உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்கு

ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீது சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் நேற்று கைது செய்யப்பட்டார். மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். டில்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக ஜாபர் சாதிக் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்