உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களை ஏமாற்ற மருத்துவமனையில் நாடகம்: முதல்வர் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு

மக்களை ஏமாற்ற மருத்துவமனையில் நாடகம்: முதல்வர் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காரைக்குடி: ''மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போதும் டேபிள் வைத்து மீட்டிங் போட்டு, மக்களை ஏமாற்ற நாடகம் போடுகிறார் முதல்வர் ஸ்டாலின்,'' என்று காரைக்குடி பிரசாரத்தில், இபிஎஸ் பேசினார்.அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று காரைக்குடி, திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். காரைக்குடியில் அவர் பேசியதாவது:காரைக்குடிக்கு என்று ஒரு வரலாறு உண்டு, வள்ளல் அழகப்பச் செட்டியார் என்றால் நாடே அறியும். அவருக்குச் சொந்தமான 1000 ஏக்கர் நிலத்தைக் கல்விக்காகக் கொடுத்தவர். அதனாலே அழகப்பா பல்கலைக்கழகம் தலைவர் எம்ஜிஆர் காலத்தில் கொண்டுவரப்பட்டது. செட்டிநாடு என்று பெருமையோடு அழைக்கப்படும் காரைக்குடி, வணிகர்கள் நிறைந்த பகுதி. கட்டிடக் கலைக்கு சிறப்பு பெற்றது. இந்த மாநகராட்சியிலும் நிறைய ஊழல்கள் நடந்துள்ளது. இங்கிருக்கும் மேயர் லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு நகராட்சிக்குச் சொந்தமான இடத்தை குறைந்த வாடகைக்கும் குத்தகைக்கும் விட்டுள்ளார். அவர் பொறுப்புக்கு வந்ததே கொள்ளையடிக்கத்தான். மேயர் தன்னிச்சையாக மாநகராட்சி தீர்மானம் இல்லாமலேயே 30 கோடி ரூபாய்க்கு வேலை ஒதுக்கியிருப்பதாகத் தகவல் சொல்கிறார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இதனை விசாரித்து, தவறு இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். தேர்தல் அறிக்கையில் எந்த வரியும் உயர்த்த மாட்டேன் என்று அறிவித்துவிட்டு உயர்த்திவிட்டனர். குப்பைக்கு வரி போட்டுவிட்டனர். மின்கட்டணமும் மூன்றாண்டுகளில் 67% உயர்த்திட்டாங்க. இப்போது தற்காலிக மின்சார துறை மந்திரி சிவசங்கர் என்னை கிண்டலடித்துப் பேசுகிறார். நீங்களே பாருங்கள். அதிமுக ஆட்சியில் எவ்வளவு பில் கட்டினார்கள் என்பதையும் இப்போது எவ்வளவு கட்டுகிறார்கள் என்பதையும் காட்டுகிறோம். பெரிய தொழிற்சாலைகள் மின்கட்டண உயர்வால் அண்டை மாநிலத்துக்குச் செல்கிறது.