வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சிறு வயதில் தலையில் தோட்டத்தில் விளைந்த காய் கூடையும் அதற்குள் பெரிய தராசும், கால் கிலோ, அரை கிலோ படியும் வைத்து சாயங்காலம் ஊருக்குள் அனுப்புவார்கள்.. அப்போ எல்லாம் கால் ரூபாய், அரை ரூபாய் வியாபாரம்.எடையும், காயும் வைத்து தராசு பிடிக்க தெரியாது. கூடையை இறக்கி வைப்பர்கள். கையில் வருவதை அள்ளி கொடுப்பேன். அவர்களாகவும் எடுத்து கொள்வார்கள். ஊரெல்லாம் சாதி வித்தியாமின்றி எல்லோரும் பெரியம்மாக்கள், சின்னம்மாக்கள், அத்தைகள், அக்காக்கள், வீடு வரும்போது 10, 20 பைசா அபூர்வமாக ஒரு கால் ரூபா என அதிகம் போனால் ஒன்று அல்லது இரண்டு ரூபாய் தேறும். பெரிய வியாபாரம் பண்ண திருப்தி இருக்கும். தராசு பிடிக்க தெரியாது என்ற உண்மை வீட்டுக்கு தெரியாது.