உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை, நீலகிரி உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

கோவை, நீலகிரி உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (மார்ச் 12) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக் கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (மார்ச் 12) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wkp9b7zn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Jayaraman Pichumani
மார் 12, 2025 16:05

இப்போது மணி மாலை 16:05, 12-03-2025. நல்ல இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.


Jayapal
மார் 12, 2025 15:33

திருச்சிராப்பள்ளியில் நேற்றும் இன்றும் நல்ல மழை .


Petchi Muthu
மார் 12, 2025 15:16

திருநெல்வேலியில் நல்ல மழை பெய்தது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை