உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் விடிய விடிய கொட்டியது கன மழை: மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் உயிரிழப்பு

சென்னையில் விடிய விடிய கொட்டியது கன மழை: மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டியது. கண்ணகி நகரில் தேங்கியிருந்த மழை நீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார்.சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தை வெளி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், செனாய் நகர், அமைந்தகரை, முகப்பேர், பல்லாவரம், சென்னை விமான நிலையம், பம்பல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hqzs1trt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னையில் அடுத்த சில மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது. கண்ணகி நகரில் தேங்கியிருந்த மழை நீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார். தமிழகத்தில் இன்று காலை 8:30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு (மில்லி மீட்டரில்)சோழிங்கநல்லுார் 170.5பாரிஸ் 169.5மடிப்பாக்கம் 149.1கொரட்டூர் 143.4ஆற்காடு 140.6நெற்குன்றம் 139.2திருத்தணி 131சோழவரம் 131நாராயணபுரம் 125.4திருவள்ளூர் 113அம்பத்துார் 112.8வளசரவாக்கம் 112.2ஒக்கியம்துரைப்பாக்கம் 108.9செம்பரம்பாக்கம் 105பள்ளிக்கரணை 104.7பூண்டி 104காவேரிப்பாக்கம் 102.2மேடவாக்கம் 102கலவை 98.4அயப்பாக்கம் 97.2

கனமழை எச்சரிக்கை

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடமேற்கு வங்கக் கடலில், ஒடிஷா - மேற்கு வங்க கரைக்கு அப்பால், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் உருவாகக்கூடும்.தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று இடி மின்னலுடன் லேசான மழை உருவாக வாய்ப்புள்ளது; வரும், 28 வரை மழை தொடர வாய்ப்புள்ளது.மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசு அலட்சியம்

இது குறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: கண்ணகி நகர் பகுதியை சார்ந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வரும் வரலட்சுமி இன்று காலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் உள்ள கேபிள் மீது காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி இன்று காலை 4.50 மணி அளவில் உயிர் இழந்தார். இவருக்கு 12 வயதில் பெண் குழந்தையும் 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டின் ஒரே சம்பாதிக்கும் நபர் வேறு. கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்சார கேபிள்கள் சாலை மேல் செல்வதாகவும் அபாயகரமாக உள்ளதாகவும் அங்கு இருக்கும் மக்கள் பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் அளித்ததாக தெரிவிக்கின்றனர். அரசின் அலட்சியத்தால் இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும். கண்ணகி நகர், எழில் நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் மின்சார கேபிள்கள் அபாயகரமாக பல இடங்களில் உள்ளது என்று அறப்போர் இயக்கம் ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கைகள் இல்லை. சமூக நீதி வெறும் பேச்சில் இருந்தால் பத்தாது. செயலில் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரூ.20 லட்சம் நிதியுதவி

மின்சாரம் தாக்கி உயிரிழந்த துாய்மை பணியாளர் வரலட்சுமி குடும்பத்துக்கு, மின்சார வாரியம் சார்பில், ரூ.10 லட்சமும், தனியார் நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சமும் நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
ஆக 23, 2025 21:01

ஆனால் இந்த அரசியல்வாதிகள் கூட்டம் போடும் இடங்களில் மழை இல்லை, கரண்ட் ஷாக் இல்லை. அவர்களுக்கும் ஒன்றும் ஆவதில்லை.


ஆதிநாராயணன்
ஆக 23, 2025 11:44

எவ்வளவு மோசமான நிர்வாகம் இவர்கள் தவறை பணம் கொடுத்து சரி செய்கிறார்கள் இது முற்றிலும் மோசமான முன் உதாரணம் இதே நிலைமை ஒரு உயர் பதவி வகிக்கும் ஒருவருக்கு ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்? முதலில் இதற்கு காரணமானவர்கள் கொலைக் குற்றம் சாட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்


sankar
ஆக 23, 2025 11:30

வடிகால் சிறப்பாக வேலை செய்யுது - சூப்பரோ சூப்பர் விடியல் சார்


ديفيد رافائيل
ஆக 23, 2025 10:47

இந்த மாதிரியான சமயங்கள்ல கஷ்டப்பட்டு risk எடுத்து வேலை செய்பவர்களுக்கு தான் சம்பளத்தை குறைத்திருக்கானுங்க. கண்டிப்பா தமிழக அரசு மற்றும் அதனை சார்ந்த ஒப்பந்ததாரர்களும் விளங்க மாட்டாங்க.


Svs Yaadum oore
ஆக 23, 2025 10:39

கண்ணகி நகரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் மழை நீரில் கால் வைத்த தூய்மை பணியாளர் பலி ..... 12 வயதில் பெண் குழந்தையும் 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டின் ஒரே சம்பாதிக்கும் நபர் வேறு..... கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்சார கேபிள்கள் சாலை மேல் செல்வதாகவும் அபாயகரமாக உள்ளதாகவும் அங்கு இருக்கும் மக்கள் பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் . ஒரு நடவடிக்கையும் கிடையாது ....இந்த விடியல் ஆட்சியில் இன்னும் மேலும் பல அசம்பாவிதங்கள் நடக்கும் ..மொத்தமும் விடியல் லஞ்ச ஊழல் கள்ள சாராயம் போதை ...


அருண் பிரகாஷ் மதுரை
ஆக 23, 2025 10:01

ஸ்டாலின் அறிவித்த திட்டத்தால் இறந்தவருக்கு எதுவும் பலன் இருக்கிறதா???? இவர் அரசு தூய்மை பணியாளர் என்றால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை,பென்ஷன் எல்லாம் கிடைக்கும்.. இதுவே இவர் தனியார் ஒப்பந்ததாரர் என்றால் என்ன கிடைக்கும்..அதற்குதான் தூய்மை பணியாளர்கள் போராட்டம் செய்தனர்.திமுகவும், அடிமை கூட்டணி கட்சிகளும் துரோகம் செய்து விட்டனர்..


Chandru
ஆக 23, 2025 09:28

There is no need for this news. Madras corporation has clearly said its staff are working round the clock with big motor to drain out water, EB staff to rectify the wires that have got cut and water logging is due to mero work and the like. Mazha penja uyir pogathan pogum endru sollamal solgirargal vekkam ketta corporation top brass. Shame on dravida model


Padmasridharan
ஆக 23, 2025 08:26

அவருடைய படம் கிடைக்கவில்லையா சாமி. குற்றவாளிகளுக்கு புகைப்படங்களை வெளியிட்டு வரலாறு படைக்கும் செய்திகளில் சாமானிய மக்களின் படங்களையும் வெளியிட நேரத்தை ஒதுக்குங்கள்.


புதிய வீடியோ