உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் ஸ்டேஷனுக்கே பாதுகாப்பில்லை; தி.மு.க., சாதனை பட்டியலில் சேர்த்துக்கோங்க; இ.பி.எஸ்., கிண்டல்

போலீஸ் ஸ்டேஷனுக்கே பாதுகாப்பில்லை; தி.மு.க., சாதனை பட்டியலில் சேர்த்துக்கோங்க; இ.பி.எஸ்., கிண்டல்

சென்னை: தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனுக்கே பாதுகாப்பில்லை. இதனை தி.மு.க.,வின் 4 ஆண்டு கால ஆட்சியின் சாதனை பட்டியலில் சேர்க்க வேண்டும் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., விமர்சனம் செய்துள்ளார்.அவரது அறிக்கை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V. சத்திரப்பட்டி ஸ்டேஷனுக்குள் புகுந்த மர்மநபர்கள் தாக்கி, சூறையாடியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதனையடுத்து, எனது அறிவுறுத்தலின்படி, சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் நேரில் பார்வையிடச் சென்றபோது, கைது செய்யப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதனை பட்டியல்

தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; மக்களைக் காக்க வேண்டிய போலீசாருக்கு பாதுகாப்பு இல்லை; தற்போது உச்சத்தின் உச்சமாக போலீஸ் ஸ்டேஷனுக்கே பாதுகாப்பு இல்லை. 4 ஆண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியலில் முதலில் சேர்க்க வேண்டிய சாதனை இது தான்.https://x.com/EPSTamilNadu/status/1933776942739960094உங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் தாக்குதலுக்கு உள்ளாவது வெட்கமாக இல்லையா முதல்வரே? போலீஸ் ஸ்டேஷனையே காக்க முடியாத இந்த முதல்வர், தமிழக மக்களை எப்படி காக்கப் போகிறார்?

சட்ட நடவடிக்கை

வாய்ப்பே இல்லை. போலீஸ் ஸ்டேஷனில் தாக்குதுல் நடத்தியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன். எப்போதும் நான் சொல்வதை மீண்டும் தமிழக மக்களுக்கு ஒருமுறை சொல்லிக்கொள்ள விழைகிறேன். மக்களே, தி.மு.க., ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு. இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

என்றும் இந்தியன்
ஜூன் 14, 2025 18:23

திமுக அகராதியில் அருமை என்றால் உண்மையில் அது எருமை என்று அர்த்தம். மக்கள் பொறுமை என்றால் மக்கள் வறுமை என்று அர்த்தம் எங்கள் புலமை என்றால் எங்கள் பழமை என்று அர்த்தம் நான் திராவிடன் என்றால் நான் திருடன் என்று அர்த்தம் இப்படி அர்த்தம் கொண்டால் தான் உண்மையான திருட்டு திராவிட மடியல் அரசின் அறிவிலி வழி இது என்று தெரியும்


Sivakumar
ஜூன் 14, 2025 17:33

Yes, what EPS asks is correct!!


Siva Balan
ஜூன் 14, 2025 16:43

நாளை சட்டசபையில் புகுந்து உதைத்தாலும் சட்டம் ஒழுங்கு அருமை என்பார்களோ....


Padmasridharan
ஜூன் 14, 2025 16:11

காவல் நிலையத்துக்"கே" பாதுகாப்பில்லையென கட்சியை குறை கூற முடியாது சாமி. அதில் வேலை செய்பவர்கள் எத்தனை பேர் குற்றங்களை மறைக்க பஞ்சாயத்து என்ற பெயரில் மாமூல் வாங்கியிருப்பார்கள். புதிய குற்றவாளிகளையும் தயார் படுத்தியிருப்பார்கள். அதனோட விளைவுகள்தான் இவை. சாதாரண மக்களுக்கு ஒன்னும் இவர்கள் பாதுகாப்பு தர இந்த வேலைக்கு வர்ற மாதிரி தெரியவில்லை. இளைஞர்களை மிரட்டியடித்து தினசரி குறைந்தபட்சம் 3000-6000௹ வரை மாமூல் நடக்கின்றது அது இவர்களுக்கே தெரியும். These Public Officers have lost their dignity for corrupting themselves & others for getting money


Kjp
ஜூன் 14, 2025 15:10

முதல்வருக்கு இப்போது தோல்வி பயம் வந்து விட்டது.சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்.கரும்புக்காட்டில் காங்கிரீட் ரோடு போட்டு நடந்து போனதை மறந்து எடப்பாடியை போலி விவசாயி என்று சொல்வாரா.


Kjp
ஜூன் 14, 2025 14:20

நீங்கள் என்ன சொன்னாலும் முதல்வரிடம் இருந்து பதில் வராது.கீறல் விழுந்த ரெக்கார்ட் போல் தொகுதி சீரமைப்பு நிதி வரவில்லை தமிழனை ஆள் முடியாது என்ற உருப்படி இல்லாத பதில்தான் வரும் நீங்கள் சொன்னது போல பொம்மை முதல்வர் தான்.விட்டால் நூறு சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று கூசாமல் பொய் சொல்லுவார்.


SIVA
ஜூன் 14, 2025 14:03

இதுதாண்டா சமதர்ம சமுதாயம் இதுதாண்டா சமூக நீதி இதுதாண்டா போலீஸ் இதுதாண்டா இரும்புக்கரம் இதுதாண்டா திமுக இதுதாண்டா தவிட்டு திராவிட மாடல் ...


Ram
ஜூன் 14, 2025 13:04

ஆம் மிகவும் உண்மைதான்


நாஞ்சில் நாடோடி
ஜூன் 14, 2025 12:58

முதல்வரின் அண்ணனின் தயவில் மதுரையில் இனி வன்முறை தழைத்தோங்கும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை