உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீசார் செய்த குற்றங்கள் பட்டியல் இதோ; இவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கணும்; சொல்லுங்க வாசகர்களே!

போலீசார் செய்த குற்றங்கள் பட்டியல் இதோ; இவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கணும்; சொல்லுங்க வாசகர்களே!

சென்னை: சமீப காலங்களில் குற்ற வழக்குகளில் சிக்கி, தமிழக காவல் துறை அதிகாரிகள் கைதாகி வரும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.குடும்ப பிரச்னை புகாரில் மனைவியிடம் ஒப்படைக்கும்படி, கணவர் கொடுத்த 100 சவரன் தங்க நகைகளை அபகரித்ததாக, பெண் இன்ஸ்பெக்டர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதில், மதுரை திருமங்கலம் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.அதேபோல், சர்வதேச கடத்தல் கும்பல் ஆதரவுடன், மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்த, சென்னை அசோக்நகர் காவல் நிலைய கான்ஸ்டபிள் ஜேம்ஸ், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய முதல் நிலை காவலர்கள் ஆனந்தன், சமீர் மற்றும் அருண் பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் தவிர, வருமான வரி அதிகாரிகளுடன் கூட்டணி அமைத்து, வழிப்பறியில் ஈடுபட்ட ராஜா சிங் மற்றும் சன்னி லாய்டு ஆகிய சிறப்பு எஸ்.ஐ.,க்களும் கைது செய்யப்பட்டனர்.பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், எதிரிகளுக்கு ஆதரவாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை தாக்கிய புகாரில், சென்னை அண்ணா நகர் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜி, சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.தற்போது, அண்ணா பல்கலை மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் மொபைல் போன் எண்களை ஆய்வு செய்தபோது, அடையாறு காவல் நிலைய போலீஸ் அதிகாரிகள், ஞானசேகரனிடம் பேசிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள், ஓசி பிரியாணி கேட்டு, அவரிடம் பேசியதாக செய்திகள் சொல்கின்றன.புதுக்கோட்டை மாவட்ட சமூக ஆர்வலர் ஜெகபர் அலி, கனிம வளக் கொள்ளையில் ஈடுபடும் மாபியாவால், மினி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், பிரச்னை நடந்து ஒரு வார காலத்துக்கு பின், சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு இருக்கிறார்.இப்படி, சட்டம் - ஒழுங்கையும், சமூக ஒழுங்கையும் காப்பாற்றுவதில் வேலியாக இருக்க வேண்டிய போலீசாரே, தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது, காவல் துறையின் கண்ணியத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது.இந்த மாதிரி எல்லா நிகழ்வுகளையும் கண்டறிந்து, உடனுக்குடன் மாநில தலைமைக்கு தகவல் தர வேண்டிய பொறுப்புடைய உளவுத் துறை, உரிய தகவல்களை அனுப்பிய பின்னரும், காவல் துறையால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது ஏன்?அண்ணா பல்கலையில் நடந்த சம்பவத்தை அடுத்து, இதுபோன்று இனிமேலும் நடக்கக் கூடாது என்பதற்காக, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை கொடுக்க வழி செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.அதேபோல, காவல் துறையில் இருந்து கொண்டு தொடர் குற்றங்களில் ஈடுபடுவோருக்கும், கடுமையான தண்டனை வழங்கும் சட்டத்தையும் தமிழக அரசு இயற்ற வேண்டும். அப்போது தான், காவல் துறையினரின் தவறுகள் குறையும் என, அரசு தரப்புக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் குவிந்துள்ளன. இதையடுத்து, இவ்விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் எனக் கேட்டு, தமிழக அரசு தரப்பில் சட்டத் துறையிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.வேலியே பயிரை மேய்வது போல, போலீசாரே குற்றம் செய்கின்றனர். அவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றி கமென்ட் செய்து கருத்து சொல்லுங்க, வாசகர்களே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 117 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
பிப் 25, 2025 09:33

மற்றவர்கள் தப்பு செய்தால் கொடுக்கும் தண்டனையை விட அரசு பொறுப்பில் இருப்பவர்கள் செய்தால் கூடுதல் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். ஆனால், இப்படி அரசாங்கம் என்ற பெயரில் கொள்ளை கும்பல் நாட்டை ஆண்டு வருவது வேதனைக்குரியது.


michael
பிப் 24, 2025 10:13

காவல் துறை அதிகாரிகள் மாறுகிறார்களே தவிர பாதிக்கப்படுபவர்கள் நாங்கள் மட்டுமாகவே இருக்கிறோம். ஏன் செய்தி நிருபர்களும் எங்கள் பிரச்சனைகளை பொதுமக்களிடமும் அரசாங்கத்திடமும் தெரிவிக்க உதவுவதில்லை


michael
பிப் 24, 2025 10:09

தமிழா தமிழா என்று பெருமையாக தலை நிமிர்ந்து நடக்கணுமா இல்லை நாக்கை பிடுங்கி சாகனுமா?


S.V.Srinivasan
பிப் 11, 2025 07:23

குற்ற பத்திரிக்கை, போலீஸ் கேஸ், நீதிமன்றம் என்று அலைந்து நேரத்தை வீணடிக்காமல் ஆயுள் தண்டனை வழங்கி உள்ள உட்கார வச்சுடலாம். அல்லது நடு தெருவில் தூக்கில் தொங்க விடலாம். அப்பத்தான் மற்றவர்களுக்கு ஒரு பயம் இருக்கும்.


Muralidharan S
பிப் 06, 2025 17:00

கொரோனாவால் பல நல்ல மனிதர்கள் / பிரபலங்கள் மட்டும்தான் இறந்துபோனார்கள்... ஆனால், எனக்கு தெரிந்து எந்த கெட்டவனும் இறந்ததாக தெரியவில்லை.. முன்பை விட அதிக வீரியத்துடன் கொரோனாவை விட அதி தீவிரமாக எல்லா அராஜகங்களையம் பலர் செய்கின்றார்களே.. கெட்டவர்களை மாத்திரம் தாக்கி, ஒவ்வொரு உறுப்பாக செயலிழக்க வைத்து, நின்று நிதானமாக அழிக்கக்கூடிய வைரஸ் ஒன்றை - ஆண்டவன் உற்பத்தி செய்து, அனுப்பி வைத்தல் மட்டுமே இனி தேசம் சுத்தமாகும் என்று நினைக்கிறேன்.


Muralidharan S
பிப் 06, 2025 15:54

காவல்துறை - வட்டம், சதுரம், முக்கோணம் ன்னு அரசியல் வியாதிகளுடன் பின்னி பிணைந்து உள்ளதுதான் அனைத்து குற்றங்களுக்கும் காரணம். இந்த நாட்டில் யாரும் யாரையும் எதுவும் செய்ய முடியாத அளவிற்கு நாசமாகி போனது முக்கிய காரணம் - லஞ்சம் - அனைத்து விஷயங்களுக்கும் லஞ்சம். அடிமட்டத்தில் இருந்து ஆரம்பித்து உயர்மட்டம் வரை ஆழ ஊடுவிரியிருக்கும் லஞ்சம் குடுத்து எல்லா பதவிகளுக்கும் வருபவர்கள், போட்ட முதலீட்டை பலமடங்கு திரும்ப அள்ளிவிடலாம் என்று கேட்ட லஞ்சத்தை குடுத்து பதவி பெற்று விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் குற்றச்செயல்கள், கட்டப்பஞ்சாயத்து, ரவுடிகளை வளர்த்துவிடல் ஆகியவை செய்யும் அரசியல் வ்யாதிகளுடன் கைகோர்க்கும் போது அவர்களும் குற்றவாளிகள் ஆகிவிடுகிறார்கள். காவல்துறையை ஏளனமாக பார்த்து சிரிக்கும் நிலைமைக்கு கொண்டுவந்துவிட்டார்கள் திராவிஷன்கள். கல்வித்துறை மற்றும் காவல்துறை - இந்த இரண்டும் மாநில பட்டியலில் இருந்து விடுவித்து - தனி துறையாக ராணுவத்தை போல மத்திய பாதுகாப்பு துரையின் கீழ் கொண்டுவந்து எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல், தாராளமான சம்பளம் மற்றும் இதர வீட்டு வசய்திகள் செய்து குடுத்து, சுதந்திரமாக பணிபுரிய விட்டுப்பாருங்கள். திராவிஷத்தால் மாசுபட்ட கல்வித்துறையும் / காவல்துறையும் - இரண்டுமே சுத்தமாகும். ஒரு காலத்தில் மதிப்பும் மரியாதையும் கொண்டு இருந்த இந்த இரண்டு துறைகளையும் சீரழித்தவர்கள் திராவிஷன்கள்.


MARUTHU PANDIAR
ஜன 31, 2025 22:09

நீங்கள் முன் போல சிங்கிள் மெகா பாக்கெட்டும், வெகு நீள கையுடனும் கார்டூனில் காட்டினால் நன்றாக இருக்கும்.


Dharmavaan
ஜன 30, 2025 09:15

எல்லாவற்றுக்கும் காரணம் திருடன் அரசாக இருப்பதே கீழே இருப்பவன் அதையே செய்கிறான் வியப்பில்லை


m.arunachalam
ஜன 29, 2025 20:16

ஊழல், அராஜகம் செய்யும் வீட்டில் பெண் எடுப்பது மற்றும் பெண் கொடுப்பதை சமூகம் நிறுத்த வேண்டும். அவர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ள கூடாது.


S.Senthilkumar
ஜன 29, 2025 20:15

Concern police persons properties to be confiscated without any compassion or the opportunities given for further appeal on judgment or delay the process.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை