வாசகர்கள் கருத்துகள் ( 8 )
காவல் துறைக்கு ஒரு டாக்குமெண்ட் கிடைத்துவிட்டால் ,அது பற்றி விசாரித்து உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் ,அதை விட்டுவிட்டு அந்த டாக்குமெண்ட் கொடுத்தவர் ,அதை வாபஸ் வாங்க்கிக்கொண்டார் என்பதற்காக அது சம்பந்தமான குற்றவாளிகளை விடுவிப்பது நீதிக்கு புறம்பானது .இது இந்தியாவில் தொடரும் ஒரு தொடர் கதையாகவே உள்ளது .......நீதித்துறையினர் இது சம்பந்தமாக சரியான உரிய நெறி முறைகளை கையாண்டு தெளிவு படுத்தி காவல் துறை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தவேண்டும் .அரசியல் வாதிகள் செய்யவேண்டிய இந்த பணியை நீதித்துறை செய்யவேண்டியதாக இருக்கிறது .........News By Master Joe
முதுகெலும்பு இல்லாத கையாளாகாத சட்டங்களும் நீதிமன்றங்களும் இருக்கும் வரை இது போன்ற அவலங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். கடுமையான தண்டனையே கிடையாது. 10 லட்ச ரூபா இவர்களுக்கு பெரிய விஷயமா குற்றவாளியிடமே இருந்து வாங்கி கொடுத்து விடுவார்கள்.
இது என்ன பிரமாதம். குப்பை அள்ள நிறுவனங்கள் குத்தகை எடுத்து பெரும்பகுதியை ஏப்பம் விட்டு, குறைந்த சம்பளத்தில் நிரந்தரமில்லாத வகையில் பல பட்டியலின தொழிலார்களின் இரத்தம் குடிக்கப்படுகிறது. அவர்கள் தங்கள் பணியை நிரந்தரமாக்க போராடினால் - அதை சமூக நீதி காக்கவேண்டிய நீதிமன்றம் ஒடுக்குகிறது.
ரயில்வே துறையில், வேலை வாங்கி தருவதாக கூறி, லட்சக்கணக்கில் பணம் பெற்று, நம்பிக்கை மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்த 2015ல், மாவட்ட குற்றப் பிரிவில் புகார். லஞ்சம் கொடுத்து வேலை பெறுவது சட்டபடி குற்றம் இல்லையா? வாங்கியவர், கொடுத்தவர் இருவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாமா. மேலும் எந்த வழக்கையும் போலீஸ் வருவாய் துறை அதிகாரிகள் ஒப்புதல், மேற்பார்வை இல்லாமல் பதிவு செய்ய முடியாது. ஒருவர் பற்றிய தகவல்கள் வருவாய் துறை தான் பெற முடியும். போலீஸ், நீதிபதி அரசை மீறி தனி நிர்வாக பணிகள் புரிய கூடாது.
10 வருடங்கள் வழக்கை கண்காணிக்காத நீதிமன்றத்தின் பங்களிப்பு?
இப்போ கொடுத்திருக்கிற தீர்ப்பை அமல்படுத்துவாங்கன்னு எதிர்பார்க்கிறீங்களா? முதலில் வழக்கு தொடுத்தவங்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துங்க கனம் கோர்ட்டார் அவர்களே.
கைது செய்யற மாதிரி செஞ்சி, பஞ்சாயத்து பண்ணி, பணத்தை அதிகார பிச்சையெடுத்து அவர்களை வெளியில் விட்டு வைப்பதுதான் பல காவலர்களும் செய்கின்றனர். இது அவங்கவங்களுக்கே தெரியும் சாமி. கோர்ட் மற்றும் செக்ஷன்ஸப் பத்தி சொல்லி பயப்பட வெச்சி அதட்டி மிரட்டியடித்து காவலர்கள் ராஜாங்கம் நடத்துகிறார்கள். இதனால்தான் குற்றங்கள் அதிகரித்து காவலர்களின் வேலைக்கே மரியாதையில்லாமல் அவர்களே செய்துகொண்டனர்
பாதிக்கப்பட்ட ஆறு பேருக்கும் தலா பத்து லட்சம் ரூபாய் தர வேண்டும் என தீர்ப்பு இல்லை! அந்த பத்து லட்ச ரூபாயை சமமாக பிரித்து பாதிக்கப்பட்ட அந்த ஆறு பேருக்கும் கொடுக்க வேண்டுமாம்! இதற்கு பருத்தி மூட்டை கோடவுன்லயே இருந்திருக்கலாம்...