எல்லாவற்றையும் உயர்த்திவிட்டு கடன் வாங்குறாங்க. எதுக்கு கடன் வாங்குறாங்கன்னு தெரியலை. அதிமுக ஆட்சி அமைந்ததும் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டும். மாநகராட்சியில் ஆரம்பித்து ஊராட்சி வரை கொள்ளை அடிக்கிறாங்க. கொள்ளையடிப்பதில் முதல் மாநிலம் தமிழ்நாடு.கிராமத்து தோட்டத்தில் அனுமதியில்லாமல் வீடு கட்டினால் சீல் வைப்பார்களாம். டீ கடை முதல் அனைத்து தொழிலுக்கும் லைசென்ஸ் வாங்கணுமாம். நாங்கள் பொய் பேசவில்லை, பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது. இந்தக் கொடுமை எங்காவது உண்டா? இப்படிப்பட்ட ஆட்சி தேவையா? தையல் கடை, சலவை கடை, பெட்டி கடை எல்லாவற்றுக்கும் லைசென்ஸ் வாங்கணுமாம். யாரால் தாங்க முடியும்? யார்தான் ஐடியா கொடுக்கிறார். கிராம மக்கள் என்ன தப்பு செஞ்சாங்க. அப்புறம் சிசிடிவி பொருத்தணுமாம். ஒரு கேமராவின் செலவுதான், கடையின் முதலீடாக இருக்கிறது. ஏழைகளைப் பாதிக்கும் அளவு மோசமான சட்டம் கொண்டுவந்த அரசு இனியும் தொடர வேண்டுமா?உங்களுடன் ஸ்டாலின் என்று ஊர் ஊராக அரசு ஊழியரைப் பயன்படுத்தி நோட்டீஸ் கொடுக்குறார்கள். 46 பிரச்னைகள் மக்களுக்கு இருக்கிறது என்பது இப்போது தான் தெரிகிறதாம், அவரே இதனை ஒப்புக்கொண்டார். 45 நாட்களில் தீர்வு காணலாம் என்கிறார். அதாவது ஆட்சி முடியும்போது தந்திரமாக மக்களை ஏமாற்றுகிறார். 'தினமும் ஒரு அறிக்கை, திட்டம், அதுக்கு ஒரு பெயர் வைப்பார். அது மட்டும்தான் ஸ்டாலின் செய்வார்.ஸ்டாலினுக்கு உடல் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது அங்கேயே டேபிள் வைத்து மீட்டிங் போடுகிறார். 18 நாள் வெளிநாடு போய் சைக்கிள் ஓட்டிய நேரத்தில் ஏன் அரசுப் பணியை கவனிக்கவில்லை? மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போதும் மக்களை ஏமாற்ற நாடகம் ஆடுகிறார் ஸ்டாலின். மக்கள் இதற்கு மயங்க மாட்டார்கள். வெளிநாட்டுக்குப் போய், தமிழ்நாட்டில் உள்ள தொழிலதிபரை அழைத்து அங்கு வைத்து ஒப்பந்தம் போடுறார். இப்படிப்பட்ட முதல்வர் நாட்டுக்குத் தேவையா?திமுக கூட்டணியில் மிகப்பெரிய விரிசல் விழ ஆரம்பித்துவிட்டது, தேர்தல் நேரத்தில் கூட்டணி இருக்குமா இல்லையா என்ற சூழல் நிலவுகிறது.இவ்வாறு இபிஎஸ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Santhakumar Srinivasalu
ஜூலை 30, 2025 12:13

