தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு
சென்னை:தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து, 92,000 ரூபாய்க்கு விற்பனையானது. சர்வதேச நிலவரங்களால் கடந்த ஒரு வாரமாக, நம் நாட்டில் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 11,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரன் 91,200 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராம், 170 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து, 11,500 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து, 92,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.