வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நடக் மென்பார் நடக்காது நடக்காதென்பர் நடந்து விடும்
மேலும் செய்திகள்
11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
23-Oct-2024
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மன்னார் வளைகுடா பகுதிகளில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இந்த இரண்டு அமைப்புகளில் ஏற்படும் தாக்கம் காரணமாக, தமிழகத்தில் மீண்டும் கன மழை துவங்கிஉள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது நவ., 5 வரை நீடிக்கும். இன்று
திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நடக் மென்பார் நடக்காது நடக்காதென்பர் நடந்து விடும்
23-Oct-2024