K V Ramadoss
செப் 18, 2025 20:09

ஏற்கனவே மண்டியிடவில்லை என்று சொல்லமுடியுமா ?


hariharan
செப் 18, 2025 17:54

சாராயம் விற்ற பணம் நாறுமா இல்லை கசக்குமா இல்லை தள்ளாடுமா?


Vasan
செப் 18, 2025 18:47

இதற்கு ரஜனிகாந்த் பதில் சொல்லுவார். அரசாங்க விழாவில், மாநில முதலமைச்சர் முன்னிலையில் சரக்கு பற்றி தைரியமாக பேசும் துணிச்சல் வேறு எவருக்கும் இல்லை.


Prabu
செப் 18, 2025 17:51

ஆடு திருந்துவதாக தெரியவில்லை . டிடிவி தினகரன், ஓபிஎஸ் நட்பு அதிமுக வை பாதாளத்தில் தள்ள போகுது .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை