உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியாவிலே சிறந்தது தமிழக கல்வி முறை: சொல்றது யாருன்னு பாருங்க!

இந்தியாவிலே சிறந்தது தமிழக கல்வி முறை: சொல்றது யாருன்னு பாருங்க!

சென்னை: 'இந்தியாவிலே சிறந்தது தமிழகத்தின் கல்வி முறை தான்' என அமைச்சர் உதயநிதி பேசினார்.சென்னை, வண்டலூரில் நடந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: இந்தியாவிலே சிறந்தது நமது கல்வி முறை தான். தமிழக கல்விமுறையின் சிறப்பை மாணவர்கள் பலமுறை நிரூபித்துள்ளனர். தமிழக கல்விமுறை சரி இல்லை என்று சிலர் அவதூறு பரப்புகிறார்கள். சிலர் குறை சொல்வதை என்னால் ஏற்க முடியாது. மயில்சாமி அண்ணாதுரை, முத்துவேல் போன்றோர் அரசு பள்ளிகளில் படித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆகினர்.

கல்வி முறை

தலைசிறந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர். நமது கல்விமுறையை விமர்சிப்பது நமது மாணவர்களையும், ஆசிரியர்களையும் அவமதிப்பதற்கு சமம். இதற்கு நமது முதல்வரும், திராவிடமாடல் அரசும் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டார்கள். தமிழகத்தின் கல்வி முறை தான் மாணவர்களை சிந்திக்க வைக்கிறது. தமிழகத்தின் கல்வி முறையை குறை சொல்பவர்களை ஆசிரியர்களை மன்னிக்க மாட்டார்கள். தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்தவர்கள் தற்போது உயர்ந்த நிலையில் உள்ளனர்.

அக்கறை

முதல்வர் ஸ்டாலின் ஆசிரியர்களின் நலன்களின் கவனம் செலுத்தி வருகிறார். காலை உணவு திட்டத்தின் மூலம் 20 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர். உயர்கல்வி படிக்கும் அத்தனை பேருக்கும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களே காரணம். ஆசிரியர்கள் மீது எப்போதுமே தி.மு.க.,வுக்கு அக்கறை உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

ponssasi
செப் 06, 2024 16:47

அண்ணாமலை சொல்லுறமாதிரி இதுல படிச்சி நீங்க குரூப் IV பாஸ்பண்ணுங்க பாக்கலாம்.


Jay
செப் 06, 2024 15:47

இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் கல்வி முறை தான் சிறந்தது என்றால் எதற்காக நீட்டு தேர்வில் விலக்கு கேட்க வேண்டும்? சமச்சீர் கல்வியை கொண்டாந்து தமிழ்நாட்டுக் கல்வியின் தரத்தை பல மடங்கு குறைத்தது திமுக தான். எடப்பாடி அவர்கள் வந்த பிறகுதான் கல்வி தரத்தை உயர்த்தி தற்போது நீட்டு தேர்வில் மாநில பாடத்திட்ட மாணவர்கள் நீட்டு தேர்வில் வெற்றி பெறுவது அதிகரித்துள்ளது.


Mani . V
செப் 06, 2024 06:50

சீமான் அடிக்கடி, "நீ என்னப்பா என்ன வேண்டுமானாலும் பேசுவ" அப்படின்னு சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது.


prabakaran j
செப் 05, 2024 22:28

Vilaiyattu thurai amaichar "Vilayatta pesuraru" - indrumudal Tamilnatin pappu enru azaikalam.


TSRSethu
செப் 05, 2024 22:07

அப்ப நீட் தேர்வு ஏன் வேண்டாம் ? சிறந்த கல்வி முறை கொண்ட தமிழகம் ஏன் நீட் தேர்வை எதிர்க்க வேண்டும்


venugopal s
செப் 05, 2024 20:26

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களில் போய் படிக்கும் மாணவர்களை விட வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வந்து படிக்கும் மாணவர்கள் மிகவும் அதிகம். இதுவே தமிழக கல்வியின் தரத்துக்கு சான்று!


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 05, 2024 20:01

நீங்க தமிழக கல்வி முறையில் படிச்சீங்களா நடிகரே ????


M S RAGHUNATHAN
செப் 05, 2024 18:16

பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்கள் மற்றும் MBA படித்தவர்கள் நிறைய பேர் Food Delivery Persons, மற்றும் call Taxi ஓட்டுனர்கள், call டிரைவர்கள் ஆக பணி புரிகின்றனர். குறிப்பிட்ட சில பொறியியல் கல்லூரிகள் மற்றும் MBA போதிக்கும் கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளில் இருந்து வரும் மாணவர்கள்/ பட்டதாரிகள் skillset இல்லை. They are unemployable. இது தான் தரம் இங்கு இப்போது.


ديفيد رافائيل
செப் 05, 2024 17:59

இதுவு‌ம் கூட எவனாவது எழுதிக் கொடுத்து இருப்பான். எழுதிக் கொடுத்ததை படிக்காம copy அடிச்சா இப்படி தானே இருக்கும்.


என்றும் இந்தியன்
செப் 05, 2024 17:01

கலவி முறை என்று சொல்லியிருப்பார்


சமீபத்திய செய்தி