உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சியில் பங்கு; குரல் எழுப்பும் காங்., மாஜி

ஆட்சியில் பங்கு; குரல் எழுப்பும் காங்., மாஜி

திருநெல்வேலி : முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான தனுஷ்கோடி ஆதித்தன் அளித்த பேட்டி: தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கம் வலுவான மக்கள் சக்தியாக இருந்து வருகிறது. கடந்த 1977, 1989 தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு, அதிக இடங்களை வென்று, தன் பலத்தை நிரூபித்துள்ளது. அதனால், வரும் காலங்களில், காங்., சார்பில் அதிக எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிட, தி.மு.க.-விடம், அதிக தொகுதிகளை பெற வேண்டும். அதுமட்டுமல்ல, கூட்டணி ஆட்சியில் பங்கு பெறவும் வலியுறுத்த வேண்டும்; தென் மாவட்டங்களில் காங்கிரஸ் இயக்கம் வலுவாக உள்ளதால், இப்பகுதியில் மாவட்டத் தலைவர், எம்.எல்.ஏ., - எம்.பி. வேட்பாளர் தேர்வில் உள்ளூர் தலைவர்களு க்கே முக்கியத்துவம் வழங்க வேண்டும். நடிகர் விஜய், பா.ஜ.வைக் கண்டிப்பதை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை