உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்; மின் வணிக ஆய்வாளர் கைது

மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்; மின் வணிக ஆய்வாளர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாராபுரம் மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். சிவசுப்ரமணியம் என்பவர் தனது மனைவி பெயரில் இருந்த தற்காலிக மின் இணைப்பை மாற்றக் கோரி, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதனை செய்து கொடுக்க வடக்கு வணிக ஆய்வாளர் ஜெயக்குமார், 56, ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனைக் கொடுக்க விரும்பாத சிவசுப்ரமணியம் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் கொடுத்த அறிவுறுத்தலின் பேரில், சிவசுப்ரமணியம் ரூ.3 ஆயிரம் லஞ்சப் பணத்தை மின்வாரிய அதிகாரி ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளார்.அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், அதிகாரி ஜெயக்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அவரது அலுவலகத்தில் கணக்கில் வராத 13 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

MMaaaa
அக் 09, 2025 16:55

இது ரொம்ப சின்ன தொகை, என் நண்பர் ரூ.40000 கொடுத்தார்.


என்றும் இந்தியன்
அக் 09, 2025 16:21

ரூ 3000 லஞ்சம் வாங்கியது மிக மிக தவறு. நமது திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு அமைச்சர்கள் வாங்குவது போல கோடியில் வாங்கியிருந்தால் அவரை கைது செய்யவே மாட்டோம். என்ன லஞ்ச எதிர்ப்புத்துறையே சரி தானே


Palanisamy T
அக் 09, 2025 16:10

அரசு அதிகாரிகள் சில்லறைத் தனமாக தவறுகள் செய்து மாட்டிக் கொள்கின்றார்கள். அரசியல்வாதிகள் ஆட்சியசளர்கள் கோடிகள் லஞ்சம் வாங்கினாலும் பாதுகாப்பாக இருக்கின்றார்கள். இதுதான் இன்றைய உலகம்.


Vasan
அக் 09, 2025 20:51

பூத கண்ணாடியால் பார்க்கும் போது கடுகு தெரியும், பூசணி தெரியுமோ ? தெரியாதல்லவா?


சிந்தனை
அக் 09, 2025 16:06

இந்திய பாரம்பரிய கல்வி சொல்கிறது தீய செயல் செய்தால் பாப்பம் வரும் செய்யாதே என்று கொள்ளையடிக்க வந்த வெள்ளையன் எழுதிய கல்வி சொல்கிறது புண்ணிய பாப்போம் எல்லாம் பொய்.நீ சட்டத்திடம் சிக்கிக் கொண்டால் மட்டும் தான், அதுவும் நிரூபிக்க முடிந்தால் மட்டும் தான், அதுவும் உன் திருட்டைப் பொய் என்று நிரூபிக்க முடியக்கூடிய வக்கீல் உனக்கு கிடைக்கவில்லை என்றால் மட்டும்தான், தண்டனை பெறுவாய் என்று. நம்முடைய பாரம்பரிய கல்வி எல்லாம் காட்டுமிராண்டித்தனம், கொள்ளையடிக்க வந்த வெள்ளையன் எழுதிய கல்வியே நல்ல கல்வி. அதனால் சுதந்திர இந்தியாவில் அதுவே தொடரும். பாரம்பரிய கல்வி அழிக்கப்படும். இப்படிக்கு ஜவஹர்லால் கோணல்.


Oviya Vijay
அக் 09, 2025 15:53

மின்வாரியத்தில் போர்மேன், வயர்மேன், வணிக ஆய்வாளர், வணிக உதவியாளர், கணக்கீட்டு ஆய்வாளர், கணக்கீட்டாளர் என அனைவருமே மின் ஊழியர்கள் தானே தவிர, அதிகாரிகள் அல்ல...தயவு செய்து அதிகாரிகள் மானத்தை வாங்காதீங்க... பிளீஸ்...


RAMESH KUMAR R V
அக் 09, 2025 14:37

எங்கும் ஊழல் எதிலும் ஊழல்


மணியன்
அக் 09, 2025 14:11

இதெல்லாம் பொதுமக்கள் பிரயோஜனமில்லை .இந்த நபர் சில நாட்களில் கவனிக்க வேண்டியவர்களை(நீதிபதி உட்பட) கவனித்து மீண்டும் பணிக்கு வந்து வட்டியும் முதலுமாக எடுத்து விடுவார்.ஏன் ஸ்பாட்டில் டிஸ்மிஸ் செய்து எல்லாசலுகையையும் ரத்துசெய்தால் எவரும் லஞ்சம் வாங்க மாட்டார்.மக்கள் கேனையர்களாக இருக்கும்வரை இதெல்லாம் சாதாரணமாக நடந்துகொண்டதான் இருக்கும்.


RAMAKRISHNAN NATESAN
அக் 09, 2025 13:51

மாண்புமிகுக்கள் வரை பாயுதே ..........


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை