உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாக்டர்கள் வேலை நிறுத்தம்; அவசர சிகிச்சை பிரிவு செயல்படும்!

டாக்டர்கள் வேலை நிறுத்தம்; அவசர சிகிச்சை பிரிவு செயல்படும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று (நவ.,14) மாநிலம் முழுவதும் டாக்டர்கள் 45 ஆயிரம் பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் துறை தலைவர் பாலாஜியை, ஒரு நோயாளியின் மகன் கத்தியால் சரமாரியாக குத்தினார். காயமடைந்த டாக்டர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். சம்பவத்தை கண்டித்து, அரசு டாக்டர்களுக்கான அனைத்து சங்கங்களும் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்தன. மருத்துவமனை வளாகங்களில் டாக்டர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=neth6wkf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சம்பவத்தை கண்டித்து, தமிழகத்தில் இந்திய டாக்டர்கள் சங்கத்தினர் இன்று (நவ.,14) ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 7900 மருத்துவமனைகள், 45,000 டாக்டர்கள் போராட்டத்தில் பங்கேற்று உள்ளதாக இந்திய டாக்டர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இன்று நிறுத்தப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படுகிறது. அவசர சிகிச்சையை தவிர்த்து, மற்ற நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

T.S.SUDARSAN
நவ 14, 2024 11:16

டாக்டர் படிப்பு என்பது ஒரு அவசியம் அண்ட் அதிசயம். ஒரு மருத்துவர் ஒரு துறையில் தனியாக தகுதி பெற அவர் மினிமம் +2 முடித்து 13 முதல் 15 ஆண்டுகள் வரை படித்து தேறவேண்டும். அப்போது தான் MBBS 5.5 வருடம் + 1 வருடம் பயிற்சி மருத்துவம் + 3 வருடம் MD + 3 வருடம் DM = டோடல் 12.5 வருடங்கள். அதன் பிறகு பெரிய மருத்துவரிடம் பயிற்சி எடுக்க 2 முதல் 3 வருடங்கள் ஆகிவிடும். தான் படித்த துறையில் மிக சிறந்த மருத்துவர் அக பணிபுரிய அவர் கடுமையாக உழைக்கவேண்டும். அப்படி உழைதால் தான் மிக சிறந்த மருத்துவர் அக முடியும். இந்த மருத்துவர் கஷ்டப்பட்டு படித்து இந்த நிலைக்கு வந்தவர் எல்லோர்க்கும் மருத்துவம் பார்க்கவேண்டும். இது அரசியவாதிகளுக்கோ அரசாங்க அதிகாரிகளுக்கோ தெரியாது. இந்த அரசியல் ,அரசாங்க வாதிகளுக்கும் இவர் மாதிரி தான் எல்லா மருத்துவர்களும் வைத்தியம் பார்க்கவேண்டும். கலைஞர், ஜெயலலிதா போன்றொக்கும் 20 மருத்துவர்கள் சேர்ந்து மருத்துவம் பார்த்தார்கள். அவர்களும் பிழைக்கவில்லை. பிறப்பால் உயர்ந்ததும் இல்லை. இறப்பால் உயர்ந்ததும் இல்லை. இறப்பை உயர்த்துகிறானே என்று நினைக்கலாம். அனால் அதுதான் உண்மை. பிறந்தவர் இறப்பது உலக உண்மை. இதில் யாருக்கும் விதிவிலக்கு கிடையாது. ஆகவே கொலைகரனை ஈவு இரக்கம் இன்றி துகில் இடவேண்டும். இதை நீதிமன்றம் அரசாங்கம் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நீதியை நிலை நட்டவேண்டும். பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கவேண்டும்.


Indian
நவ 14, 2024 13:32

ஐம்பது கோடி நிவாரணம் கொடுக்கலாம் ..


AMLA ASOKAN
நவ 14, 2024 10:41

தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாத ஒரு நபர் கத்தியை கொண்டு தன் ஆத்திரத்தை தீர்த்துக்கொள்கிறார். இந்த சம்பவம் அரசு மருத்துவமணையில் நடந்ததால் ஊதி பெரிதாக்கப்பட்டு விட்டது. அரசியல்வாதிகளுக்கும் அல்வா கிடைத்து விட்டது. இத்தகு சம்பவங்கள் வீட்டிற்குள்ளும், கடைகளிலும், அரசின் அல்லது தனியார் நிறுவனங்களிலும் இருவரிடையே மோதல் போக்கு உருவாகும்போது திடீரென ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதற்காக மக்கள் அனைவரையும் எந்த ஒரு நிறுவனத்திற்கோ, அலுவலகத்திற்கோ, செல்லும் பொழுது விமான நிலையத்தில் சோதனையிடுவதை போல் செய்யமுடியுமா? இது என்றோ ஒரு நாள் ஏற்படக்கூடிய இரு நபர் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதற்காக பொது மக்கள் பாதிப்பை பற்றி கவலைப்படாமல், தங்கள் உயிருக்கு 24 மணி நேரமும் ஆபத்து என்பதை போல் காட்டிக்கொண்டு, லட்சத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு, மருத்துவர்கள் போராட்டம் நடத்துவது என்பது கண்டனத்துக்குரியது. எப்பொழுது ஒரு குற்றம் நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. உலகம் அனைத்திலும் மனிதரில் நல்லவனும் உள்ளான், கெட்டவனும் உள்ளான், கொலைகாரனும் உள்ளான், அதில் செத்தவனும் உள்ளான். மனித நேயமே நம் அனைவரையும் காப்பாற்றும்


Anantharaman Srinivasan
நவ 14, 2024 12:17

வீண் விதண்டா வாதம். ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கே உன் எதிர்ப்பா..? பாதிக்கப்பட்ட டாக்டரை உன் தகப்பனாகவோ சகோதரனாக நினைத்து அந்த கோணத்தில் உன் கருத்தை வெளிப்படுத்து..


Muthu Kumaran
நவ 14, 2024 13:16

தற்போது அதிகமா உள்ளது, மருத்துவமனையில் ஒருவன் கத்தியுடன் நுழைந்து மருத்துவரை கொலை செய்யும் துணிந்து எதனால்? பயம் இல்லை, சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டது. வாக்கு வங்கி அரசியல், விக்னேஷ் - பட்டியல் இனமா, மைனாரிட்டி மதமா என்று பார்த்து அதற்கு ஏற்ப மீடியாக்கள் பேசும்


Subramanian Marappan
நவ 14, 2024 10:08

கடமைகளை செய்யாத அரசு மருத்துவர்கள் ஆசிரியர்கள ஊழியர்கள் இலஞ்சம் வாங்கி கொழிக்கும் அரசு ஊழியர்கள் யார் தண்டிப்பது. இப்போது இருக்கும் நிர்வாக அமைப்பு வேலியே பயிரை மேயும் கதைதான். இவர்கள் பெரும் ஊதியத்திற்கும் இவர்கள் அறிவுக்கும் சிறிதும் தொடர்பில்லை. வேறொரு அமைப்பை உருவாக்கி அரசு ஊழியர்கள் கண்காணிக்கப்பட வேண்டும். இல்லையெனில் மக்கள் வரிப்பணம் திருடர்கள் கைகளில் அடைக்கலமாகிவிடும்.


Balasubramanyan
நவ 14, 2024 10:04

I am surprised to see the support given to the govt hospital. Has he really gone to any hospital?every where corruption. No clean surroundings.i f you give money you will get everything.I had a bitter experience. I lost hearing capacity in both of my years. I went to Rajiv Gandhi hospital to get a thorough and certificate which Will be useful for me wherever I go since the certificate is authentic from govt. The were done and the certificate had been prepared the doctors told. And waiting to be signed by the Head. The papers were in his tabe from for hours. I waited and finally requested him to sign the certificate and give to me since I am waiting for 4 hrs. He got furious and said it is not his only duty. I am also a retd govt high official He admonished me. If this the case what about poor people.


kumaresan
நவ 14, 2024 09:57

அரசு மருத்துவமனை டாக்டர்களின் செயல் கண்டிக்க தக்கது. ஈவு இரக்கமின்றி நடந்துகொள்கிறார்கள் சிலர். இவர்களை விஜிலென்ஸ் மூலமாக கண்டறிந்து கடுமையாக தண்டிக்கவேண்டும். அதுமட்டுமல்ல இவர்களின் தனியாக மருத்துமனை நடத்தும் முறையையும் சீர் செய்ய வேண்டும் .


sankaranarayanan
நவ 14, 2024 09:36

பல்நோக்கு மருத்துவம் என்று கலைஞர் பெயரில் உருவாக்கிய இந்த மருத்துமனைக்கு வந்த சம்பவங்களை பாருங்கள் ஆரம்பித்தவுடனேயே மருத்துவருக்கு கத்தி குத்து இது போகிற போக்கைப்பார்த்தால் இதுவும் மேற்கு வங்கத்தைப்போலாகிவிடுமோ என்றே அச்சம் நிலவுகிறது தமிழகத்ததில் மருத்துவர்களுக்கு பாது காப்பே இல்லை இல்லை இல்லை


முருகன்
நவ 14, 2024 09:18

தனியார் மாதிரி அரசும் வேலைவாய்ப்புகளை நிரந்தரம் இல்லாமால் வைக்க வேண்டும் அப்போது தான் வேலையின் அருமை புரியும் தவறு செய்த நபரை கைது செய்த பிறகும் போராட்டம் நடத்துவது எதற்கு


Indian
நவ 14, 2024 09:14

மருத்துவர்கள் கொஞ்ச்ம மனசாட்சியோடு, கனிவாக நடந்து கொள்ள வேண்டும். நிறைய மருத்துவர்கள் பணம், பணம் என்று தான் அலைகிறார்கள். நோயாளிகள் ஏற்கனவே மிகவும் உடல் அளவிலும் மனம் அளவிலும் நொந்து இருப்பார்கள் அவர்களிடம் முடிந்த அளவு கனிவோடு நடந்து கொள்ளவேண்டும்.நிறைய மருத்துவர்கள் எரிந்து விழுவார்கள் . பணம் கொடுத்து பார்க்கும் தனியார் மருத்துவர்கள்கள் கூட எரிந்து விழுவார்கள் . கொஞ்சம் கனிவும் , மனிதாபிமானமும் வேண்டும். ...நம் நாட்டில் உள்ள பெரும் பாலான மருத்துவமனைகளில் அது இல்லை ..


Pandianpillai Pandi
நவ 14, 2024 09:09

கத்திக்குத்து கண்டிக்கத்தக்கது. இதற்கு அரசு தண்டனையை தீவிரப்படுத்தியிருக்கிறது. சம்பவத்திற்கு மூலகாரணம் தனியார் மருத்துவர் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறியதால் அந்த இளைஞருக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. கலைஞர் அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை நடைபெறுவதாக மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. வயதானவர்கள் வசதி படைத்தவர்களாக இருந்தாலும் இந்த மருத்துவமனையை நாடுகிறார்கள். எனவே மருத்துவமனைக்கு களங்கம் விளைவிக்க சதி நடந்ததா என்றும் பார்க்க வேண்டும். மருத்துவர்கள் போராட்டம் தேவைஇல்லை மக்களின் அரசாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை பல நடவடிக்கைகள் முன்னுதாரணமாக இருக்கிறது.


Mathi
நவ 14, 2024 08:52

சில மருத்துவர்கள், நோயாளிகளை மதிப்பதில்லை, ஒரு சில அரசு மருத்துவர்களும் நோயாளிகளிடம் ஆறுதலான வார்த்தைகள் பேசுவதில்லை. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை