த.வெ.க., நிர்வாகி ஜாமின் மனு; விசாரணை ஒத்திவைப்பு
கரூர் : கரூர் சம்பவம் தொடர்பாக கைதான, கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலர் மதியழகன் ஜாமின் கோரி, கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, 'கரூர் வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றி உச் ச நீதிமன்றம் உத் தர விட்டுள்ளது. எனவே , ஜாமின் மனு மீதான விசாரணையை, சி.பி.ஐ., வழக்கறிஞர்கள் ஆஜராகும் வரை ஒத்திவைக்க வேண்டும்' என, மதியழகன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை, தேதி குறிப்பிடாமல், நீதிபதி இளவழகன் ஒத்திவைத்தார்.