வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மணல், சவுடு மண் அள்ளுவதை தடுக்க, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர், அரசு துறை அதிகாரிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த மாவட்ட கலெக்டர், அரசு துறை அதிகாரிகள் முதல்வர், துணை முதல்வர் உத்தரவுக்கு செவிமடுப்பார்களே ஒழிய, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டாயம் செவிமடுக்கமாட்டார்கள். இந்திய காலகட்டத்தில் நீதிமன்ற உத்தரவுகளை முதல்வரே மதிப்பதில்லை.
அப்படியே தென்காசி திருநெல்வேலி கன்னியாகுமரி குவாரிகளை முற்றிலும் தடை பண்ணுங்க எசமான் வாரத்துக்கு ஒரு மலை காணாம போகுது .
மணற் கடத்தல், அள்ளுதல் மேலும் கோயில் சிலைகள் கடத்தல் போன்ற குற்றங்கள் அடிக்கடி நடப்பது சம்பந்தப் பட்ட வட்டார அரசு அதிகாரிகளுக்கு தெரியாதா? நீதிமன்றம் நினைவுப் படுத்த வேண்டுமா? நிலையான ஆட்சி நல்லாட்சி என்றால் மட்டும் போதாது நல்லாட்சியை நடைமுறைப் படுத்தவேண்டும். இனிமேலாவது மக்கள் சிந்திக்க தொடங்க வேண்டும்
கடல் மணலை கொண்டு வந்து கொட்டலாமே..
தமிழகத்தில் நீதி மன்றமே ஆட்சி நடத்தலாம் போல..
அரசு அதிகாரிகள் வேலை செய்ய நீதிமன்றம் சென்று ஆணை வாங்கவேண்டியது இருக்கிறது. ஆகவே வேலை செய்யாத அரசு அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுப்பது வீண். நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பலாம். நீதிமன்றத்தின் பெரும்பகுதியும் கூட பொது மக்களுக்கு எதிராகவே தீர்ப்பு சொல்கிறார்கள். அழிவின் விளிம்பில் தமிழகம் சென்று கொண்டு இருப்பது போல தெரிகிறது.
நேர்மையாக இருந்தால் உயிரோடு இருக்க முடியுமா விஏஓ வை பட்டபகலில் அதுவும் அலுவகத்திலேயே முடித்ததை மறந்துவிட்டீரா