உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 14 ஆண்டுகளாக தீர்வு இல்லாமல் புரொசிஜர் சிக்கலில் துரைமுருகன் வழக்கு

14 ஆண்டுகளாக தீர்வு இல்லாமல் புரொசிஜர் சிக்கலில் துரைமுருகன் வழக்கு

சென்னை: தனக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை, வேலுார் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி, கடந்த 2019ல் பிறப்பித்த அரசாணையை எதிர்த்து, அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.க., ஆட்சி காலத்தில் கடந்த 2006 - -11ம் ஆண்டு பொதுப்பணித் துறை அமைச்சராக துரைமுருகன் பதவி வகித்தார். இவர், 2007- - 2009ம் ஆண்டு கால கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக 1.40 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, 2011ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lny6csbw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

விசாரணை

துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோருக்கு எதிரான இந்த வழக்கு, வேலுார் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. பின், இந்த வழக்கை, சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி, 2019ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. வேலுார் நீதிமன்றத்தில் இருந்து, சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றிய அரசாணையை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் துரைமுருகன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவில், 'வழக்கில் இருந்து என்னை விடுவித்து, வேலுார் சிறப்பு நீதிமன்றம் 2017ம் ஆண்டில் உத்தரவிட்ட நிலையில், 2019ம் ஆண்டு வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டு உள்ளது. 'வழக்கில் இருந்து விடுவித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதையடுத்து, தற்போது இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது' என, கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு தமிழக அரசு, வரும் 23ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

இழுத்தடிப்பு

ஏற்கனவே, சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் வேலுாருக்கே மாற்றக்கோரி, துரைமுருகன் தாக்கல் செய்த மனுவுக்கு, லஞ்ச ஒழிப்பு துறை பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கில், தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருவதால், கடந்த எட்டு ஆண்டுகளாகியும், 'புரொசிஜர்' சிக்கல் காரணமாக, வழக்கு எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

S Balakrishnan
அக் 08, 2025 04:30

உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் அரசியல்வாதிகள் மற்றும் பணம் படைத்த வியாபார கொள்ளைக்காரர்களுக்கு மட்டும் சட்டமும் நீதிபதிகளும் எப்படி வேண்டுமானாலும் எதையும் செய்ய முடியும். இவர்களைத் தவிர இந்த குடியரசு நாட்டில் அனைவரும் சகித்துக் கொள்ள வேண்டும்.


N Sasikumar Yadhav
அக் 07, 2025 22:17

பாரதநாட்டில் ஊழல்வாதிகளுக்கு சாதகமாக சட்டத்தை இயற்றியிருக்கிறார்கள் சுதந்திர பாரதத்தின் முதல் ஆட்சியை அமைத்த கான்கிராஸ் கட்சி . உடனடியாக ஊழல்வாத கும்பல்களுக்கு சாதகமாக இருக்கக்கூடிய சட்டங்களை சீரமைக்க வேண்டும் . தாலியை அடகு வைத்து பிழைப்பு நடத்திய துரைமுருகனுக்கு இப்போது எப்படி இவ்வளவு சொத்துக்கள் வந்தது . திராவிட கும்பலுங்க அனைவரது சொத்துக்களையும் பறிமுதல் செய்து அரசுடமையாக்க வேண்டும் அனைத்தும் விஞ்ஞானரீதியான ஊழல் செய்த சொத்துக்களாக இருக்கும்


Anbuselvan
அக் 07, 2025 21:01

அது சரி அந்த டெல்லி நீதிபதி வீட்டுலே கோடி கோடியாக கண்டு பிடிக்கப்பட்டதே அது என்ன ஆச்சு அதுவும் procedure சிக்கலா


Ganesh
அக் 07, 2025 20:10

இதற்கு பேர் தான் விஞ்ஞான ஊழலின் சர்க்கரியா கமிஷன் சொன்னது மறு பதிப்பு...இப்போது கொஞ்சம் மாத்தி சட்டபூர்வமான ஊழல்... ன்னு சொல்லலாம்...


அப்பாவி
அக் 07, 2025 16:39

ட்ரம்ப் அதிர்ச்சி. உலகநாடுகள் திக்குமுக்காடி போய் நிற்கின்றன.


சத்யநாராயணன்
அக் 07, 2025 13:38

குற்றம் சாட்டப்பட்டவர்களே நீதிமன்றங்களையும் விசாரணை அமைப்புகளையும் நீதிபதிகளையும் தேர்வு செய்து கொள்ளலாம் என்றால் பரவாயில்லை இந்தியாவின் சட்ட அமைப்புகள் உயர்தர குற்றவாளிகளுக்கு நல்ல வசதியாக தான் இருக்கிறது இத்தகைய ஊனமுற்ற சட்டதிட்டங்களினால் ஊழலை நன்றாக வளர்த்தெடுக்க தான் முடியுமே தவிர ஒழிக்க ஒரு காலமும் முடியாது


Yaro Oruvan
அக் 07, 2025 12:12

வேலூர்ல இருந்து சென்னைக்கு மாற்றக்கோரி மனு செஞ்சி அதன் மூலம் 10 வருஷம் ஒட்டியாச்சு ... இப்போ மறுபடி சென்னைல இருந்து வேலூர் மாத்தணுமாம் .. இதுல ஒரு அஞ்சாறு வருஷம் ஓடீரும்.. மறுபடி வேலூர்ல இருந்து சென்னைக்கு மாத்தோணும் .. திராவிஷ மாடல்னா என்னன்னு கேக்குறவங்களுக்கு இந்த ஒரு வழக்கை பாத்தாலே போதும்..


rajasekaran
அக் 07, 2025 12:11

இவர்கள் தான் ஜெயலலிதா அம்மையாரை பார்த்து வாய்தா ராணி என்று சொன்னது .


Barakat Ali
அக் 07, 2025 11:12

சாதாரண குடிமகனுக்கு சட்டத்தின் சலுகை கிடைக்குமா ????


K V Ramadoss
அக் 07, 2025 13:22

சாதாரண மக்களுக்கு சட்டத்தின் ஓட்டைகள் தெரியாது ...சட்டம் படித்தார்களோ இல்லையோ அதி உள்ள ஓட்டைகளை நன்றாக கற்றறிந்த வழக்குரைஞர்கள் மிக அதிகம், அதிலும் அரசியலில்.. அரசியல்வாதிகள் அதிகம் படித்திருப்பது இந்த சட்ட ஓட்டைகளைத்தான்..


A viswanathan
அக் 07, 2025 20:32

லாலுபிரசாத் தண்டனை பெற்று சிறையில் இருக்க வேண்டியவர் உடல் நிலை காரணமாக பிணையில் வந்து அரசியல் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.பிணை கொடுத்த நீதிபதிக்கு தெரியாத இது.சட்டம் தண்டனை எல்லாம் ஆள் பலம் பணபலம் அதிகார பலம் இல்லாத நம்மை போன்றவர்களுக்கு மட்டுமே இந்த நாட்டில்.அரசியல்வாதிகளை ஒன்றுமே செய்ய முடியாது.


Arjun
அக் 07, 2025 10:55

மக்கள் பணத்தை கொள்ளை அடித்து சொகுசு வாழ்க்கை வாழும் மந்திரிகளின் வழக்கை முடிக்க முடியாத நீதிமன்றங்கள். அவர்கள் தெரிந்துதான் இதுமாதிரியான வேலைகளை செய்கிறார்கள் .நீதிமன்றத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை