உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஐவருக்கு பதவி உயர்வு

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஐவருக்கு பதவி உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, முதன்மை செயலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.தமிழக பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை கமிஷனர் வெங்கடேஷ், முதல்வரின் செயலர் உமாநாத், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன செயல் இயக்குனர் ராஜேந்திர ரத்னு, உணவு பாதுகாப்பு கமிஷனர் லால்வீனா, கவர்ன ரின் செயலர் கிர்லோஷ்குமார் ஆகியோருக்கு, முதன்மை செயலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, தலைமை செயலர் முருகானந்தம் பிறப்பித்துள்ளார். இவர்கள், 2001ம் ஆண்டு தமிழக பிரிவில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டவர்கள். இவர்களில் ராஜேந்திர ரத்னு, அயல்பணி அடிப்படையில் டில்லியில் பணிபுரிந்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
டிச 30, 2024 07:35

இந்திய அரசமைப்பின் படி செயல்படாதவர்கள் அவற்றை மீறி அடைப்பவர்களெல்லாம் இந்திய ஆட்சி பணி இந்திய காவல் பணி எனும் பட்டம் பெற்றுள்ளனர்.அவர்களுக்கு அபரிமிதமான சம்பளம் பதவி உயர்வு என அளித்து ஊக்குவிக்கின்றன இந்நாட்டில்.இந்தியா அரசமைப்பு என்பது பெயரளவிற்கே உள்ளது.