உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் சவரன் விலை ரூ.91,080 ஒரே நாளில் ரூ.1,480 உயர்வு

தங்கம் சவரன் விலை ரூ.91,080 ஒரே நாளில் ரூ.1,480 உயர்வு

சென்னை:தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 1,480 ரூபாய் அதிகரித்து, 91,080 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகஅளவில் முதலீடு செய்து வருவதால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனால், நம் நாட்டில் தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 11,200 ரூபாய்க்கும், சவரன் 89,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம் 167 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று காலை, தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து, 11,300 ரூபாய்க்கு விற்பனையானது . சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து, 90,400 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று மதியம், மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து, 11,385 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 680 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில் 91,080 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து, 170 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 185 ரூபாயும், சவரனுக்கு 1,480 ரூபாயும் அதிகரித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை