உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய குழு வருகையால் நெல் கொள்முதல் நிறுத்தம்; கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு

மத்திய குழு வருகையால் நெல் கொள்முதல் நிறுத்தம்; கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு

நாகப்பட்டினம்: மத்திய குழு ஆய்வு செய்ய வருவதை காரணம் காட்டி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் நிறுத்தப்பட் டதாக, நாகையில் விவசாயிகள் ஆவேசமடைந்தனர். நெல் கொள்முதல் செய்யும் பணியை, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொள்கிறது. நெல்லின் ஈரப்பத அளவை, 17 சதவீதத்தில் இருந்து, 22 சதவீதமாக உயர்த்த, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, மத்திய உணவு துறை அதிகாரிகள் அடங்கிய, தலா மூன்று குழுக்கள் தமிழகம் வந்துள்ளன. ஆய்வு மத்திய அரசு சார்பில், உணவு பொருள் இருப்பு மற்றும் ஆராய்ச்சி துணை இயக்குநர் பி.கே.சிங் தலைமையிலான குழுவினர் நேற்று நாகை மாவட்டத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக கொள்முதல் நிலையத்திற்கு வந்த கலெக்டர் ஆகாஷிடம், 'ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நகர்வு இல்லாததால், 10 நாட்களாக காத்துக்கிடக்கிறோம். 'உலர வைத்து எடுத்து வந்து, தார்ப்பாலின்கள் போட்டு மூடி வைத்தாலும், மழை காரணமாக மீண்டும் ஈரப்பதமாகி, மூட்டையிலேயே முளைப்பு விடுகிறது. 'மத்திய குழு வருகையால், காலை முதல் கொள்முதல் நிறுத்தப்பட்டு, அனைத்து தொழிலாளர்களும் துப்புரவு பணியில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்' என, விவசாயிகள் ஆவேசப்பட்டனர். மத்திய குழுவினரிடமும் நெல்லின் ஈரப்பத அளவை அதிகரிக்கும்படி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மயிலாடுதுறை மாவட்டத்திலும் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். காஞ்சிபுரம் அடுத்த புதுப்பாக்கத்தில், தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தின், நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. அங்கு, மத்திய குழு, நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தனர். அளவீடு ஆய்வு குழு அதிகாரிகள் கூறுகையில், 'நெல்லின் ஈரப்பதம் குறித்து, அளவீடு செய்து வருகிறோம். ஒரு இடத்தில், 19 சதவீதம், மற்றொரு இடத்தில், 20 சதவீதம், வேறு ஒரு இடத்தில், 22 சதவீதம் என, நெல்லின் ஈரப்பதம் அளவு கிடைத்துள்ளது. 'இங்கு, 20 சதவீதம் ஈரப்பதம் அளவு உள்ளது. இந்த அறிக்கை, அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்' என, தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அடுத்த மணிமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

ஆய்வு

நீட்டிப்பு

நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்ய, கடந்த சனிக்கிழமை மூன்று குழுக்கள், தமிழகம் வந்தன. அன்று, இரு குழுக்களை சேர்ந்த அதிகாரிகள் தஞ்சை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில், ஆய்வு செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில், திடீரென நாமக்கல், கோவையில் உள்ள அரிசி ஆலைகளில் ஆய்வு செய்தனர். எனவே, நேற்று மத்திய குழுவின் ஆய்வு முடிவடைய இருந்த நிலையில், இன்று, கடலுார், திருவாரூர் மாவட்டங்களில், ஆய்வு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பல மாவட்டங்களில், மழை தொடர்வதால், ஆய்வு செய்யாத மாவட்டங்களில் ஆய்வு செய்யுமாறு, மத்திய குழுவை, வாணிப கழகம் வலியுறுத்தி உள்ளது. எனவே, அக்குழுவின் ஆய்வு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