மனிதாபிமானம் இல்லாமல் மேடை ஏறினால் ஏதை வேண்டுமானலும் பேசலாமா?


Kasimani Baskaran
ஜூலை 30, 2025 04:05

அவரும் எத்தனை முறைதான் வெள்ளைக்கொடி காட்டுவார். பிடியை இருக்கினால் காலில் விழவேண்டியது வரலாம். ஆகவே பதுங்கினார் - கூடுதலாக கோவிலுக்குள் போனால் ஆட்சி அல்லது உயிர் போய்விட்டால் என்ன செய்வது. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலுக்கும் பெருவுடையார் கோவிலுக்கும் சிலருக்கு குழப்பம். எது எப்படியோ தேவைப்பட்டால் பட்டையடித்து காவடி தூக்கவும் தயாராக இருக்கிறார்கள் கழகக்கண்மணிகள்.


Mani . V
ஜூலை 30, 2025 03:48

ஏமாற்ற இல்லை. ஆலோசகரின் யோசனைப்படி மூன்று நாள் மருத்துவமனையில் ஷூட்டிங் - அனுதாப ஓட்டு வாங்க.


M Ramachandran
ஜூலை 29, 2025 21:40

இப்படீயே பேசி பேசி 2 திராவிட காட்சிகள் மற்றும் அதன் ஜால்றாக்கள் மக்களியயேமாற்றி குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். இது போததென்று ஒரு சினிமா கம்பெனி திராவிட திருட்டு கட்சியின் கிளையாக தோன்றி மேடை தோறும் கையை காலை ஆட்டி சினிமாவில் டம்மி வில்லனுடன் சண்டை போடும் காட்சியை போல் வாயலா வாடை சுட்டுக்கொண்டு மக்களை ஏமற்றா துடிக்குது. மக்கள் பாவம் நிழலெது நிஜம் எது என்று தெரியாமல் அல்லாடி கொண்டிருக்கிறார்கள். கயவர்கள் கூட்டம் கடந்த 70 ஆண்டுகாலமாக யேமாற்றி மக்கள் மற்றும் நாட்டின் வளங்களை சுரண்டி அயல்நாட்டில் கொண்டு கொட்டி 7 தலைமுறைக்கு சேர்த்து கொண்டிருக்குது. கேவலமான குடும்ப ஆட்சிக்கு சங்ஹூதும் நாள் வீரைவில். இவ்வளவு தெளிவாக தெரிந்தும் கைய்யாலாகாத மத்திய அரசு ஒன்றும் தடுக்க முயற்சிக்க வில்லை. பழனி வீரவசனம் பேசுவது போல் இதையெ திருட்டு கட்சியின் தலைவனும் தான் பதவிக்கு வருமுன் பேசி இது வரை ஒன்றும் புடுங்கல. அவர்கள் திட்டம் தெளிவு. பதவி வெறி அரசு கஜானா சொந்தங்களுக்கு திறந்து விடுவது மற்றும் குஞ்சு குழுவான பெயரில் அரசாட்சி இவயைகள் மட்டும் தான் பதவிக்கு வந்ததும் மக்களை ஏமற்றி விட்டோம் 5 வருடம் கழித்து வேறு ஏதாவது குறளி வித்தை காட்டி மக்களை மூடர்களாக ஆக்குவது.


Tamilan
ஜூலை 29, 2025 21:13

ஒரு கூட்டமும் இல்லை . அதிமுகவின் தலைவரின் நிலை இப்படி ஆகிவிட்டது


sankar
ஜூலை 29, 2025 20:51

மோடி இங்க வந்தா நாங்க உடனே ஓட்டல்ல ரூம் போட்டு விடுவோம்


Ramesh Sargam
ஜூலை 29, 2025 20:50

மக்களை ஏமாற்ற மருத்துவமனையில் நாடகம். போகட்டும், அந்த நாடகம் ஒருபுறம் இருக்கட்டும். அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வருக்கு ஆன செலவு எவ்வளவு என்று திமுக அரசு தெரிவிக்குமா? தெரிவிக்கவேண்டும். ஏன் என்றால் அவருக்கு தமிழக அரசு செலவழித்திருக்கிறது. அரசின் செலவு என்பது மக்களின் வரிப்பணத்திலிருந்து. ஸ்டாலின் அவர்கள் முதல்வராக இல்லாமல், ஒரு பொது மனிதராக மருத்துவம் செய்துகொண்டிருந்தால் அதை கேள்விகேட்க மக்களுக்கு உரிமையில்லை. முதல்வர் என்பதால் கணக்கு கேட்கிறோம்.


உண்மை கசக்கும்
ஜூலை 29, 2025 20:48

உண்மையான காரணம். பிரதமர் தமிழகம் வரும் போது அவரை பார்க்க தைரியம் இல்லாதது தான். துணையும் பார்க்கவில்லையே. பயம் கண்ணில் தெரிகிறது. உம்


S.L.Narasimman
ஜூலை 29, 2025 20:30

ஏங்க ஆசுபத்திரியில விடியல் அரசியல் பண்ணாமல் அவியலா செய்வாங்க?


Santhakumar Srinivasalu
ஜூலை 29, 2025 20:06

ஒருவர் முதல்வராக்கூட இருக்கலாம். ஆனால் அதை வைத்து கொஞ்சம் கூட மனிதாபிம் இல்லாமல் நாகரீகம் இல்லாமல் பேசுவது எவ்வளவு மோசமான பேச்சு என்பது கூட இந்த தலைவருக்கு தெரியாதா? நாளைக்கு இவருக்கு வராது என்பது என்ன நிச்சயம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை