உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகாலை பயணத்தால் விபரீதம்: ஓசூர் சாலை விபத்தில் 4 பேர் பரிதாப பலி

அதிகாலை பயணத்தால் விபரீதம்: ஓசூர் சாலை விபத்தில் 4 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஓசூர்: ஒசூர் அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி இன்று (அக் 12) அதிகாலை 4 மணிக்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேரண்டபள்ளி வனப்பகுதியில் சென்ற போது முன் சென்ற பிக்கப் வாகனம் மீது மோதியது. காருக்கு பின் தொடர்ந்து வந்த லாரியும் இந்த வாகனங்கள் மீது மோதியது. அடுத்தடுத்து வேறு சில வாகனங்களும் மோதின. இந்த விபத்தில் காரில் இருந்த நான்கு வாலிபர்கள் உயிரிழந்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wa7sjgcx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இறந்தவர்களில் ஒருவர் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த முகிலன், 30. இவர் யுபிஎஸ்சி தேர்வுக்காக பெங்களூரு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தவர் என்று தெரியவந்துள்ளது. மற்ற மூவரும் யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்த விபத்து அதிகாலை 4 மணிக்கு நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

fitz gerard rayen
அக் 16, 2025 01:21

நம் ஊரில் லேன் டிசிப்ளின் கிடையாது ஸ்பீட் லிமிட் போர்டு தான் இருக்கிறது யாரும் follow பண்ணுவது கிடையாது ...லாரி டிரக் left ளானே என்றால் right ளானே தான் ஓட்டுகிறார்கள் சிலநேரத்தில் இரண்டு டிரக் left and ரைட் போய் கொண்டிருக்கும் ..இதற்க்கு எல்லாம் நோ பெனால்டி .foreign போல் ஆவதற்கு நிறைய வருடம் எடுக்கும்


M Ramachandran
அக் 12, 2025 16:25

முக்கால் வாசி விபத்துக்கள் திமிர்பிடித்த மடையர்களால் ஏர் படுகிறது. ஒரு வாகனத்துக்கும் மற்ற வாகனத்துக்கும் இடைய வெளி விட்டு சென்றாலும் முந்தி சென்று உள்ளே வந்து இடை வெளியை குறைத்து விபத்திற்கு காரண கர்த்தா வாவது.


Ram pollachi
அக் 12, 2025 15:55

. பஸ், ரயில் கட்டணத்தை விட இந்த கார் பயணம் சுகமாக இருக்கிறது என இளைய தலைமுறையினர் நம்புகிறார்கள்.... சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து பாண்டி, சேலம், கோவை, பாலக்காடு, கொச்சின் இப்படி போய்கிட்டு வந்துகிட்டு உள்ளார்கள்..... அசம்பாவிதம் ஏற்படாத வரை நலம்...


அப்பாவி
அக் 12, 2025 12:24

நாமதான் வல்லரசு என்று வார்த்தை போதாது... நெடுஞ்சாலைகளில் தரம் இல்லை


bmk1040
அக் 12, 2025 12:04

இவ்வளவு சாவுகள் நடந்தாலும் இவ்வளவு விதிகள் மீறப்பட்டாலும், மக்களின் மூளையின் மந்தத்தன்மையினால் எனக்கு ஒன்றும் ஆகாது என்ற மனப்பான்மை மற்றும் ஓவர் கான்பிடன்ஸ் ஒரு பக்கம்.


நிக்கோல்தாம்சன்
அக் 12, 2025 11:29

இந்த சாலையில் லேன் டிசிப்ளின் முறையாக கடைபிடிக்கப்படாதது தான் பல விபத்துகளுக்கு காரணம் . ஆனால் அதிகாரிகள் வருவாயை மட்டும் பெருகும் செயலாக சைடில் நின்று காசு வாங்குவது மாநில அரசின் நிர்வாக சீர் கேடு


RAMAKRISHNAN NATESAN
அக் 12, 2025 10:12

வாகனங்களின் போக்குவரத்துக்கேற்ப சாலைகள் போதா .... அதுதான் பிரச்னையே ....


aaruthirumalai
அக் 12, 2025 09:53

பயணம் செய்யும் போது அடிக்கடி டீ சாப்பிட வேண்டும். உரையாடிக்கொண்டே செல்ல வேண்டும். முடியாத பட்சத்தில் ஓய்வு எடுத்து செல்ல வேண்டும். இறப்புக்கு சரியான காரணமும் அர்த்தமும் இருக்க வேண்டும். நாட்டுல அனாவசியமான மரணம் அதிகமாகிவிட்டன.


VENKATASUBRAMANIAN
அக் 12, 2025 08:07

அதிகாலை பயணம் தவிர்க்க வேண்டும். மேலும் வாகனத்தில செல்லும்போது போதிய இடைவெளியில் செல்லவேண்டும்


kumaran
அக் 12, 2025 07:43

சமூக சிந்தனையின் செயலாக்கத்தில் தினமலர் நாளிதழ்களில் அதிகாலை பயணத்தை தவிர்க்கவும் என்று தவறாது குறிப்பிடுவது இந்த மாதிரி பெரும்பாலும் விபத்துகள் அதிகாலையில் தான் அதிகம். நாம் ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை