உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை புதிய உச்சம்; ஒரே நாளில் ரூ.1,120 அதிகரிப்பு

தங்கம் விலை புதிய உச்சம்; ஒரே நாளில் ரூ.1,120 அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்ததால், ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.83 ஆயிரத்தை தாண்டியது.தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்வை கண்டு வருகிறது. நேற்று முன்தினம் (செப் 20), தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் உயர்ந்து, 10,290 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 480 ரூபாய் அதிகரித்து, 82,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (செப் 21) விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.இந்நிலையில் இன்று காலை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.82,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,360க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 நெருங்கியது. தொடர்ந்து, சர்வதேச சந்தையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை பிற்பகலில் 30 டாலர்கள் அதிகரித்து 3,722.85 டாலராக அதிகரித்தது. இதன் காரணமாக, பிற்பகலிலும் தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்து, ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.83,440க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,430க்கு விற்பனையாகிறது. இதன்மூலம், தங்கம் விலை புதிய உச்சமாக ரூ.83 ஆயிரத்தை கடந்தது. இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.1,120 அதிகரித்துள்ளது. இது ஆபரண பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
செப் 22, 2025 20:43

தினசரி செமை வளர்ச்சிடா சூனா.. பானா... உன்னை யாரும் ஒண்ணும் செய்ய முடியாது.


தாமரை மலர்கிறது
செப் 22, 2025 18:58

தங்கத்தின் மீதான வரியை ஐந்து சதவீதத்திலிருந்து இருபது சதவீதமாக உயர்த்துவது மட்டுமே தங்கத்தின் மீதான மோகத்தை மக்களிடம் குறைக்கும். இந்தியர்கள் கிலோக்கணக்கில் தங்கம் வாங்குவதால், அந்நிய செலவாணி வெளிநாடு செல்கிறது. வரியை ஏற்றினால், மக்கள் தங்கம் வாங்காமல், இந்தியாவிலேயே கார், வீடு, ஹோட்டல் என்று செலவு செய்வார்கள். அது இந்திய பொருளாதாரத்தை வளர்க்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை