உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்தியாளர்களை துன்புறுத்தக் கூடாது: போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு

செய்தியாளர்களை துன்புறுத்தக் கூடாது: போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக பதிவான எப்.ஐ.ஆர்., 'லீக்' ஆனது குறித்த விவகாரத்தில், செய்தியாளர்களை துன்புறுத்தக்கூடாது என போலீசுக்கு உத்தரவிட்டு உள்ள ஐகோர்ட், சராமரியாக கேள்வி எழுப்பி உள்ளது.சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக பதிவான, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை, 'லீக்' ஆனது. இது குறித்து, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அந்த எப்.ஐ.ஆர்., நகலை, சி.சி.டி.என்.எஸ்., எனப்படும் குற்றம் மற்றும் குற்றவாளிகள் வலைப்பின்னல் எனப்படும், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தவர்களுக்கு, 'சம்மன்' அனுப்பி விசாரித்து வருகின்றனர்.அந்த வரிசையில், குற்றங்கள் தொடர்பாக செய்தி சேகரித்து வரும், 'கிரைம்' பிரிவு செய்தியாளர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்களில், மூன்று பேரின் மொபைல் போன்களை பறிமுதல் செய்துஉள்ளனர். இதுதொடர்பாக, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் மற்றும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளிடம், சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vs5izo5d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனை எதிர்த்து செய்தியாளர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட், செய்தியாளர்களை போலீசார் துன்புறுத்தக்கூடாது. அவர்களிடம் பறிமுதல்செய்த மொபைல்போனை திருப்பி ஒப்படைக்க வேண்டும். செய்தியாளர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டதுடன், விசாரணையின்போது குடும்ப விவரங்களை போலீசார் ஏன் கேட்க வேண்டும். ?பத்திரிகையாளர்களுக்கு மூன்று முறை சம்மன் அனுப்பியது ஏன்? எப்ஐஆர் கசிவு தொடர்பாகவேறு யாரை விசாரித்தீர்கள் ? எப்ஐஆர் இணையத்தில் பதிவேற்றம் செய்தது யார்?கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டரை விசாரித்தீர்களா ?அவரது வாக்குமூலம் எங்கே?என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kanns
பிப் 05, 2025 11:21

If Supreme People are Not to be Harassed, Vested-Conspiring& Power Misusing Case Hungry Criminals Investigators-Police Judges Advocates, News Hungry Criminals, Vote Hungry Ruling Party Men esp False Complaint Gangs women, unions /groups, SCs, advocates Must be Harassed/Punished


Padmasridharan
பிப் 04, 2025 18:33

"விசாரணையின்போது குடும்ப விவரங்களை போலீசார் ஏன் கேட்க வேண்டும். ?" இந்த மாதிரிதான் எல்லாரையுமே கேட்கிறார்கள் காவல்துறை. குற்றம் என்ன, அதை பற்றி கேட்காமல் பெயர், விலாசம், மொபைல் நம்பர், பெற்றோர் பெயர் என்று பயமுறுத்துவதற்காக.. சட்டத்தை இவங்க கையில முழுசா எடுத்துக்கிட்டு லஞ்சம் வாங்கும் அதிகார பிச்சைக்காரர்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 04, 2025 20:19

முற்றிலும் சரி ..........


Barakat Ali
பிப் 04, 2025 17:44

ஒரு குற்றத்தை மறைக்கப்போயி என்னென்னவோ வெளியே வருது ........ எப்படியெப்படியோ திசை மாறிப்போச்சு ...... திராவிடியால் மாடல் ரொம்ப டேஞ்சரான, சமூக விரோத, தேச விரோத கொள்கை .....


sankaranarayanan
பிப் 04, 2025 17:17

விசாரணையின்போது குடும்ப விவரங்களை போலீசார் ஏன் கேட்க வேண்டும். ?பத்திரிகையாளர்களுக்கு மூன்று முறை சம்மன் அனுப்பியது ஏன்? எப்ஐஆர் கசிவு தொடர்பாகவேறு யாரை விசாரித்தீர்கள் ? எப்ஐஆர் இணையத்தில் பதிவேற்றம் செய்தது யார்? இன்னும் பல பல கேள்விகளை கேட்பது போலீசு துறை அல்ல அதன்பின் உள்ள உளத்துறை உள்துறை அமைச்சகமும் அதற்கு தலைமை தாங்கும் அமைச்சரும்தான் பொறுப்பு வகிக்கும் அவர் இதுபோன்று விசாரி என்று தூண்டிவிட்டு தான் ஒன்றுமே செய்யாததுபோன்று மவுனமாக இருக்கும் அந்த துறை அமைச்சர் யாராக இருந்தாலும் அவரை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் அரசுக்கே ஒரு எச்சரிக்கை விடவேண்டும் அதுதான் மக்கள் நீதி மன்றத்தினிடம் விரும்புவது


Rathnam Mm
பிப் 04, 2025 16:53

Super


Raja
பிப் 04, 2025 16:45

இந்த விவகாரம் குறித்து சவுக்கு மீடியா திரு. சங்கர் அவர்கள்தான் மிக துணிச்சலாக செய்தி வெளியிட்டார். காவல்துறையின் அராஜக போக்கை தோலுரித்து காட்டினார். எல்லா ஊடகங்களும் வாய் முதற்கொண்டு எல்லாவற்றையும் மூடி கொண்டு இருந்தன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை