உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகை அருணா வீட்டில் அமலாக்க துறை ரெய்டு

நடிகை அருணா வீட்டில் அமலாக்க துறை ரெய்டு

சென்னை:சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, சென்னையில் நேற்று, நடிகை அருணா வீட்டில், அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.பாரதிராஜா இயக்கிய, கல்லுக்குள் ஈரம் படத்தில் அறிமுகமானவர் அருணா, 59. தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அவரது கணவர் மன்மோகன் குப்தா, 72. சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர், கேசினோ ட்ரை என்ற பகுதியில் சொகுசு பங்களாவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மகன், மருமகள், பேரக்குழந்தைகள் உள்ளனர்.கட்டடக் கலை நிபுணரான மன்மோகன் குப்தா, மென்பொருள் நிறுவனங்கள், பங்களா வீடு, அலுவலகங்களில் உள் அலங்காரம் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள் அலங்கார பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த மாநிலங்களிலும் நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.அவரது நிறுவனத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக, அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, புதுச்சேரி பதிவு எண்கள் கொண்ட இரண்டு கார்களில் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள், மன்மோகன் குப்தா வீட்டில், நேற்று காலை 7:00 மணியில் இருந்து மாலை 3:00 மணி வரை சோதனை நடத்தினர். அதில் சிக்கிய ஆவணங்கள் குறித்தும், சோதனையின் பின்னணி குறித்தும் அமலாக்கத் துறை அதிகாரிகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. சமீபத்தில், 'யு டியூப் சேனல்' ஒன்றுக்கு தங்கள் வீடு குறித்தும், அதில் சமையலறை எவ்வளவு பெரியது என்பது குறித்தும், அருணா பல தகவல்களை தெரிவித்து இருந்தார். அப்போதே, அருணா மற்றும் மன்மோகன் குப்தாவின் சொகுசு பங்களாவை பார்த்து பலரும் வியந்தனர். தற்போது, அந்த வீட்டில் சோதனை நடந்தப்பட்டு இருப்பது, 'யு டியூப்' பிரபலங்களை அச்சப்பட வைத்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !